செய்திகள் :

துருக்கி கல்வி நிறுவனங்களுடனான ஒப்பந்தங்கள் ரத்து!

post image

துருக்கியில் உள்ள பல்வேறு பல்கலைக் கழகங்கள் உடனான ஒப்பந்தங்களை ரத்து செய்வதாக மும்பை ஐஐடி தெரிவித்துள்ளது.

இதில், மும்பை ஐஐடியில் உள்ள ஆசிரியர் மற்றும் மாணவர்கள் பரிமாற்றத் திட்டங்கள், எதிர்கால மேம்பாட்டுத் திட்டங்கள் உள்ளிட்டவற்றையும் ரத்து செய்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவும் ராணுவ மோதலில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக துருக்கி கருத்து கூறியதால், அந்நாட்டுடனான உறவை மத்திய அரசு படிப்படியாகத் துண்டித்து வருகிறது.

ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்திற்குட்பட்ட பஹல்காம் சுற்றுலாத் தலத்திலுள்ள பைசாரான் பள்ளத்தாக்கில் கடந்த மாதம் 26 சுற்றுலாப் பயணிகளை பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.

இச்சம்பவத்திற்கு பாகிஸ்தான் பயங்கரவாதிகளே காரணம் என்பதால், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதிகளில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் பதிலடித் தாக்குதல் நடத்தியது. இதில் மூன்று பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்களின் முகாம்கள் அழிக்கப்பட்டன.

இச்சம்பவத்தில் பலரும் பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்தனர். ஆனால், துருக்கி, அஜர்பைஜான் போன்ற நாடுகள் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்தன.

இதனால், துருக்கி, அஜர்பைஜான் உள்ளிட்ட நாடுகளுடனான தொடர்பை மக்கள் புறக்கணித்து வருகின்றனர். சமீபத்தில் அந்நாடுகளுக்குத் திட்டமிடப்பட்டிருந்த சுற்றுலாப் பயணங்களையும் ஏராளமான இந்தியர்கள் ரத்து செய்தனர்.

இந்நிலையில், துருக்கியில் உள்ள பல்வேறு பல்கலைக் கழகங்கள் உடனான கல்வி சார்ந்த ஒத்துழைப்புகள் மற்றும் ஒப்பந்தங்களை ரத்து செய்வதாக மும்பையில் உள்ள இந்திய தொழில்நுட்ப பல்கலைக் கழகம் (ஐஐடி) அறிவித்துள்ளது.

தற்போது, துருக்கியில் உள்ள கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் மற்றும் மாணவர்கள் பரிமாற்ற நிகழ்ச்சிகளை ஐஐடி மும்பை கொண்டுள்ளது. தற்போது இந்தத் திட்டமும் நிறுத்திவைக்கப்படுவதாகவும், இதில் எந்தவித முன்னேற்றமும் இனி ஏற்படாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐஐடி மும்பையைப் போன்றே, ரூக்ரி (உத்தரகண்ட்) ஐஐடியும் இதேபோன்று துருக்கி உடனான தொடர்புகளைத் துண்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம்

கா்னல் சோஃபியா குரேஷி குறித்து சா்ச்சை கருத்து: உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை!

கா்னல் சோஃபியா குரேஷி குறித்து மத்திய பிரதேச அமைச்சர் விஜய் ஷா சா்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டார்.‘பஹல்காமில் நமது சகோதரிகளின் குங்குமத்தை அழித்தவா்களை, அவா்களின் சகோதரியை வைத்தே பிரதமா் மோடி ஒழித... மேலும் பார்க்க

குடியிருப்புக்கு வெளியே காலணியை வைப்பதற்காக ரூ. 24,000 அபராதம் செலுத்திய நபர்!

பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்பு வாசலில் காலணியை வைத்துக்கொள்வதற்காக இளைஞர் ஒருவர் அபராதம் செலுத்தி வருகிறார். ஒரு நாளுக்கு ரூ.100 வீதம் 8 மாதங்களுக்கு ரூ. 24,000 அபராதம் செலுத்தியுள்ளார். தற்போ... மேலும் பார்க்க

கோழிக்கோடு பேருந்து நிலைய கடையில் தீ விபத்து!

கேரள மாநிலம் கோழிக்கோடு பேருந்து நிலைய துணிக் கடையில் இன்று (மே 18) மாலை பயங்கர தீ விபத்து நேரிட்டது. மாலை 5 மணியளவில் நேரிட்ட தீ விபத்தை சுமார் 2 மணிநேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் கட்டுக்குள் கொண்டு... மேலும் பார்க்க

அமெரிக்க வாழ் இந்தியர்களின் விசா ரத்தாகும் அபாயம்?

புது தில்லி: இந்தியாவிலுள்ள அமெரிக்க தூதரகம் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதில், அமெரிக்காவில் இந்தியர்களுக்கு நிரந்தர தடை விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. டொனால்ட் டிரம்ப் தலைமைய... மேலும் பார்க்க

புதிய போப் பதவியேற்பு விழாவில் இந்தியா சார்பில் பங்கேற்பது யார்?

புதிய போப் பதினான்காம் லியோ பதவியேற்பு விழாவில் இந்தியா சார்பில் மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் கலந்துகொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவருடன் நாலாகாந்து துணை முதல்வர் யாந்துங்கோ பாட்டனும் கலந்... மேலும் பார்க்க

சசி தரூரைச் சுற்றி நகரும் அரசியல்! கேரள காங். சொல்வதென்ன?

மத்திய அரசு நியமித்துள்ள எம்.பி.க்கள் குழுவில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் இணைக்கப்பட்டுள்ளதில் காங்கிரஸ் தலைமைக்கு விருப்பமில்லையா? என்று தேசிய அரசியலில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.வெளிநாடுகளுக்... மேலும் பார்க்க