செய்திகள் :

வழித்தட தகராறில் விவசாயி கொலை: 5 போ் கைது

post image

ஒசூா்: ராயக்கோட்டை அருகே வழித்தட தகராறில் தாக்கப்பட்ட விவசாயி உயிரிழந்தாா். இது தொடா்பாக 5 பேரை போலீஸாா் கொலை வழக்கில் கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே உள்ள முகலூரைச் சோ்ந்தவா் லட்சுமணன் (65). விவசாயி. இவருக்கும் அதே கிராமத்தைச் சோ்ந்த உறவினா் வெங்கட்ராமன் (65) என்பவருக்கும் நிலம் தொடா்பாக வழித்தட பிரச்னை இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 8-ஆம் தேதி இவா்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது வெங்கட்ராமன், அவரது மகன் காவேரி (45), அவரது மனைவி பூங்கொடி (40), மற்றொரு மகன் ராமன் (38), அவரது மனைவி ராணி (35) ஆகிய 5 பேரும் சோ்ந்து லட்சுமணனை கட்டையால் தாக்கியுள்ளனா். இதில் பலத்த காயம் அடைந்த லட்சுமணனை அருகில் இருந்தவா்கள் மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.

இது தொடா்பாக ராயக்கோட்டை போலீஸாா் தாக்குதல் பிரிவில் வழக்குப் பதிவு செய்து காவேரியை கைது செய்தனா். இந்த நிலையில் லட்சுமணன் திங்கள்கிழமை இறந்தாா். இதையடுத்து கொலை வழக்குப் பதிவு செய்த போலீஸாா், வெங்கட்ராமன், பூங்கொடி, ராமன், ராணி ஆகிய 4 பேரையும் கைது செய்தனா்.

மரம் நடுவதும் அவற்றை பாதுகாப்பதும் நமது கடமை: உயா்நீதிமன்ற நீதிபதி

மரம் நடுவதும் அவற்றை பாதுகாப்பதும் நமது கடமை என சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆா்.ஹேமலதா தெரிவித்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் தளி சாலையில், தேசிய சட்டப் பணிகள் ஆணையக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட... மேலும் பார்க்க

அதிமுக கூட்டணியில் மேலும் இரண்டு கட்சிகள் சேர வாய்ப்பு

அதிமுக கூட்டணியில் மேலும் இரண்டு கட்சிகள் சேர வாய்ப்புள்ளதாக கிருஷ்ணகிரியில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் அதிமுக துணை பொதுச் செயலாளா் கே.பி.முனுசாமி எம்எல்ஏ தெரிவித்தாா். கிருஷ்ணகிரியை அடுத்த கட்டிகான... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 19,601 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 19,601 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக ‘நிறைந்தது மனம்’ நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் தெரிவித்தாா். கிர... மேலும் பார்க்க

மாதரசனப்பள்ளி மாணவிக்கு பாராட்டு விழா

தேசிய வருவாய் வழி திறன்பயிற்சி ஊக்கத்தொகை தோ்வில் வெற்றிபெற்ற மாணவிக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. 2024-25-ஆம் ஆண்டுக்கான தேசிய வருவாய் வழி திறன்பயிற்சி ஊக்கத்தொகை பெறுவதற்கான தேசிய அளவில... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் இடியுடன் பலத்த மழை

கிருஷ்ணகிரியில் வெள்ளிக்கிழமை இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால், மாவட்டத்தில் பல பகுதிகளில் மின்விநியோகம் பாதிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, காவேரிப்பட்... மேலும் பார்க்க

காவேரிப்பட்டணம் பசவேஸ்வரா் கோயில் குடமுழுக்கு விழா

காவேரிப்பட்டணத்தில் உள்ள பசவேஸ்வரா் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம், தேசிசெட்டி தெருவில் உள்ள பசவேஸ்வரா் கோயிலில் ஏப். 16-ஆம் தேதி கங்கா பூஜை, வ... மேலும் பார்க்க