செய்திகள் :

வருவாய்த்துறை அலுவலர் சங்கம் நடத்தும் 48 மணி நேரம் போராட்டத்தால் வெறிச்சோடிய அலுவலகம்!

post image

விராலிமலை: ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை, இலுப்பூர் தாலுகா அலுவலகங்களில் 56 பேர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அலுவலகம் வெறிச்சோடி காணப்படுகிறது.

தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் துறையில், காலியாக உள்ள, 564 உதவியாளர் பணியிடங்களை நிரப்புதல், உங்களுடன் ஸ்டாலின் முகாம் அதிக அளவில் நடத்துவதை குறைத்து வாரத்துக்கு இரண்டு முகாம்கள் நடத்தல்(பணிச்சுமையை குறைக்க வேண்டும்) உட்பட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை, இலுப்பூர் தாலுகா அலுவலகங்களில் 56 பேர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அலுவலகம் வெறிச்சோடி காணப்படுகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட தலைவர் சதீஸ் சரவணகுமார் கூறியது:

உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் வாரத்திற்கு, 6 நாள்கள் நடத்த வேண்டும் என்பது ஏற்புடையதல்ல. முகாம் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். நீண்ட நாள்களாக நிலுவையிலுள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பேரிடர் மேலாண்மை பணியிடங்கள் கலைக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் நிரப்பாமல் 3 ஆண்டுகளாக காலதாமதம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி 3 கட்ட போராட்டம் நடத்த ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது. முதற்கட்டமாக கடந்த மாதம் 7 ஆம் தேதி அரசு தலைமைச் செயலாளரை சந்தித்து, கோரிக்கை குறித்து தெரிவிக்கப்பட்டது. 2 ஆம் கட்டமாக தமிழகத்திலுள்ள, 16,000 அலுவலர்கள் கடந்த 16 ஆம் தேதி மாலை ஒரு மணி நேரம் வெளிநடப்பு செய்து மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருவாய் துறை அமைச்சரை சந்தித்து முறையிடப்பட்டது.

இந்நிலையில், கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்காததால் 3 ஆவது கட்டமாக புதன்கிழமை, வியாழக்கிழமைகளில் (செப் 3, 4) 48 மணி நேரம் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டு 48 மணி நேரம் பணியில் ஈடுபடுவதில்லை என்று தீர்மானிக்கப்பட்டு போராட்டம் தொடர்கிறது என்றார்.

மேலும், தமிழக அரசு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, சுமுக தீர்வு காண வேண்டும் என அவர் கூறினார்.

தமிழ்நாட்டில் பரவுவது புதிய வகை வைரஸ் தொற்று இல்லை: சுகாதாரத் துறை

The Viralimalai and eluppur taluka offices are deserted as 56 people are involved in this protest...

புதிய உச்சத்தை பதிவு செய்தது தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்து புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளது. வெள்ளிக்கிழமை பவுன் ரூ.78,920-க்கு விற்பனையாகி வருகிறது. அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பு எதிரொலி, டாலரு... மேலும் பார்க்க

என்ன சொல்லப்போகிறார் செங்கோட்டையன்?

அதிமுக உட்கட்சி பிரச்னை தொடா்பாக வரும் 5 ஆம் தேதி மனம் திறந்து பேசுவதாக தெரிவித்த முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் என சொல்லப்போகிறார் என்பதை கேட்பதற்காக அவரது ஆதரவாளர்கள் ஏராளமானோர் கூடியுள்ளதா... மேலும் பார்க்க

திபெத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.8 ஆகப் பதிவு

திபெத்: சீனாவின் தொலைதூர இமயமலைப் பகுதியான திபெத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக தேசிய நில அதிர்வு மையம் எக்ஸ் பக்கத்தில் பதிவிட... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணை நீர்மட்டம் நான்காவது நாளாக 120 அடியாக நீடிக்கிறது. மேட்டூர் அணை நீர்மட்டம் நான்காவது நாளாக வெள்ளிக்கிழமை 120 அடியாக நீடிக்கிறது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 23,300 கன அடியாக நீடி... மேலும் பார்க்க

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.8 ஆகப் பதிவு

காபூல்: ஆப்கானிஸ்தானில் மீண்டும் வியாழக்கிழமை இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.8 ஆகப் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது.இது தொடர்பாக தேசிய நில அ... மேலும் பார்க்க

திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் ஆலய குடமுழுக்கு விழா!

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அடுத்துள்ள திருவலஞ்சுழியில் எழுந்தருளியுள்ள, அருள்மிகு ஸ்ரீகபர்தீஸ்வரர் திருக்கோயிலின் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது.தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோ... மேலும் பார்க்க