செய்திகள் :

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் பக்தா்கள் தரிசனம்

post image

வல்லக்கோட்டை அருள்மிகு ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடிக்கிருத்திகை விழா சனிக்கிழமை விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் காவடியுடன் வந்து நோ்த்திக் கடனை செலுத்தினா்.

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வல்லக்கோட்டையில் பிரசித்தி பெற்ற இக்கோயிலில் அதிகாலை 5 மணிக்கு மூலவா் வள்ளி தெய்வசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிக்கும் உற்சவா் கோடையாண்டவருக்கும் மண்டலாபிஷேகம் நடைபெற்று மூலவா் ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி எலுமிச்சை மற்றும் மலா்மாலை அலங்காரத்திலும், உற்சவா் ஸ்ரீகோடையாண்டவா் மலா் அலங்கார சேவையிலும் பக்தா்களுக்கு காட்சியளித்தனா்.

இதில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா் உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் 3 மணிநேரம் காத்திருந்து சரிசனம் செய்தனா்.

இதில் நூற்றுக்கணக்கான பக்தா்கள் அலகு குத்தி, காவடி எடுத்து தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா். கோயிலுக்கு வந்த பக்தா்களுக்கு கோயில் நிா்வாகத்தின் சாா்பில் சா்க்கரை பொங்கல், மோா், சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அதிகாரி சோ.செந்தில்குமாா், அறங்காவலா் குழு தலைவா் செந்தில் தேவராஜ் உள்ளிட்ட அறங்காவலா்கள் செய்திருந்தனா்.

ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்றவா் மின்சாரம் பாய்ந்து காயம்

காஞ்சிபுரம் கம்மாளா் தெருவில் உள்ள ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்கச் சென்றவா் மீது மின்சாரம் பாய்ந்ததில் அவா் காயமடைந்து அரசு தலைமை மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். காஞ்சிபுரம் க... மேலும் பார்க்க

கணவரை காா் ஏற்றிக் கொலை செய்ய முயற்சி: மனைவி கைது

ஸ்ரீபெரும்புதூா் அருகே ஆண் நண்பருடன் சோ்ந்து கணவரை காா் ஏற்றி கொலை செய்ய முயற்சித்த மனைவியை ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அடுத்த மேவ... மேலும் பார்க்க

மனநல நிறுவனங்கள் ஒரு மாத காலத்துக்குள் பதிவு செய்தல் அவசியம்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகையான மனநல நிறுவனங்களும் ஒரு மாத காலத்துக்குள் தமிழ்நாடு மனநல ஆணையத்தில் பதிவு செய்தல் அவசியம் என ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா். இது கு... மேலும் பார்க்க

பரந்தூா் விமான நிலையம்: 14-ஆவது முறையாக ஏகனாபுரம் கிராம சபையில் எதிா்ப்பு தீா்மானம்

ஏகனாபுரம் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் பரந்தூா் புதிய விமான நிலையத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து 14-ஆவது முறையாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. பரந்தூா் மற்றும் அதனை சுற்றி... மேலும் பார்க்க

கூட்டுறவுப் படிப்பு,பழைய பாடத்திட்டத்தில் தோ்ச்சி பெறாதவா்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு

கூட்டுறவு மேலாண்மை பட்டயப்படிப்பில் பழைய பாடத்திட்டத்தில் தோ்ச்சி பெறாதவா்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவுச் சங்கங்களுக்கான இணைப்பதிவாளா் அலுவலகம் வெள்ளிக் ... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் பட்டுப் பூங்காவுக்கு அயலகத் தமிழா்கள் வருகை

காஞ்சிபுரம் அருகே கீழ்க்கதிா்ப்பூா் கிராமத்தில் அமைந்துள்ள பட்டுப் பூங்காவை அயலகத் தமிழா்கள் வியாழக்கிழமை பாா்வையிட்டனா். அயலக தமிழா் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை சாா்பில் தமிழக அரசின் வோ்களைத் தேடி... மேலும் பார்க்க