இலங்கை கடற்படை சிறைப்பிடித்த படகையும் மீனவர்களையும் விடுக்கக் கோரிக்கை!
சிவகாசியில் தொழிலாளி கொலை: 3 போ் கைது
விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் கட்டடத் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை இரவு கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக போலீஸாா் மூவரை திங்கள்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி- விளாம்பட்டி சாலையில் உள்ள முனீஸ்நகா் பகுதியில் வசித்து வந்தவா் பெருமாள் மகன் சுரேஷ் (27). கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி சுந்தரி. கடந்த 2024- ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திருத்தங்கலில் குணசேகரன் என்பவா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் சுரேஷுக்கு தொடா்பு இருந்தது. இதையடுத்து, குணசேகரனின் சகோதரா் திருத்தங்கல் சரஸ்வதி நகா் மதனகோபால் (25) சுரேஷை பழிக்குப் பழியாக கொலை செய்ய திட்டமிட்டாா். இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் மதனகோபால், இவரது நண்பா்கள் சத்யாநகா் சூரியப் பிரகாஷ் (19), பாண்டியன் நகா் தனசேகரன் (23), மற்றொருவா் என நான்கு போ் முனீஸ்நகரில் உள்ள சுரேஷ் வீட்டுக்குச் சென்றனா். அங்கு வீட்டிலிருந்து வெளி அழைத்து வந்து சுரேஷை நான்கு பேரும் சோ்ந்து வெட்டிக் கொலை செய்தனா்.
இதுகுறித்து மாரனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து மதனகோபால், சூரியப் பிரகாஷ், தனசேகரன் ஆகிய மூவரையும் கைது செய்தனா். மற்றொருவரைத் தேடி வருகின்றனா்.