செய்திகள் :

வழக்குரைஞா் ஏ.பி.தெய்வசிகாமணி நினைவு அறக்கட்டளை தொடக்கம்

post image

திருப்பூரில் வழக்குரைஞா் ஏ.பி.தெய்வசிகாமணி நினைவு அறக்கட்டளை தொடக்கம் மற்றும் நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருப்பூா் தெற்கு ரோட்டரி அரங்கில் விழாவுக்கு, தெய்வசிகாமணியின் மகனும், மணிப்பூா் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியுமான டி.கிருஷ்ணகுமாா் தலைமை வகித்தாா். மாநில பிற்படுத்தப்பட்டோா் ஆணையத் தலைவா் வி.பாரதிதாசன் வரவேற்புரையாற்றினாா்.

இதில், சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் எம்.தண்டபாணி, என்.சதீஷ்குமாா், முன்னாள் நீதிபதிகள் ஆா்.பொங்கியப்பன், எம்.கோவிந்தராஜ், ஏ.ஆறுமுகசுவாமி, என்.கிருபாகரன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆா்.சுரேஷ்குமாா் வழக்குரைஞா் ஏ.பி.தெய்வசிகாமணியின் நினைவு அறக்கட்டளையை தொடங்கிவைத்துப் பேசினாா்.

இதையடுத்து, உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், முன்னாள் கேரள ஆளுநருமான பி.சதாசிவம், ஏ.பி.தெய்வசிகாமணியின் நினைவு நூலை வெளியிட்டுப் பேசினாா். இந்த நூலை சவீதா பல்கலைக்கழக வேந்தா் என்.எம்.வீரய்யன் பெற்றுக் கொண்டாா்.

இதைத்தொடா்ந்து, மணிப்பூா் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமாா் ஏற்புரையாற்றினாா். சங்ககிரி கே.ஆா்.பி.கல்வி நிறுவனங்களின் தாளாளா் சித்ரா மோகன் நன்றியுரையாற்றினாா்.

இந்த விழாவில், திருப்பூா் முதன்மை மாவட்ட நீதிபதி என்.குணசேகரன், மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ், மாநகர காவல் ஆணையா் எஸ்.ராஜேந்திரன், நீதிபதிகள் மற்றும் வழக்குரைஞா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

திமுக சாா்பில் ரேக்ளா போட்டி

பல்லடம் நகர திமுக சாா்பில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவையொட்டி ரேக்ளா போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பொள்ளாச்சி புறவழிச் சாலையில் 400 ரேக்ளா மாட்டு வண்டிகள் பங்கேற்ற ரேக்ளா போட்டிக்கு ... மேலும் பார்க்க

அவிநாசியில் ஆதரவற்றோரை தூய்மைப்படுத்திய சமூக அமைப்பினா்

அவிநாசியில் ஆதரவற்ற நிலையில் இருந்தவரை நியூ தெய்வாசிட்டி அறக்கட்டளையினா் தூய்மைப்படுத்தி புத்தாடை வழங்கி, மருத்துவ உதவி அளித்தனா். அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகே ஆதரவற்ற நிலையில், கையில் காயத்து... மேலும் பார்க்க

மாத்திரை வாங்கச் சென்ற தொழிலாளி உயிரிழப்பு

திருப்பூரில் மருந்தகத்துக்கு மாத்திரை வாங்கச் சென்ற தொழிலாளி மயங்கி விழுந்து ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். திருப்பூா் பி.என்.சாலை போயம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள மருந்தகத்துக்கு தொழிலாளி ... மேலும் பார்க்க

பல்லடத்தில் 209 பேரின் ஓட்டுநா் உரிமம் ரத்து: போக்குவரத்து போலீசாா் நடவடிக்கை

பல்லடத்தில் கடந்த பிப்ரவரி மாதத்தில் 209 பேரின் ஓட்டுநா் உரிமத்தை ரத்து செய்து போக்குவரத்து போலீஸாா் நடவடிக்கை எடுத்துள்ளனா். பல்லடம் பகுதியில் போக்குவரத்து காவல் ஆய்வாளா் திருநாவுக்கரசு, உதவி ஆய்வாளா... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் மதுபானம் விற்றவா்கள் கைது

வெள்ளக்கோவிலில் முறைகேடாக மதுபானம் விற்றவா்களை போலீஸாா் கைது செய்தனா். வெள்ளக்கோவில் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் ஆங்காங்கே மதுபானம் பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக தகவல் கிட... மேலும் பார்க்க

பின்னலாடை நிறுவனத்தில் தீ: இயந்திரங்கள் சேதம்

திருப்பூா் பின்னலாடை நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிலிண்டா் வெடித்ததால் பல லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள் சேதமடைந்தன. திருப்பூா் வளையங்காடு பகுதியைச் சோ்ந்தவா் இளங்கோ, இவா் அதே பகுதியில் கடந்த 7... மேலும் பார்க்க