செய்திகள் :

சிசிடிவி காட்சிகள்: தேர்தல் ஆணைய பதிலுக்கு பிரகாஷ் ராஜ் கேள்வி

post image

பெண்களின் தனியுரிமை பாதிக்கப்படும் என்று கூறி, வாக்குச்சாவடியில் பதிவு செய்யப்பட்ட விடியோக்களை வெளியிட வேண்டுமா? என்று தேர்தல் ஆணையம் எழுப்பியிருந்த கேள்விக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் கண்டனம் தெரிவித்து பதிவிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

வாக்குத் திருட்டு தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தின் பதிலை டேக் செய்து, மூத்த நடிகர் பிரகாஷ் ராஜ் மீண்டும் ஒரு கடுமையான கருத்தை பதிவிட்டுள்ளார்.

வாக்குச் சாவடிகளுக்குள் வைக்கப்பட்ட சிசிடிவி கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட விடியோவை வெளியிடும் விவகாரம் குறித்து பெண்களின் தனியுரிமை என்பது போல பேசியிருக்கும் தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாட்டை அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

பிரகாஷ் ராஜ் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், சிசிடிவி கேமராக்களை நிறுவுவதற்கு முன்பு நீங்கள் பெண்களிடம் அனுமதி பெற்றீர்களா? ஒரு வாக்குச் சாவடி என்பது உடை மாற்றும் அறை இல்லை. நீங்கள் அளிக்கும் வசதியான சாக்குபோக்குகள் எங்களுக்குத் தேவையில்லை, எங்களுக்குத் தேவை வெளிப்படைத்தன்மை என்று பதிவிட்டுள்ளார். இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பேசி, ஏஎன்ஐ எக்ஸ் பக்கத்தில் வெளியான டிவீட்டை அவர் மேற்கோள்காட்டி பதிவிட்டுள்ளார்.

அதாவது, வாக்குச்சாவடி சிசிடிவி காட்சிகளை வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வைத்தக் கோரிக்கைக்கு தேர்தல் ஆணையம் பதிலளித்த போது, பெண்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக, சிசிடிவி காட்சிகளைப் பகிர முடியாது என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் கூறியிருந்தார்.

இதற்குதான், சிசிடிவி கேமரா வைப்பதற்கு முன்பு பெண்களின் ஒப்புதல் பெறப்பட்டதா? என்று பிரகாஷ் ராஜ் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

ஏற்கனவே, வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாக, காங்கிரஸ் எம்.பி. ராகுல் குற்றம்சாட்டியிருக்கும் நிலையில், சிசிடிவி கேமரா காட்சிகளை வெளியிட தேர்தல் ஆணையம் மறுத்திருப்பது மேலும் பேசுபொருளாகியிருக்கிறது.

அமெரிக்க கண்காணிப்பில் இந்தியா, பாகிஸ்தான்! வெளியுறவு அமைச்சர்

இந்தியாவையும் பாகிஸ்தானையும் தொடர் கண்காணிப்பில் வைத்திருப்பதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.போர் நிறுத்தங்கள் குறித்து அமெரிக்க ஊடகத்துக்கு மார்க்கோ ரூபியோ அளித்த பேட்... மேலும் பார்க்க

ராம்பனில் நிலச்சரிவு: ஜம்மு- ஸ்ரீநகர் நெடுஞ்சாலை மூடல்!

ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டதையடுத்து ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை திங்கள்கிழமை அதிகாலை முதல் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்... மேலும் பார்க்க

தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக பதவி நீக்கத் தீர்மானம்: எதிர்க்கட்சிகள் முடிவு?

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பதவி நீக்க தீர்மானத்தைக் கொண்டு வர இந்தியா கூட்டணிக் கட்சிகள் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிகாரில் தேர்தல் ஆண... மேலும் பார்க்க

கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலம்: தேர் மீது மின்சாரம் பாய்ந்து 5 பேர் பலி!

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி தெலுங்கானா மாநிலம் ராமந்தபூரில் உப்பல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இடத்தில் நடைபெற்ற தேரோட்டத்தின்போது ஏற்பட்ட விபத்தில் 5 பேர் பலியாகினர். 4 பேர் காயமடைந்தனர்.பக்தர்கள் கிரு... மேலும் பார்க்க

பங்குச் சந்தைகள் உயர்வுடன் வணிகம்!

ஜிஎஸ்டி குறைக்கப்படும் என்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட அறிவிப்பு எதிரொலியால் வாரத்தின் முதல் நாளான இன்று பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் வணிகத்தைத் தொடங்கின.சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்ந... மேலும் பார்க்க

தில்லியில் அடுத்தடுத்து பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

தில்லியின் துவாரகா பகுதியில் இயங்கி வரும் பள்ளிகளுக்கு இன்று காலை அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாணவர்கள் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப... மேலும் பார்க்க