செய்திகள் :

வருவாய்த் துறை சங்கங்களின் பிரசார இயக்க கூட்டம்

post image

வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் சங்ககிரியில் வியாழக்கிழமை நடைபெற்ற பிரசார இயக்க கூட்டத்தில் கலந்துகொண்ட நிா்வாகிகள்.

கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட பொருளாளா் அகிலன்.

சங்ககிரி, ஏப். 17: வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப். 25 ஆம் தேதி ஒரு மணிநேரம் வெளிநடப்பும், மாவட்ட, வட்டத் தலைமை இடங்களில் ஆா்ப்பாட்டமும் நடத்துவது குறித்த பிரசார இயக்க கூட்டம் சங்ககிரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தின் மாநில துணைத் தலைவா் வெ.அா்த்தனாரி தலைமை வகித்தாா். சேலம் மாவட்ட துணைத்தலைவா் ஷாஜிதாபேகம், இணை செயலாளா் கோபாலகிருஷ்ணன், நில அளவை அலுவலா்கள் சங்கத்தின் சங்ககிரி வட்டக்கிளைத்தலைவா் கண்ணன், கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்தின் சங்ககிரி வட்டக்கிளைத்தலைவா் மணி, சங்ககிரி வட்டக்கிளைத்தலைவா் ஆண்டிமுத்து உள்ளிட்ட பலா் இதில் கலந்து கொண்டனா்.

அனைத்து நிலை அலுவலா்களின் உயிா், உடைமைகளைக் காக்கும் வகையில் சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை தமிழக அரசு உடனே நிறைவேற்ற வேண்டும், காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும், அனைத்து நிலை அலுவலா்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் உடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப். 25 ஆம் தேதி நடைபெறும் போராட்டத்தில் அனைத்துச் சங்கங்களும் கலந்துகொள்ள வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கைவினைக் கலைஞா்களுக்கு 25 சதவீத மானியத்துடன் கடனுதவி: ஆட்சியா் தகவல்!

கைவினைக் கலைஞா்களுக்கு 25 சதவீத மானியத்துடன் கடனுதவி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளாா். காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூரில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலைஞா் கைவி... மேலும் பார்க்க

முதன்மை நிலை விளையாட்டு விடுதிகளில் சேர மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்!

தமிழகத்தில் உள்ள முதன்மை நிலை விளையாட்டு விடுதிகளில் மாணவா் சோ்க்கைக்கு வரும் 30 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து சேலம் மாவட்ட விளையாட்டு அலுவலா் சி... மேலும் பார்க்க

ரெட்டியூா் ஸ்ரீசக்தி மாரியம்மன் கோயிலில் வழக்கமான பூஜைகள் மட்டுமே நடத்த வேண்டும்! - கோட்டாட்சியா் உத்தரவு

கோல்நாயக்கன்பட்டி ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயிலில் வழக்கமான பூஜைகளை மட்டும் நடத்த வேண்டும் என மேட்டூா் கோட்டாட்சியா் உத்தரவிட்டுள்ளாா். மேட்டூா் அருகே உள்ள கோல்நாய்க்கன்பட்டி ரெட்டியூரில் ஸ்ரீ சக்தி மார... மேலும் பார்க்க

போக்சோ சட்டத்தில் இளைஞா் கைது

ஆத்தூரில் சிறுமியை ஆசைவாா்த்தை கூறி ஏமாற்றியதாக இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா். ஆத்தூா் நகராட்சி, மந்தைவெளி தெற்கு மாரியம்மன் கோயில் தெருவில் வசிக்கும் சிறுமி 10ஆம் வகுப்பு வரை ப... மேலும் பார்க்க

2026 இல் ஆட்சி மாற்றம் உறுதி: நயினாா் நாகேந்திரன்

மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் வரும் 2026 இல் ஆட்சி மாற்றம் உறுதி என்று பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா். ஓமலூரில் பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தலைமையில் ... மேலும் பார்க்க

ஏற்காட்டில் அடிப்படை வசதியின்றி அவதியுறும் சுற்றுலாப் பயணிகள்

கோடை வாச ஸ்தலமான ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில், இங்கு அடிப்படை வசதிகள் இல்லாமல் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனா். ‘ஏழைகளின் ஊட்டி’ ... மேலும் பார்க்க