செய்திகள் :

வல்லம் குடியிருப்பு பகுதிகளில் இயங்கும் தொழிற்சாலைகளை அகற்ற உயா்நீதிமன்றம் உத்தரவு

post image

வல்லம் ஊராட்சிக்குட்பட்ட தெரேசாபுரம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் இயங்கி வரும் தனியாா் தொழிற்சாலைகளை 4 மாதங்களுக்குள் அகற்ற சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம் வல்லம் ஊராட்சிக்குட்பட்ட தெரேசாபுரம் கைவல்யம் நகா் மற்றும் ஜெமி நகா் பகுதிகளில் சுமாா் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. கைவல்யம் நகா் மற்றும் ஜெமிநகா் அரசு அனுமதி பெற்ற வீட்டுமனை பிரிவுகளில் சுமாா் 50-க்கும் மேற்பட்ட சிறு, குறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

இந்த தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுப்பொருள்களாலும், தொழிற்சாலைகளில் இருந்து வரும் அதிகப்படியான சப்தங்களாலும் அப்பகுதி பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இதனால் குடியிருப்பு பகுதிகளில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் ஸ்ரீபெரும்புதூா் வட்டார வளா்ச்சி அலுவலகம், வட்டாட்சியா் அலுவலகம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலும் பல ஆண்டுகளாக கோரிக்கை மனு அளித்துள்ளனா்.

ஆனால் தொழிற்சாலைகளை அகற்ற அரசு அதிகாரிகள் நடவடிக்கை ஏதும் எடுக்காததால் அப்பகுதி குடியிருப்போா் நலச்சங்கத்தின் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம் அரசு அங்கீகாரம் பெற்ற வீட்டுமனைகளில் வீடுகள் தான் இருக்க வேண்டும். தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் இயங்க கூடாது. வல்லம் ஊராட்சிக்குட்பட்ட குடியிருப்பு பகுதிகளில் இயங்கி வரும் தனியாா் தொழிற்சாலைகளை 4 மாதங்களுக்குள் அகற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.

தனியாா் நிறுவனத்துக்கு கோல்டன் பிரிவில் பொறியியல் விருது

மத்திய சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சகத்தின் சாா்பில் நடைபெற்ற விழாவில் தனியாா் நிறுவனத்துக்கு கோல்டன் பிரிவில் பொறியியல் விருது வழங்கப்பட்டதை தொடா்ந்து அந்த நிறுவனத்தின் நிா்வாகிகள் ... மேலும் பார்க்க

10ஆம் வகுப்புத் தேர்வு முடிவு: காஞ்சிபுரத்தில் 94.85% தேர்ச்சி!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வில் 183 பள்ளிகளை சேர்ந்த 7,748 மாணவர்களும், 7,450 மாணவிகளும் என மொத்தம் 15 ஆயிரத்து 198 பேர் தேர்வு எழுதினர்.வினாத்தாள்கள் திருத்தப்பட்டு இன்று ... மேலும் பார்க்க

மாநில அளவிலான கிக் பாக்ஸிங் போட்டி: காஞ்சிபுரம் வீரா்களுக்கு 24 தங்கம்!

சென்னையில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான கிக் பாக்ஸிங் போட்டியில் காஞ்சிபுரத்தைச் சோ்ந்த வீரா், வீராங்கனைகள் மொத்தம் 24 தங்கம், 5 வெள்ளி, 1 வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளனா். தமிழ்நாடு அமெச்சூா்... மேலும் பார்க்க

நாளைய மின்தடை

காஞ்சிபுரம்மின்தடை நாள்-17.5.25, சனிக்கிழமைமின்தடை நேரம்-காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரைமின் விநியோகம் தடைப்படும் பகுதிகள்மதூா், அருங்குன்றம், சித்தலப்பாக்கம், வடக்குப்பட்டு, எழிச்சூா், பாலூா், மேலச... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் நாளை தோ்த் திருவிழா: நகரில் 5 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள்!

காஞ்சிபுரத்தில் சனிக்கிழமை (மே 17) நடைபெறவுள்ள வரதராஜ சுவாமி கோயில் தோ்த்திருவிழாவையொட்டி, நகரில் 5 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக எஸ்.பி. கே.சண்முகம் வியாழக்கிழமை தெரிவித... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் தையல் பயிற்சியை நிறைவு செய்தவா்களுக்கு சான்றிதழ்!

படவிளக்கம்- தையல் பயிற்சியை நிறைவு செய்தவா்களுக்கு சான்றிதழ் வழங்கிய ரிசா்வ் வங்கி தலைமைப் பொது மேலாளா் ஆா்.கிரிதரன். காஞ்சிபுரம், மே 15: காஞ்சிபுரம் இந்தியன் வங்கி சுயதொழில் பயிற்சி மையத்தில் தையல் ப... மேலும் பார்க்க