செய்திகள் :

`இதை படிக்கும்போது நான் உயிரோடு இருக்கமாட்டேன்’ ஓராண்டாக திட்டமிட்டு மாணவர் தற்கொலை - பின்னணி என்ன?

post image

டெல்லி அருகில் இருக்கும் நொய்டாவில் உள்ள சாரதா பல்கலைகழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்தவர் சிவம். இவர் அங்குள்ள விடுதியில் தங்கி படித்து வந்தார். ஆனால் அதிக நாள்களாக வகுப்புக்கு செல்லவில்லை. ஆனால் விடுதியில் தங்கி இருந்தார். அவர் தனது விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலைக்கு முன்பு அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். அக்கடிதத்தில் தனது தற்கொலைக்கு யாரும் காரணம் கிடையாது. தனிப்பட்ட காரணங்களால் இம்முடிவை எடுத்திருப்பதாகவும், இக்கடிதத்தை படிக்கும்போது நான் உயிரோடு இருக்கமாட்டேன். கடந்த ஒரு ஆண்டாக திட்டமிட்டு இம்முடிவை எடுத்திருக்கிறேன்.

நான் இரண்டு ஆண்டுகளாக வகுப்புக்கு செல்லவில்லை. எனவே பல்கலைக்கழக நிர்வாகம் எனது இரண்டு ஆண்டுக்கான கட்டணத்தை எனது பெற்றோரிடம் திரும்ப கொடுக்கவேண்டும். எனது உடல் உறுப்புகளை தானம் செய்ய விரும்புகிறேன். இந்திய கல்வி முறையை நினைத்து கவலையாக இருக்கிறது. நாடு பெரிய அளவில் வளர்ச்சியடைய வேண்டுமானால் முதலில் கல்வி முறையில் திருத்தம் செய்யவேண்டும்''என்று குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு ஆண்டுகளாக தங்களது மகன் வகுப்புக்கு வராதது குறித்து பல்கலைக்கழக நிர்வாகம் தங்களுக்கு எந்த வித தகவலும் கொடுக்கவில்லை என்று மாணவனின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இத்தற்கொலை குறித்து அனைத்து கோணத்திலும் விசாரித்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர். கடந்த மாதம் இதே பல்கலைக்கழகத்தில் பல் மருத்துவம் படித்து வந்த மாணவி விடுதியில் தற்கொலை செய்துகொண்டார். தனது தற்கொலைக்கு பல்கலைக்கழக ஊழியர்கள் தன்னை அவமானப்படுத்தியதாக கடிதம் எழுதி வைத்திருந்தார். இதையடுத்து நடந்த போராட்டத்தை தொடர்ந்து பேராசிரியர் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

மதுரை: கணவரை இழந்த பெண்; காதலித்து மணந்து கொண்ட இளைஞரை கொடூரமாக கார் ஏற்றி கொன்ற உறவினர்கள்

கணவரை இழந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்ட இளைஞரை பெண்ணின் உறவினர்கள் கொடூரமாக கொலை செய்த சம்பவம் மதுரை மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலைகணவரை இழந்த பெண்ணுடன் காதல்மேலூர் அருகே ப... மேலும் பார்க்க

டெல்லி: 65 வயது தாயை பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய மகன் - கொடூர சம்பவத்தின் பின்னணி என்ன?

டெல்லியை சேர்ந்த 39 வயது நபர் அவது தாயை இரண்டு முறை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளார். தாயின் முந்தைய கால உறவுக்காக தண்டிக்கும் விதமாக இவ்வாறு செய்ததாகத் தெரிவித்துள்ளார்.காவல்துறைய... மேலும் பார்க்க

வேண்டப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு உணவோடு கஞ்சா சட்னி சப்ளை; உத்தரப்பிரதேசத்தில் கடை உரிமையாளர் கைது

உணவில் எத்தனையோ விதமான புதிய வகைகளை அறிமுகம் செய்து வாடிக்கையாளர்களை உரிமையாளர்கள் கவர்வது வழக்கம். ஆனால் உத்தரப்பிரதேசத்தில் ஒரு உணவக உரிமையாளர் வாடிக்கையாளர்களை கவர சாப்பாட்டில் கஞ்சாவைக் கலந்துகொடு... மேலும் பார்க்க

புதுச்சேரி: தடையை மீறி கடலில் குளித்ததால் நேர்ந்த சோகம்; இளம்பெண் உட்பட 3 ஐ.டி ஊழியர்கள் உயிரிழப்பு

79-வது சுதந்திர தின விடுமுறையை தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் புதுச்சேர... மேலும் பார்க்க

மும்பை: 'போலி தாடி, ஆண் வேடம், பாத்ரூம்' - சகோதரி வீட்டில் ரூ.1.5 கோடி நகைகளைத் திருடிய பெண் கைது

குஜராத் மாநிலம் நவ்சாரியைச் சேர்ந்தவர் ஜோதி பனுசாலி (27). இவரது சகோதரி நிஷா மும்பையில் உள்ள வசாய் என்ற இடத்தில் வசித்து வருகிறார். பனுசாலியின் சகோதரி நிஷா தனது வீட்டில் இருந்து வெளியில் சென்று இருந்தா... மேலும் பார்க்க

தர்மஸ்தலா: "என் கையால் 80 உடல்களைப் புதைத்தேன்" - கோயில் முன்னாள் ஊழியர் பரபரப்பு தகவல்

கர்நாடகா மாநிலம், பெல்தங்கடி பகுதியில் அமைந்துள்ள தர்மஸ்தலா என்ற கோவிலில் நூற்றுக்கும் மேலான உடல்கள் கொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டிருக்கும் தகவல் சமீபத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.அந்த... மேலும் பார்க்க