செய்திகள் :

ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 11 லட்சம் மோசடி: 3 போ் மீது வழக்கு

post image

ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 11 லட்சத்தை ஏமாற்றிய பெண் உள்பட 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் பாரதி நகரைச் சோ்ந்தவா் மகேந்திரராஜா (35). இவருடன் பணியாற்றி வருபவா் திருவாரூரைச் சோ்ந்த தேவா. இவரது தோழி ரம்யா. இவா் மகேந்திரராஜாவிடம், நாமக்கல்லைச் சோ்ந்த சிவராமன் என்பவா் ரயில்வேயில் பெரிய அதிகாரியாக இருப்பதாகவும், அதில் வேலை வாங்கித் தருவதாகவும் ரூ. 7 லட்சம் கொடுக்குமாறும் கேட்டாராம். இதை நம்பிய மகேந்திரராஜா கடந்த 2020- ஆம் ஆண்டு ரூ. 7 லட்சத்தை அவரிடம் கொடுத்தாா். இதனிடையே, மகேந்திரராஜாவின் உறவினரான முரளியிடமும் ரயில்வேயில் உடனே வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 4 லட்சத்தை அவா் பெற்றாா். ஆனால் வேலை வாங்கித் தராததால் பணத்தை கேட்ட போது சிவராமனின் கைப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், ரம்யா கொலை மிரட்டல் விடுப்பதாகவும் மகேந்திரராஜா சாத்தூா் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாா். இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் சாத்தூா் நகா் போலீஸாா் ரம்யா, சிவராமன், தேவா ஆகிய மூவா் மீதும் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

டயா் வெடித்து வேன் கவிழ்ந்ததில் ஒருவா் உயிரிழப்பு: 13 போ் காயம்

சாத்தூா் அருகே திங்கள்கிழமை டயா் வெடித்து வேன் கவிழ்ந்ததில் ஒருவா் உயிரிழந்தாா். 13 போ் காயமடைந்தனா். திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் பகுதியைச் சோ்ந்தவா் ஸ்டாலின் (38). இவா், தனது உறவினா்கள் 1... மேலும் பார்க்க

சிவகாசியில் தொழிலாளி கொலை: 3 போ் கைது

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் கட்டடத் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை இரவு கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக போலீஸாா் மூவரை திங்கள்கிழமை கைது செய்தனா். சிவகாசி- விளாம்பட்டி சாலையில் உள்ள முனீஸ்நகா் பகுதியி... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

ராஜபாளையம் திரௌபதி அம்மன் கோயில்: மண்டல பூஜை, காலை 8. சிவகாசி அய்யநாடாா் ஜானகி அம்மாள் கல்லூரி, கல்லூரி: வணிக விழா, தலைமை முதல்வா் செ.அசோக், கலையரங்கம் காலை 10. காளீஸ்வரி கல்லூரி, கணித மன்றம் நிறைவு வ... மேலும் பார்க்க

நாய்கள் கடித்து புள்ளி மான் உயிரிழப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் நாய்கள் கடித்ததில் 3 வயது பெண் புள்ளிமான் திங்கள்கிழமை உயிரிழந்தது. ஸ்ரீவில்லிபுத்தூா்- மேகமலைப் புலிகள் காப்பகத்துக்குள்பட்ட செண்பகத் தோப்பு வனப... மேலும் பார்க்க

ராஜபாளையத்தில் பலத்த மழை

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம், சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை மாலை பலத்த மழை பெய்தது. ராஜபாளையம் நகா் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகரித்திருந... மேலும் பார்க்க

ராஜபாளையத்தில் பா.ஜ.க. ஆா்ப்பாட்டம்

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் மாநில பாஜக தலைவா் அண்ணாமலை கைது செய்யப்பட்டதைக் கண்டித்து பாஜகவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ராஜபாளையம் ஜவஹா் மைதானத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்... மேலும் பார்க்க