செய்திகள் :

இன்றைய தங்கம் விலை நிலவரம்!

post image

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஆக. 18), மாற்றமின்றி விற்பனையாகிறது.

சென்ற வாரம் தொடக்கம் முதலே தங்கம் விலை படிப்படியாக குறைந்து வந்தது. கடந்த ஆக. 11-இல் சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.75,000-க்கும், ஆக. 12-இல் சவரனுக்கு ரூ.640 குறைந்து ரூ.74,360-க்கும், ஆக. 13-இல் சவரனுக்கு ரூ. 40 குறைந்து ரூ.74,320-க்கும், ஆக. 14-இல் விலை மாற்றமின்றி சவரன் ரூ.74,320-க்கும், ஆக. 15-இல் சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.74,240-க்கும் விற்பனையானது.

அதைத் தொடர்ந்து வாரத்தின் இறுதி நாளான சனிக்கிழமை தங்கம் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.9,275-க்கும், சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.74,200-க்கும் விற்பனையானது.

இதன் மூலம் சென்ற வாரத்தில் மட்டும் தங்கம் விலையானது, சவரனுக்கு ரூ.1,360 வரை குறைந்து விற்பனையானது.

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று(ஆக. 18) மாற்றமின்றி கிராம் ரூ.9,275-க்கும், சவரன் ரூ.74,200-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையிலும் மாற்றமின்றி கிராம் ரூ.127- க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.1.27 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிக்க: தேர்தல் அரசியல் போர் உத்தியில் வெல்வோம்: விஜய்

The price of gold jewelry in Chennai is unchanged today (Aug. 18).

ரஜினிகாந்துடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு!

நடிகர் ரஜினிகாந்தை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்துப் பேசியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் திரைத்துறைக்கு வந்து 50 ஆண்டுகள் ஆனதையொட்டி பலரும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். அந்... மேலும் பார்க்க

ராமதாஸும் அன்புமணியும் நாடகமாடுகிறார்கள்: காடுவெட்டி குரு மகள்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸும் அன்புமணியும் நாடகமாடுகிறார்கள் என்று காடுவெட்டி குரு மகள் விருதாம்பிகை குற்றம்சாட்டியிருக்கிறார்.பாமகவில் நிறுவனருக்கும், தலைவருக்கும் இடையே மோதல் வெடித்து தனித்தனியாக ... மேலும் பார்க்க

ஐ. பெரியசாமி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு: இடைக்காலத் தடை விதித்த உச்சநீதிமன்றம்!

சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ. பெரியசாமி விடுவிப்பை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான வீட்... மேலும் பார்க்க

மண் அள்ளியதாகப் புகார்: இளைஞர் மண்வெட்டியால் அடித்துக் கொலை!

வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே இரவில் டிராக்டர்களில் மண் அள்ளப்படுவதாக எழுந்த புகார் தொடர்பாக, காவல்துறைக்கு புகார் கொடுத்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், இளைஞர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை இரவு... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஸ்டாலினிடம் ஆதரவு கோரினார் ராஜ்நாத் சிங்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு கோரி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் ச... மேலும் பார்க்க

தேர்தல் அரசியல் போர் உத்தியில் வெல்வோம்: விஜய்

தேர்தல் அரசியல் போர் உத்தியில் வெல்வோம் என்று தவெக தலைவர் விஜய் தனது தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு ஆக. 21ஆம் தேதி நடைபெறும் என அ... மேலும் பார்க்க