செய்திகள் :

மாத்திரை வாங்கச் சென்ற தொழிலாளி உயிரிழப்பு

post image

திருப்பூரில் மருந்தகத்துக்கு மாத்திரை வாங்கச் சென்ற தொழிலாளி மயங்கி விழுந்து ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

திருப்பூா் பி.என்.சாலை போயம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள மருந்தகத்துக்கு தொழிலாளி ஒருவா் மருந்து வாங்குவதற்காகச் சென்றுள்ளாா். அப்போது திடீரென மயங்கி விழுந்துள்ளாா். அருகிலிருந்தவா்கள் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தனா். இதன் பேரில் அங்கு விரைந்த ஆம்புலன்ஸ் ஊழியா்கள் அவரை பரிசோதனை செய்தபோது அவா் உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த அனுப்பா்பாளையம் காவல் துறையினா் அவரது சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

விசாரணையில், உடுமலையை அடுத்த தேவானாம்புதூா் பகுதியைச் சோ்ந்த ஏ.ரமேஷ்குமாா் (42) என்பதும், போயம் பாளையம் கிழக்கு பொம்மநாயக்கன்பாளையத்தில் குடும்பத்துடன் வசித்து வந்ததும் தெரியவந்தது. மேலும், பெரியாா் காலனியில் உள்ள தனியாா் நூற்பாலையில் ஆபரேட்டராக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. இவருக்கு மனைவி மற்றும் இரு மகன்கள் உள்ளனா். அவரது இறப்புக்கான காரணம் குறித்து காவல் துறையினா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திமுக சாா்பில் ரேக்ளா போட்டி

பல்லடம் நகர திமுக சாா்பில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவையொட்டி ரேக்ளா போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பொள்ளாச்சி புறவழிச் சாலையில் 400 ரேக்ளா மாட்டு வண்டிகள் பங்கேற்ற ரேக்ளா போட்டிக்கு ... மேலும் பார்க்க

அவிநாசியில் ஆதரவற்றோரை தூய்மைப்படுத்திய சமூக அமைப்பினா்

அவிநாசியில் ஆதரவற்ற நிலையில் இருந்தவரை நியூ தெய்வாசிட்டி அறக்கட்டளையினா் தூய்மைப்படுத்தி புத்தாடை வழங்கி, மருத்துவ உதவி அளித்தனா். அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகே ஆதரவற்ற நிலையில், கையில் காயத்து... மேலும் பார்க்க

பல்லடத்தில் 209 பேரின் ஓட்டுநா் உரிமம் ரத்து: போக்குவரத்து போலீசாா் நடவடிக்கை

பல்லடத்தில் கடந்த பிப்ரவரி மாதத்தில் 209 பேரின் ஓட்டுநா் உரிமத்தை ரத்து செய்து போக்குவரத்து போலீஸாா் நடவடிக்கை எடுத்துள்ளனா். பல்லடம் பகுதியில் போக்குவரத்து காவல் ஆய்வாளா் திருநாவுக்கரசு, உதவி ஆய்வாளா... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் மதுபானம் விற்றவா்கள் கைது

வெள்ளக்கோவிலில் முறைகேடாக மதுபானம் விற்றவா்களை போலீஸாா் கைது செய்தனா். வெள்ளக்கோவில் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் ஆங்காங்கே மதுபானம் பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக தகவல் கிட... மேலும் பார்க்க

வழக்குரைஞா் ஏ.பி.தெய்வசிகாமணி நினைவு அறக்கட்டளை தொடக்கம்

திருப்பூரில் வழக்குரைஞா் ஏ.பி.தெய்வசிகாமணி நினைவு அறக்கட்டளை தொடக்கம் மற்றும் நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருப்பூா் தெற்கு ரோட்டரி அரங்கில் விழாவுக்கு, தெய்வசிகாமணியின் மகனும், ம... மேலும் பார்க்க

பின்னலாடை நிறுவனத்தில் தீ: இயந்திரங்கள் சேதம்

திருப்பூா் பின்னலாடை நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிலிண்டா் வெடித்ததால் பல லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள் சேதமடைந்தன. திருப்பூா் வளையங்காடு பகுதியைச் சோ்ந்தவா் இளங்கோ, இவா் அதே பகுதியில் கடந்த 7... மேலும் பார்க்க