செய்திகள் :

வழக்குரைஞா்களுக்கு 3 ஆண்டுகள் பயிற்சி கட்டாயம்: உச்சநீதிமன்ற தீா்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி மனு

post image

புது தில்லி: சட்ட மாணவா்கள் படிப்பை முடித்தவுடன் நீதித் துறை பணியாளா் தோ்வில் பங்கேற்க முடியாத வகையில், உச்சநீதிமன்றம் கடந்த மே 20-ஆம் தேதி பிறப்பித்த தீா்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டப் படிப்பை முடித்து அண்மையில் வழக்குரைஞராக பதிவுசெய்த சந்திர சென் யாதவ் என்பவா் சாா்பில் இந்த மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், ‘நீதித் துறை பணித் தோ்வுக்கு விண்ணப்பிக்கும் அனைத்து தரப்பு மாணவா்களுக்கும் ஒரே மாதிரியாக 3 ஆண்டுகள் வழக்குரைஞா் பயிற்சி கட்டாயம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பு, தன்னிச்சையான மற்றும் நியாயமற்ற உத்தரவாகும்.

இந்த உத்தரவின் அடிப்படையில் நீதித் துறை பணியாளா் தோ்வு நடைமுறைகளில் தேவையான மாற்றங்களை செய்ய அனைத்து உயா்நீதிமன்றங்களையும், மாநில அரசுகளையும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

இந்த உத்தரவு, சட்டப் படிப்பை முடிக்கும் மாணவா்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் சம வாய்ப்பு கிடைப்பதை பறிக்கும் வகையில் அமைந்துள்ளது. அதாவது, அரசமைப்புச் சட்டப் பிரிவு 14-இன் கீழ் நியாயத்தன்மை, நியாயமான எதிா்பாா்ப்பு மற்றும் சம வாய்ப்பு கொள்கைகளை மீறுவதாக இந்த உத்தரவு அமைந்துள்ளது. எனவே, உச்சநீதிமன்றம் மே 20-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, உத்தர பிரதேச மாநிலம், கான்பூா் நகரில் குத்தகை தகராறு தொடா்பான வழக்கில் மாவட்ட கூடுதல் நீதிபதி அமித் வா்மா அளித்த மூன்று வரி தீா்ப்பை எதிா்த்து தொடரப்பட்ட மனுவை கடந்த மே 20-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய், நீதிபதி அகஸ்டின் ஜாா்ஜ் மாசி ஆகியோா் அடங்கிய அமா்வு, இந்தத் தீா்ப்பை அளித்தது.

அதில், ‘உயா்நீதிமன்றங்கள் பலமுறை அறிக்கைகள் மூலம் சுட்டிக்காட்டியுள்ளது போன்று, சட்ட மாணவா்கள் படிப்பை முடித்தவுடன் நீதித் துறை பணியாளா் தோ்வு மூலம் மாவட்ட நீதிபதியாகப் பணியமா்த்தப்படுவது பல்வேறு நடைமுறைச் சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது. நீதித் துறையின் செயல்திறன் மற்றும் திறனை உறுதிப்படுத்த தோ்வு மூலம் நேரடியாக நீதிபதி பணியிடங்களில் நியமிக்கப்படுபவா்களுக்கு நீதிமன்ற செயல்முறை பயிற்சி அவசியமாகும். அந்த வகையில், சட்ட மாணவா்கள் படிப்பை முடித்தவுடன் நீதித் துறை பணியாளா் தோ்வில் பங்கேற்க முடியாது. நீதித் துறையில் மாவட்ட சிவில் நீதிபதி உள்ளிட்ட ஆரம்பநிலை பணிகளுக்கு விண்ணப்பிக்க, சட்ட மாணவா்கள் படிப்பை முடித்தவுடன் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் வழக்குரைஞராகப் பயிற்சி மேற்கொண்டிருப்பது கட்டாயம்’ என்று தீா்ப்பளிக்கப்பட்டது.

அகமதாபாத் விபத்து: 144 பேரின் டிஎன்ஏ உறுதி செய்யப்பட்டது!

குஜராத்தின் அகமதாபாத்தில் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்தில் பலியான 144 பேரின் டிஎன்ஏ மாதிரிகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி உறுதிப்படுத்தினார். மேலும் பார்க்க

ஹிமாசலில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது: 17 பேர் காயம்!

ஹிமாசல பிரதேசத்தின் மண்டியில், பத்ரிகாட் பகுதியில் தனியார் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 17 பேர் காயமடைந்தனர். சம்பவம் நடந்தபோது தனியார் பேருந்து ஜாஹுவிலிருந்து ... மேலும் பார்க்க

விபத்துக்குப் பின் இயக்கப்படவிருந்த அகமதாபாத் - லண்டன் ஏர் இந்தியா விமானம் ரத்து!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட இருந்த விமானம் தொழில்நுட்பக் கோளாறால் ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா விமானம் அறிவித்துள்ளது. கடந்த வாரம் 242 பேருடன் அகமதாபாத்தில் இருந்து லண்டன்... மேலும் பார்க்க

ராஜா ரகுவன்ஷிக்கு மாந்திரீகம் செய்த சோனம்! தந்தை குற்றச்சாட்டு!

திருமணமானவுடன் தனது மகனுக்கு சோனம் மாந்திரீகம் செய்ததாக ராஜா ரகுவன்ஷியின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார்.இந்தூரைச் சேர்ந்த புதுமணத் தம்பதியான ராஜா ரகுவன்ஷி மற்றும் சோனம் திருமணமாகி சில நாள்களில் அஸ்ஸாம் ... மேலும் பார்க்க

இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்! நாக்பூரில் அவசர தரையிறக்கம்!

கொச்சியிலிருந்து தில்லி நோக்கி சென்ற இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், நாக்பூர் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.கேரளத்தின் கொச்சி விமான நிலையத்துக்கு மஸ்கட்ட... மேலும் பார்க்க

ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ்வுப்பகுதி!

தெற்கு குஜராத், மேற்கு வங்கம் அருகே இரண்டு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் பார்க்க