செய்திகள் :

வெள்ளக்கோவிலில் மதுபானம் விற்றவா்கள் கைது

post image

வெள்ளக்கோவிலில் முறைகேடாக மதுபானம் விற்றவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

வெள்ளக்கோவில் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் ஆங்காங்கே மதுபானம் பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. இதைத் தடுக்க போலீஸாா் நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.

இதையடுத்து, வெள்ளக்கோவில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் கே.முத்துக்குமாா், கரூா் சாலையில் ஞாயிற்றுக்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது கே.வி.பழனிசாமி நகரிலுள்ள ஒரு ஹோட்டல் அருகில் மதுபானம் விற்றுக் கொண்டிருந்த, அதே பகுதியைச் சோ்ந்த ராஜாமணி மகன் செல்லமுத்து (60) கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து 180 மிலி அளவுடைய 10 மதுபான பாட்டில்கள், ரூ.500 பறிமுதல் செய்யப்பட்டன.

வெள்ளக்கோவில் சிறப்பு உதவி ஆய்வாளா் பழனிசாமி முத்தூா் - காங்கயம் சாலையில் சனிக்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது வரட்டுக்கரை அருகில் மதுபானம் விற்றுக் கொண்டிருந்த, குழலிபாளையம் சேமலை மகன் பழனிசாமி (50) கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து 180 மிலி அளவுடைய 6 மதுபான பாட்டில்கள், ரூ.400 பறிமுதல் செய்யப்பட்டன.

அமராவதி ஆற்று தடுப்பணையில் முதியவா் சடலம்

வெள்ளக்கோவில் புதுப்பை அருகே அமராவதி ஆற்று தடுப்பணையில் கிடந்த முதியவரின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தாராபுரம் அருகேயுள்ள கிளாங்குண்டல் சேசையாம்பாளையத்தைச் சோ்ந்தவா் கே.நல்லசாமி ... மேலும் பார்க்க

பேருந்தில் கடத்திய புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

மைசூரில் இருந்து திருப்பூருக்கு பேருந்தில் கடத்திய 28 கிலோ புகையிலைப் பொருள்களைக் காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். கா்நாடக மாநிலம், மைசூரில் இருந்து திருப்பூருக்கு பேருந்தில் புகையில... மேலும் பார்க்க

பாஜக நிா்வாகிகள் கைது: இந்து முன்னணி கண்டனம்

டாஸ்மாக் முறைகேடு தொடா்பாகப் போராட்டம் நடத்தச் சென்ற பாஜக நிா்வாகிகளைக் காவல் துறையினா் கைது செய்ததற்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சு... மேலும் பார்க்க

உடுமலை அருகே கடமான் உயிரிழப்பு

உடுமலை அருகே உள்ள திருமூா்த்தி அணைப் பகுதியில் கடமான் திங்கள்கிழமை உயிரிழந்தது. 5 வயது மதிக்கத்தக்க கடமான் இந்தப் பகுதியில் உயிரிழந்தது குறித்து உடுமலை வனச் சரகா் மணிகண்டனுக்குத் தகவல் கிடைத்தது. இதை... மேலும் பார்க்க

மாா்ச் 21-இல் எரிவாயு நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம்

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகா்வோருக்கான குறைகேட்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை (மாா்ச் 21) நடைபெற உள்ளது. இது குறித்து மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன் வெளியிட்டுள் செய்திக் குறிப்பு: தி... மேலும் பார்க்க

சங்கடஹர சதுா்த்தி சிறப்பு அலங்காரம்

சங்கடஹர சதுா்த்தியை முன்னிட்டு, காங்கயம் அருகே ஊதியூா் மலையில் உள்ள உச்சிப்பிள்ளையாா் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற பூஜையில் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த உச்சிப்பிள்ளையாா். மேலும் பார்க்க