செய்திகள் :

வளசரவாக்கத்தில் தீ விபத்து: 2 பேர் பலி

post image

சென்னை வளசரவாக்கம் பகுதியில் உள்ள பங்களா வீட்டில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி தம்பதியினர் 2 பேர் பலியாகினர்.

சென்னை வளசரவாக்கம் சௌத்ரி நகரில் ஆடிட்டர் ஸ்ரீராமுக்கு சொந்தமான பங்களா வீட்டில் ஞாயிற்றுக்கிழமை பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

இது குறித்து அருகில் இருந்தோர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு

தகவலை அடுத்து 3 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவர பல மணி நேரமாக போராடி வருகின்றனர். தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் கரும் புகை சூழ்ந்து காணப்படுகிறது.

இந்த தீ விபத்தில் நடராஜன் மற்றும் அவரது மனைவி தங்கம் உடல் கருகி பலியாகினர். ஸ்ரீராம் மீட்கப்பட்டுள்ளார்.

வீட்டின் முதல் தளத்தில் இருந்து குதித்த பணிப்பெண் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தீ விபத்து குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பண்ருட்டி: 8 ஆயிரம் ஆண்டுகள் பழமையான நுண் கற்காலக் கற்கருவி கண்டெடுப்பு

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே சுமார் 8 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான நுண் கற்கால மக்கள் பயன்படுத்திய கற்கருவிகள் கண்டெடுக்கப்பட்டன.இதைக் குறித்து தொல்லியல் ஆய்வாளர் கூறியதாவது:நுண் கற்காலக் கருவியின் பய... மேலும் பார்க்க

மனைவியின் கள்ளக்காதல் மாமியார் உள்பட 3 பேரை கொன்று கணவர் வெறிச்செயல்

ஆசை ஆசையாய் காதலித்து திருமணம் செய்த மனைவி செய்த கள்ளக்காதல் துரோகத்தை தாங்க முடியாத கணவர் மாமியார், சித்தப்பா, சித்தி ஆகிய 3 பேரையும் கொடூரமாக கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்ப... மேலும் பார்க்க

பெரியகுளம் அருகே அரசுப் பேருந்து மோதி 15 மாடுகள் பலி

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே அரசுப் பேருந்து மோதி 15 நாட்டு மாடுகள் பலியானது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே தம்மிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் தனசேகரன். நாட்டு மாடுகளை வளர்த்து வரும் இவர், பெரியகுள... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவரின் குறிப்புக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

ஆளுநரின் வழக்கு விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்திடம் குடியரசுத் தலைவர் 14 கேள்விகளை எழுப்பி கூடுதல் விளக்கம் கேட்டிருப்பதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் ... மேலும் பார்க்க

தமிழ்நாடு ஆளுநர் விவகாரம்: உச்ச நீதிமன்றத்திடம் விளக்கம் கேட்ட குடியரசுத் தலைவர்!

புது தில்லி: தமிழ்நாடு ஆளுநர் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்திடம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விளக்கம் கேட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக ஆளுநருக்கு மீண்டும் அ... மேலும் பார்க்க

கடலூர் சிப்காட்டில் கழிவுநீர் டேங்க் வெடித்து விபத்து: 20 பேர் மருத்துவமனையில் அனுமதி

கடலூர் சிப்காட்டில் 6 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ராட்சத கழிவுநீர் டேங்க் திடீரென வெடித்தில் 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டம், முதுநகர் அருகே உள்ள சிப்கா... மேலும் பார்க்க