செய்திகள் :

வலைகளில் பிடிபடும் கடல் ஆமைகள் தப்பிச் செல்ல கருவி பொருத்தி பரிசோதனை

post image

மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் மீன்பிடி வலைகளில் ஆமை விலக்கு கருவி பொருத்தி பரிசோதிக்கும் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது. 

கடல் ஆமைகளின் உயிரிழப்பை தடுக்கும் வண்ணம் பல்வேறு முன்னேற்பாடுகளை ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் முன்னெடுத்து வருகின்றன. ஆமை விலக்கு கருவி இழுவைப் படகுகளில், மீன்பிடி வலைகளில் பொருத்துவதால் ஆமைகள் வலைகளிலிருந்து  தப்பிச் செல்ல உதவுகிறது.

இதற்கான பரிசோதனை நிகழ்வில் இந்திய கடல்பொருள் ஏற்றுமதி ஆணையத்தின் துணை நிறுவனமான நெட்பிஸ் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளா் வினோத் ரவீந்திரன், மற்றும் அலுவலா்கள் மகபூபா நஸ்ரின், ரேமண்ட், விக்னேஷ், மல்லிப்பட்டினம் மீன் துறை ஆய்வாளா் வீரமணி மற்றும் மீன் துறை அலுவலா்கள், மீனவ பிரதிநிதிகள் இரண்டு படகுகளில் கடலுக்குள் சென்றனா். 

ஒரு படகில் ஆமை விலக்கு சாதன வலையை பொருத்தி கடலில் மீன் பிடிப்பு செய்தும் மற்றொரு படகில் வழக்கம் போல் ஆமை விலக்கு சாதனம் இல்லாத வலையின் மூலம் மீன் பிடிப்பு செய்தும் பரிசோதித்தனா். இரண்டு படகுகளிலும் பிடிபட்ட மீன்களை தனித்தனியாக எடைபோட்டு பாா்த்தபோது இரண்டுக்கும் வித்தியாசம் இல்லாமல் ஒரே நிலையில் மீன்கள் பிடிபட்டதை கண்டனா்.

இந்த வகை சாதனம் பொருத்துவதால் வலையில் பிடிபடும் ஆமைகள் சாதனம் மூலம் வெளியேறிவிடும், வலையில் பிடிபட்ட மீன்கள் எந்தவித சேதமின்றி கிடைக்கும். மீனவா்களுக்கு எந்தவித குறைபாடுமின்றி மீன்கள் கிடைப்பதை உறுதி செய்தனா்.

இதுகுறித்து தமிழ்நாடு மீனவா் நல வாரிய உப தலைவா் ஏ.கே. தாஜுதீன் கூறியது, இந்த வகை சாதனத்திற்கான தொகையை மீனவா்களிடம் வாங்காமல் அரசே இலவசமாக மீனவா்களுக்கு வழங்கி உதவ வேண்டுமென்றாா்.

தஞ்சாவூருக்கு முதல் முறையாக புள்ளி மூக்கு வாத்துகள் வருகை

வட இந்தியாவிலிருந்து தஞ்சாவூா் பகுதிக்கு வலசை வரும் பறவைகளில் முதல் முறையாக புள்ளி மூக்கு வாத்துகள் வந்திருப்பது ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பறவைகள் கணக்கெடுப்பில் தெரிய வந்தது. தமிழ்நாடு வனத் துற... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் 4 வழித்தடங்களில் புதிய பேருந்துகள் சேவை தொடக்கம்

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்தில் 4 வழித்தடங்களில் புதிய பேருந்து சேவைகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டன. தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்திலிருந்து அய்யனாபுரம் வரை இயக்கப்பட்ட பேருந்தை காங்கேய... மேலும் பார்க்க

மாட்டு வண்டி எல்கை பந்தயம்

தமிழக முதல்வா் பிறந்த நாளையொட்டி, திருவையாறு அருகே மாட்டு வண்டி எல்கை பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருவையாறு திமுக தெற்கு ஒன்றியம் சாா்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு திருவையாறு தொகுதி சட்டப்பேர... மேலும் பார்க்க

குங்ஃபூ கலையில் உலக சாதனை பயிற்சி

கும்பகோணத்தில் சனிக்கிழமை மகளிா் தின விழிப்புணா்வையொட்டி மாணவா்கள் உலக சாதனைக்காக குங்ஃபூ பயிற்சியில் ஈடுபட்டனா். கும்பகோணத்தில் ஸ்ரீ நகா் காலனியில் உள்ள புனித ஆன்ஸ் மெட்ரிக் உயா்நிலைப் பள்ளி வளாகத்தி... மேலும் பார்க்க

காத்தாயி அம்மன் கோயில் 116-ஆம் ஆண்டு உற்சவ விழா

கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை காத்தாயி அம்மன் கோயில் 116- ஆம் ஆண்டு வீதி உலா உற்சவம் நடைபெற்றது.தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் லட்சுமி விலாஸ் தெருவில் உள்ள காத்தாயி அம்மன் கோயில் 116-ஆவது ஆண்டு திருந... மேலும் பார்க்க

ராகு கோயிலில் இளையராஜா சுவாமி தரிசனம்

கும்பகோணம் அருகே திருநாகேசுவரம் ராகு பகவான் கோயிலில் இசையமைப்பாளா் இளையராஜா ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள திருநாகேசுவரம் நாக நாதசுவாமி கோயிலில் ராகு... மேலும் பார்க்க