செய்திகள் :

மதுரை: கணவரை இழந்த பெண்; காதலித்து மணந்து கொண்ட இளைஞரை கொடூரமாக கார் ஏற்றி கொன்ற உறவினர்கள்

post image

கணவரை இழந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்ட இளைஞரை பெண்ணின் உறவினர்கள் கொடூரமாக கொலை செய்த சம்பவம் மதுரை மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 கொலை
கொலை

கணவரை இழந்த பெண்ணுடன் காதல்

மேலூர் அருகே பூதமங்கலம் பொட்டப்பட்டியை சேர்ந்த 21 வயது சதீஷ்குமார் கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். அப்போது தும்பப்பட்டியைச் சேர்ந்த கணவரை இழந்த ராகவி என்பவருடன் காதல் ஏற்பட்டுள்ளது. குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி வீட்டிலிருந்து வெளியேறி திருமணம் செய்து திருச்சியில் வசித்து வந்துள்ளனர்.

இதனால் கடும் ஆத்திரத்தில் இருந்த ராகவியின் பெற்றோர், வீட்டிலிருந்த நகைகளை ராகவி திருடிச் சென்றதாக போலீஸில் புகார் செய்துள்ளார். இதனால், பிரச்னை வேண்டாமென்று ராகவியை அவர் பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு, வெளியூரில் வேலை செய்து வந்துள்ளார் சதீஷகுமார்.

`என்னை கொன்று விடுவார்கள்’

உறவினர்களின் தொடர் கண்காணிப்பில் வீட்டிற்குள் அடைத்து வைக்கப்பட்ட ராகவி, ஒரு சந்தர்ப்பத்தில் 'என்னை கொன்று விடுவார்கள், வந்து மீட்டுச்செல்' என்று மொபைல் மூலம் சதீஸ்குமாருக்கு தெரிவித்திருக்கிறார். அதோடு கடந்த 16 ஆம் தேதி ஊருக்கு வந்த சதீஸ்குமார் ராகவியை அவர் வீட்டிலிருந்து மீட்டு, கொட்டாம்பட்டி காவல் நிலையத்துக்கு சென்று தங்களை சேர்த்து வைக்கும்படி கேட்டுள்ளனர்.

அதோடு ராகவியின் சகோதரர் ராகுல் உட்பட உறவினர்களை அழைத்து இரவு 12 மணிவரை பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையினர், மறுநாள் விசாரணைக்கு வருமாறு இருதரப்பிடமும் சொல்லி அனுப்பியுள்ளனர்.

MURDER

ராகவியுடன் சதீஸ்குமார் டூவீலரில் கிளம்பிச் சென்றபோது பின் தொடர்ந்து காரில் வந்த ராகவியின் சகோதரர் ராகுலும் உறவினர்களும், அய்யாபட்டி அருகே டூவீலர் மீது இடித்துள்ளனர். அதில் இருவரும் நிலை தடுமாறி சாலையில் விழ, சதீஸ்குமாரை கடுமையாக தாக்கிவிட்டு சென்றுள்ளனர். காயமைடந்து கிடந்த ராகவி, காவல்துறைக்கு போன் செய்தபின் கொட்டாம்பட்டி காவல்துறையினர் வந்து மீட்டுள்ளனர்.

சதீஸ்குமார் இறந்துவிட, ராகவி மருத்துவ சிகிச்சையில் உள்ளார். அவரின் புகாரின்பேரில் சகோதரர் ராகுல் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் குற்றவாளிகளை தேடி வருகின்றனர. இந்த சம்பவம் மேலூர் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

`இதை படிக்கும்போது நான் உயிரோடு இருக்கமாட்டேன்’ ஓராண்டாக திட்டமிட்டு மாணவர் தற்கொலை - பின்னணி என்ன?

டெல்லி அருகில் இருக்கும் நொய்டாவில் உள்ள சாரதா பல்கலைகழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்தவர் சிவம். இவர் அங்குள்ள விடுதியில் தங்கி படித்து வந்தார். ஆனால் அதிக நாள்களாக வகுப்புக்கு செல்லவில்லை. ... மேலும் பார்க்க

டெல்லி: 65 வயது தாயை பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய மகன் - கொடூர சம்பவத்தின் பின்னணி என்ன?

டெல்லியை சேர்ந்த 39 வயது நபர் அவது தாயை இரண்டு முறை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளார். தாயின் முந்தைய கால உறவுக்காக தண்டிக்கும் விதமாக இவ்வாறு செய்ததாகத் தெரிவித்துள்ளார்.காவல்துறைய... மேலும் பார்க்க

வேண்டப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு உணவோடு கஞ்சா சட்னி சப்ளை; உத்தரப்பிரதேசத்தில் கடை உரிமையாளர் கைது

உணவில் எத்தனையோ விதமான புதிய வகைகளை அறிமுகம் செய்து வாடிக்கையாளர்களை உரிமையாளர்கள் கவர்வது வழக்கம். ஆனால் உத்தரப்பிரதேசத்தில் ஒரு உணவக உரிமையாளர் வாடிக்கையாளர்களை கவர சாப்பாட்டில் கஞ்சாவைக் கலந்துகொடு... மேலும் பார்க்க

புதுச்சேரி: தடையை மீறி கடலில் குளித்ததால் நேர்ந்த சோகம்; இளம்பெண் உட்பட 3 ஐ.டி ஊழியர்கள் உயிரிழப்பு

79-வது சுதந்திர தின விடுமுறையை தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் புதுச்சேர... மேலும் பார்க்க

மும்பை: 'போலி தாடி, ஆண் வேடம், பாத்ரூம்' - சகோதரி வீட்டில் ரூ.1.5 கோடி நகைகளைத் திருடிய பெண் கைது

குஜராத் மாநிலம் நவ்சாரியைச் சேர்ந்தவர் ஜோதி பனுசாலி (27). இவரது சகோதரி நிஷா மும்பையில் உள்ள வசாய் என்ற இடத்தில் வசித்து வருகிறார். பனுசாலியின் சகோதரி நிஷா தனது வீட்டில் இருந்து வெளியில் சென்று இருந்தா... மேலும் பார்க்க

தர்மஸ்தலா: "என் கையால் 80 உடல்களைப் புதைத்தேன்" - கோயில் முன்னாள் ஊழியர் பரபரப்பு தகவல்

கர்நாடகா மாநிலம், பெல்தங்கடி பகுதியில் அமைந்துள்ள தர்மஸ்தலா என்ற கோவிலில் நூற்றுக்கும் மேலான உடல்கள் கொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டிருக்கும் தகவல் சமீபத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.அந்த... மேலும் பார்க்க