செய்திகள் :

வறுமைக் கோட்டுக்குக் கீழ் 44% பாகிஸ்தானியர்கள்!

post image

பாகிஸ்தானில் ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

சர்வதேச வறுமைக் கோடு குறித்த தகவலை உலக வங்கி வெளியிட்டுள்ளது. வாங்கும் சக்தி நிலையை (Purchasing power parity) அடிப்படையாகக் கொண்டு, வறுமைக் கோடு அளவிடப்படுகிறது. அந்த வகையில், பாகிஸ்தானில் 44.7 சதவிகித மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளதாகக் கூறுகிறது.

தற்போதைய கணக்கெடுப்பின்படி, பாகிஸ்தானில் நாளொன்றுக்கு ரூ. 688 சம்பளம் வாங்குவோர்தான் உயர்ந்த மற்றும் நடுத்தர வர்க்கமாகக் கொள்ளப்படுகின்றனர்.

ஆனால், அந்நாட்டில் 44 சதவிகித மக்கள் (சுமார் 10 கோடி பேர்) நாளொன்றுக்கு ரூ. 350 முதல் ரூ. 361 வரையில் சம்பளம் வாங்குகின்றனர். இவர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளனர்.

இந்த நிலைக்கும் தாழ்வாக, நாளொன்றுக்கு ரூ. 258 சம்பளம் வாங்குவோரும் உள்ளதாகவும், இவர்களின் எண்ணிக்கை 2 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் உலக வங்கி கூறுகிறது.

உணவுகூட வேண்டாம், நாப்கின் தேவை: காஸாவில் பெண்கள், சிறுமிகளின் அவல நிலை!

காஸா போரினால் ஒருபுறம் மக்கள் உணவின்றித் தவித்துவரும் நிலையில், மறுபுறம் பெண்கள், சிறுமிகள் சுகாதாரமின்றி மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். கடந்த 2023 அக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேல் - பாலஸ்தீனம் இ... மேலும் பார்க்க

பக்ரீத் அன்றும் காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: 34 பேர் பலி!

காஸா மீது இஸ்ரேல் இன்று(சனிக்கிழமை) நடத்திய வான்வழித் தாக்குதலில் 34 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 2023 அக்டோபர் முதல் இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே போர் தொடர்ந்து நடந்து வருகிறது. இடையில் போர் நிறுத்தம் ... மேலும் பார்க்க

உக்ரைனில் 200 ட்ரோன்கள், ஏவுகணைகளால் ரஷியா தீவிர தாக்குதல்!

கீவ்: உக்ரைனில் 2022-ஆம் ஆண்டு போா் தொடங்கியதற்குப் பிறகு இதுவரை இல்லாத அளவுக்கு தீவிர வான்வழித் தாக்குதல் ரஷியாவால் நிகழ்த்தப்பட்டுள்ளது.உக்ரைனில் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் நகரில் வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க

டிரம்ப் மீதான பாலியல் குற்றச்சாட்டு பதிவு நீக்கம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீதான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான பதிவை எலான் மஸ்க் நீக்கியுள்ளார்.அமெரிக்க அரசு கொண்டு வந்த வரி மற்றும் செலவு மசோதாவால், அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கும் ... மேலும் பார்க்க

அமெரிக்கா - சீனா வர்த்தக ஒப்பந்தம்! டிரம்ப் உறுதி

சீனாவுடன் அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதி செய்தார்.அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக டிரம்ப் பதவியேற்ற பிறகு, சீனா உள்பட பல்வேறு நாட... மேலும் பார்க்க

ஏப்ரலில் வங்கதேச தோ்தல்!

வங்கதேச நாடாளுமன்றத் தோ்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறும் என அந்நாட்டு இடைக்கால அரசின் தலைவா் முகமது யூனுஸ் வெள்ளிக்கிழமை அறிவித்தாா். நிகழாண்டு டிசம்பா் இறுதிக்குள் நாடாளுமன்றத் தோ்தலை நடத்தக... மேலும் பார்க்க