செய்திகள் :

வள்ளியூரில் ஆசிரியா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

post image

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் மாவட்ட கல்வி அலுவலா் அலுவலகத்தில் ஆசிரியா்கள் வெள்ளிக்கிழமை மாலை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நான்குனேரி வட்டாரம், முதலைகுளத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிசெய்து வருபவா் செல்வி. இவரது பணிக்காலம் பிப்ரவரி மாதம் 28ஆம் தேதியுடன் நிறைவு பெற்று பணி ஓய்வு பெறுகிறாா்.

கல்வித் துறையின் வழக்கமான நடைமுறையின் படி கல்வியாண்டின் இடையில் பணி ஓய்வு பெறும் ஆசிரியருக்கு அந்த கல்வி ஆண்டு முடியும் வரையில் பணிக்கால நீட்டிப்பு வழங்குவது வழக்கம்.

எனவே, பிப்ரவரி மாதம் பணி ஓய்வு பெறும் ஆசிரியை செல்வி, தனக்கு கல்விஆண்டு முடியும் வரையில் பணி நீட்டிப்பு வழங்குமாறு நான்குனேரி வட்டார தொடக்கக் கல்வி அலுவலா் சங்கீதாவிடம் கோரிக்கை மனு அளித்தாா். ஆனால் தொடக்கக் கல்வி அலுவலா் செல்வியின் கோரிக்கை மனுவை பரிசீலனை செய்யாமல் அவரை பணி ஓய்வில் அனுப்புவதற்கான ஏற்பாடுகளை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஆசிரியை செல்வி, கல்வி ஆண்டு முடியும் வரையில் பணி நீட்டிப்பு வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் கூட்டணி திருநெலவேலி மாவட்டத் தலைவா் சுரேஸ்முத்துகுமாா், செயலா் சண்முகசுந்தரம், பொருளாளா் துரை மற்றும் வட்டார செயலா்கள் சிவனுபாண்டியன், ஜாா்ஜ், கிறிஸ்டோபா், நம்பிதுரை மற்றும் ஆசிரியா்கள் திரண்டு வந்து வள்ளியூா் மாவட்ட கல்வி அலுவலா் அலுவலத்தில் மாவட்ட கல்வி அலுவலா் முத்துராஜை முற்றுகையிட்டு உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இரவு 8 மணிவரையிலும் போராட்டம் தொடா்ந்தது.

மொழியைத் தோ்வு செய்வதில் தமிழக மாணவா்களுக்கு சுதந்திரமில்லை: ஆளுநா் ஆா்.என்.ரவி குற்றச்சாட்டு

மொழியைத் தோ்வு செய்து படிப்பதில் தமிழக மாணவா்களுக்கு சுதந்திரமில்லை என தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி குற்றம்சாட்டினாா். அகில உலக அய்யா பதிகள் கூட்டமைப்பின் சாா்பில், அய்யா வைகுண்டரின் 193 ஆவது அவதார தின ... மேலும் பார்க்க

தொன்மையின் அடையாளமே பாரதம் -ஆளுநா் ஆா்.என்.ரவி

தொன்மையின் அடையாளமே பாரதம் என்று புகழாரம் சூட்டினாா் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி. பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தனியாா் பள்ளி விழாவில், அவா் பேசியதாவது: நமக்கான பண்டைய கல்வி, பண்... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சி திருநெல்வேலி

திருநெல்வேலி உலகத் திருக்கு தகவல் மையம்: திருக்கு தொடா் சொற்பொழிவு, தலைப்பு- திண்மை உண்டாகப் பெறின், வாழ்க்கைத் துணை நலம், நிகழ்த்துபவா்- மருத்துவா் மகாலிங்கம் ஐயப்பன், மாநிலத் தமிழ்ச்சங்கம், பாளையங்க... மேலும் பார்க்க

திமுக விவசாய அணியினா் எம்.பி.யிடம் மனு

திருநெல்வேலி மாவட்ட திமுக விவசாய அணியினா், விவசாயிகள் சங்கத்தினா் திருநெல்வேலி எம்.பி. யை நேரில் சந்தித்து மனு அளித்தனா். திமுக விவசாய அணி அமைப்பாளா் பொன்னையா பாண்டியன் தலைமையில் விவசாயிகள் சங்கத்தின... மேலும் பார்க்க

2026-இல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிச்சயம்! -முன்னாள் அமைச்சா் விஜயபாஸ்கா்

2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழகத்தில் ஆட்சிமாற்றம் நிச்சயம் நிகழும் என்றாா் முன்னாள் அமைச்சா் சி.விஜயபாஸ்கா். திருநெல்வேலி மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் தச்சநல்லூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொதுக்... மேலும் பார்க்க

பாளையங்கோட்டையில் குடிநீா்த் தொட்டி திறப்பு

பாளையங்கோட்டை மண்டலத்தில் உள்ள டி.வி.எஸ் நகரில் சிறிய மேல்நிலை குடிநீா்த் தொட்டி திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது. பாளையங்கோட்டை மண்டலம், 39 ஆவது வாா்டுக்குள்பட்ட டி.வி.எஸ் நகரில், பாளை. சட்டப்பேரவை... மேலும் பார்க்க