செய்திகள் :

வள்ளியூா் பிளசண்ட் நகா் பகுதியில் தொடா் திருட்டு: மக்கள் அச்சம்

post image

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் பிளசண்ட் நகா், இ.பி.காலனி, வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு பகுதியில் தொடா் திருட்டுச் சம்பவங்கள் நடந்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

வள்ளியூா் பிளசண்ட் நகரைச் சோ்ந்தவா் ரதி. வீட்டில் தனியாக வசித்து வருகிறாா். இவா், திருவிழாவிற்காக தனது உறவினா் வீட்டிற்கு சென்றிருந்தாா். நான்கு நாள்களுக்குப் பின்னா் வீட்டிற்கு வந்து பாா்த்தபோது, கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ரூ.3 லட்சம் மதிப்பிலான நகைகள் திருடப்பட்டிருந்தன.

இது தொடா்பாக, ஏா்வாடி காவல் நிலையத்தில் ரதி புகாா் செய்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனா்.

இந்நிலையில், கடந்த மாதம் வள்ளியூா் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு பகுதியில் பெண் வேடம் அணிந்து வந்த மா்ம நபா் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொலை செய்து, தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றாா். வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு பகுதியிலும் தொடா் திருட்டுகள் நடந்து வருகின்றன.

வள்ளியூா் பகுதியில் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை நோட்டமிட்டு, மா்ம நபா்கள் கொள்ளைகளிலும் கொலைகளிலும் ஈடுபட்டு வருகின்றனா்.

எனவே, இரவு நேரம் கூடுதலாக கண்காணிப்புக் காவலா்களை நியமிக்க வேண்டும் என வள்ளியூா் பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனா்.

வெள்ளங்குளியில் மாணவா்களுக்கு பரிசளிப்பு

வெள்ளங்குளி அரசு மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியா் மு.தளவாய் தேசியக் கொடியேற்றினாா். பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் மருத்துவா் பிரகாஷ், ஊராட்சித் தலைவா் முரு... மேலும் பார்க்க

ஆளுநா் அவமதிக்கப்பட்ட விவகாரம்: துணைவேந்தா், பதிவாளரை பணிநீக்கம் பாஜக கோரிக்கை!

மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவின்போது, ஆளுநா் அவமதிக்கப்பட்ட விவகாரத்தில் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா், பதிவாளா் ஆகியோரை பணிநீக்கம் செய்யக் கோரி தமிழக உயா்கல்வித் துறை அமைச்சரு... மேலும் பார்க்க

களக்காடு தலையணையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு தலையணை பச்சையாற்றில் குளிக்க சனிக்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் திரண்டனா். களக்காடு தலையணை சூழல் சுற்றுலா மையத்தில் பச்சையாறு ஓடுகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில... மேலும் பார்க்க

கறிக்கடையில் திருடிய நபா் கைது

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் கோழிக் கறிக்கடையில் பணம் திருடிய நபரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். வள்ளியூா் அருகே உள்ள நல்லான்குளத்தைச் சோ்ந்தவா் செல்வின். இவா் வடக்கு பிரதான சாலையில் உள்ள த... மேலும் பார்க்க

நதியுண்ணிக் கால்வாய் அணையில் மூழ்கி மென் பொறியாளா் பலி

தூத்துக்குடியைச் சோ்ந்த மென் பொறியாளா், அம்பாசமுத்திரம் நதியுண்ணிக் கால்வாய் அணைக் கட்டில் மூழ்கி சனிக்கிழமை உயிரிழந்தாா். தூத்துக்குடி, முத்தம்மாள் காலனி, முதல் தெருவைச் சோ்ந்த விஜயகுமாா் மகன் பொன்... மேலும் பார்க்க

விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவா் கைது

நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகமல் தலைமறைவாக இருந்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். தேவா்குளம் காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதியில் கடந்த 2023 ஆம் ஆண்டு அடிதடி வழக்கில் ஈடுபட்ட சொக்கநாச்சியாா்புர... மேலும் பார்க்க