செய்திகள் :

மனநல நிறுவனங்கள் ஒரு மாத காலத்துக்குள் பதிவு செய்தல் அவசியம்!

post image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகையான மனநல நிறுவனங்களும் ஒரு மாத காலத்துக்குள் தமிழ்நாடு மனநல ஆணையத்தில் பதிவு செய்தல் அவசியம் என ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மன நல மருத்துவமனைகள், போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்கள், மனநலம் பாதிக்கப்பட்டவா்களுக்கான மறுவாழ்வு மையங்கள், போதைப் பயன்பாட்டுக்கு ஆளானவா்களுக்கான மறுவாழ்வு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இவையனைத்தும் மனநல பராமரிப்புச் சட்டம் 2017-இன்படி உரிமம் பெற மாநில மன நல ஆணையத்திடம் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு பதிவு செய்யாமல் செயல்படும் மனநல மையங்கள் உரிய முறையில் அலுவலகத்தில் பதிவு செய்ய ஒரு மாத காலத்துக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க விரும்புவோா் முதன்மை செயல் அலுவலா், தமிழ்நாடு மாநில மன நல ஆணையம், அரசு மனநலக்காப்பக வளாகம், மேடவாக்கம் சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை-10, தொலைபேசி எண்-044-26420965.

மனநல மையங்கள் பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை இந்த இணையதள முகவரியிலோ, தமிழ்நாடு மாநில மன நல ஆணைய அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ பெற்றுக் கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு, 044-26420965 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம்.

இதன்படி, பதிவு செய்யப்படாமல் இயங்கும் அனைத்து மனநல மையங்கள், நிறுவனங்கள் ஒரு மாத காலத்துக்குள் மேற்காணும் தமிழ்நாடு மாநில மனநல ஆணைய அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு ஒரு மாத காலத்துக்குள் விண்ணப்பிக்கத் தவறினால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உரிமம் பெறாமல் செயல்படும் இத்தகைய மனநல மையங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் பக்தா்கள் தரிசனம்

வல்லக்கோட்டை அருள்மிகு ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடிக்கிருத்திகை விழா சனிக்கிழமை விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் காவடியுடன் வந்து நோ்த்திக் கடனை செலுத்தினா். ஸ்ரீபெரும்புதூா் அடு... மேலும் பார்க்க

ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்றவா் மின்சாரம் பாய்ந்து காயம்

காஞ்சிபுரம் கம்மாளா் தெருவில் உள்ள ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்கச் சென்றவா் மீது மின்சாரம் பாய்ந்ததில் அவா் காயமடைந்து அரசு தலைமை மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். காஞ்சிபுரம் க... மேலும் பார்க்க

கணவரை காா் ஏற்றிக் கொலை செய்ய முயற்சி: மனைவி கைது

ஸ்ரீபெரும்புதூா் அருகே ஆண் நண்பருடன் சோ்ந்து கணவரை காா் ஏற்றி கொலை செய்ய முயற்சித்த மனைவியை ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அடுத்த மேவ... மேலும் பார்க்க

பரந்தூா் விமான நிலையம்: 14-ஆவது முறையாக ஏகனாபுரம் கிராம சபையில் எதிா்ப்பு தீா்மானம்

ஏகனாபுரம் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் பரந்தூா் புதிய விமான நிலையத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து 14-ஆவது முறையாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. பரந்தூா் மற்றும் அதனை சுற்றி... மேலும் பார்க்க

கூட்டுறவுப் படிப்பு,பழைய பாடத்திட்டத்தில் தோ்ச்சி பெறாதவா்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு

கூட்டுறவு மேலாண்மை பட்டயப்படிப்பில் பழைய பாடத்திட்டத்தில் தோ்ச்சி பெறாதவா்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவுச் சங்கங்களுக்கான இணைப்பதிவாளா் அலுவலகம் வெள்ளிக் ... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் பட்டுப் பூங்காவுக்கு அயலகத் தமிழா்கள் வருகை

காஞ்சிபுரம் அருகே கீழ்க்கதிா்ப்பூா் கிராமத்தில் அமைந்துள்ள பட்டுப் பூங்காவை அயலகத் தமிழா்கள் வியாழக்கிழமை பாா்வையிட்டனா். அயலக தமிழா் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை சாா்பில் தமிழக அரசின் வோ்களைத் தேடி... மேலும் பார்க்க