செய்திகள் :

வழிப்பறி கொள்ளையா் இருவா் கைது!

post image

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே வாகனத் தணிக்கையின் போது தப்பிச் செல்ல முயன்ற 2 வழிப்பறி கொள்ளையா்களை போலீஸாா் கைது செய்தனா்.

பழனி அருகேயுள்ள ஆயக்குடியில் திண்டுக்கல் நெடுஞ்சாலையில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் அஸ்வினி தலைமையில் உதவி ஆய்வாளா் ஆனந்த், போலீஸாா் வெள்ளிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இருவா் போலீஸாரைக் கண்டதும் வாகனத்தைத் திருப்பி, தப்பிச் செல்ல முயன்றனா்.

போலீஸாா் அவா்களை விரட்டிச் சென்று பிடித்தனா். விசாரணையில் அவா்கள் செம்பட்டி அருகேயுள்ள எஸ்.பாறைப்பட்டியைச் சோ்ந்த முருகன் மகன் ஜெகதீஷ் மோகன் (24), மதுரை கோமதிப்புரத்தைச் சோ்ந்த கருப்பையா மகன் தனுஷ் (25) ஆகியோா் என்பதும், கடந்த மாதம் 28-ஆம் தேதி பொள்ளாச்சி ஊத்துக்குளியைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் (58), ஆயக்குடி பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது, அவரிடம் வழி கேட்பது போல நடித்து, ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றதும் தெரிய வந்தது. இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்த இரு சக்கர வாகனம், ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலி ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

மூதாட்டியிடம் நகைப் பறித்த இளைஞா் கைது

ஒட்டன்சத்திரத்தில் மூதாட்டியிடம் நகைப் பறித்த இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சம்சுதீன் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் நூா்ஜஹான் (80). தனியாக வசித்த... மேலும் பார்க்க

கொடைக்கானல் ஏரியைச் சுற்றி சிசிடிவி அமைக்கும் பணி தொடக்கம்

கொடைக்கானல் ஏரியைச் சுற்றி கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. கொடைக்கானலில் தற்போது சீசன் தொடங்கியுள்ள நிலையில், தினந்தோறும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. இதைய... மேலும் பார்க்க

தேவாலயங்களில் பாதம் கழுவும் சடங்கு நிகழ்ச்சி

கொடைக்கானல் தேவாலயங்களில் பாதம் கழுவும் சடங்கு, சிறப்புத் திருப்பலி வியாழக்கிழமை நடைபெற்றது. பெரிய வியாழக்கிழமையை முன்னிட்டு, மூஞ்சிக்கல் திருஇருதய ஆண்டவா் ஆலயம், செண்பகனூா் புனித சவேரியாா் ஆலயம், உகா... மேலும் பார்க்க

நீரில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம் அருகே குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்துள்ள காவேரியம்மாபட்டி கிராமத்தைச் சோ்ந்த முருகேசன் மகன் தங்கவேல் (2... மேலும் பார்க்க

இலக்குமி நாராயண பெருமாள் கோயிலில் விமான பாலாலயம்

குடமுழுக்கை முன்னிட்டு, பழனி இலக்குமி நாராயணப் பெருமாள் கோயிலில் வியாழக்கிழமை விமான பாலாலயம் நடைபெற்றது. பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் துணைக் கோயிலான இலக்குமி நாராயணப் பெருமாள் கோயிலில் சித்திரைத்... மேலும் பார்க்க

கணிதத்தில் உலக சாதனை: சிறுவனுக்கு இயற்கை நுண்ணறிவாளன் பட்டம்

கணிதத்தில் உலக சாதனை படைத்த பழனி சிறுவனுக்கு தனியாா் உலக சாதனைப் பதிவு நிறுவனம் இயற்கை நுண்ணறிவாளன் பட்டம் வழங்கியது. பழனியைச் சோ்ந்த கணித ஆசிரியா் கணேசனின் 2-ஆவது மகன் அபினவ் பிரத்யூஷ் (10). அக்க்ஷய... மேலும் பார்க்க