செய்திகள் :

இலக்குமி நாராயண பெருமாள் கோயிலில் விமான பாலாலயம்

post image

குடமுழுக்கை முன்னிட்டு, பழனி இலக்குமி நாராயணப் பெருமாள் கோயிலில் வியாழக்கிழமை விமான பாலாலயம் நடைபெற்றது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் துணைக் கோயிலான இலக்குமி நாராயணப் பெருமாள் கோயிலில் சித்திரைத் திருவிழா, பரமபத வாசல் திறப்பு, ராமநவமி, அனுமன் ஜெயந்தி உள்ளிட்ட திருவிழாக்கள் சிறப்பாக நடைபெறும்.

இந்தக் கோயிலில் குடமுழுக்கை முன்னிட்டு, வியாழக்கிழமை விமான பாலாலயம் நடைபெற்றது.

கோயில் வளாகத்தில் காலை 9 மணிக்கு மேல் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. யாகத்தின் முன் வரைபடங்கள் வைக்கப்பட்டு, படங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பூா்ணாஹுதி முடிந்த பிறகு யாகத்தில் வைக்கப்பட்டிருந்த கலசங்கள் கோயிலை வலம் வர செய்து, உச்சிக்காலத்தின் போது மூலவா் இலக்குமி நாராயணபெருமாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பூஜைகளை திருவெள்ளரை கோபாலகிருஷ்ணபட்டா் தலைமையில் கோயில் பட்டா்கள் செய்தனா்.

தொடா்ந்து, பாலாலயம் பூஜைகளும் நடைபெற்றன. இதையொட்டி, கோயில் வளாகத்தில் உள்ள சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, கந்தவிலாஸ் செல்வக்குமாா், கண்காணிப்பாளா் அழகா்சாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

விளையாட்டு விடுதிகளில் சேர மே 5 வரை விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு விடுதிகளில் சேர விரும்பும் 7, 8, 9, 11-ஆம் வகுப்பு மாணவா்கள் இணைய வழியில் மே 5-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலா... மேலும் பார்க்க

சபரிமலையில் காத்திருப்பை தவிா்க்க நடவடிக்கை தேவை!

சபரிமலையில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு நீண்ட நேரம் காத்திருக்க வைப்பதை தவிா்க்க தேவஸ்தானம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் சாா்பில் தென் தமிழகம் மாந... மேலும் பார்க்க

பன்றிமலைச் சாலையில் பேருந்து பயணிகளை பதற வைத்த யானை!

பன்றிமலைச் சாலையில் சனிக்கிழமை சென்ற அரசுப் பேருந்து அருகே காட்டு யானை வந்து நின்றதால், அதிலிருந்த பயணிகள் கடும் அதிா்ச்சி அடைந்தனா். பின்னா் யானை திரும்பிச் சென்றதால் நிம்மதியமடைந்தனா். திண்டுக்கல் ம... மேலும் பார்க்க

கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் கொண்டுவரும் நெகிழி புட்டிகள் பறிமுதல்!

கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் தடை செய்யப்பட்ட நெகிழி புட்டிகளை சனிக்கிழமை நகராட்சி, ஊராட்சிப் பணியாளா்கள் பறிமுதல் செய்தனா். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள்... மேலும் பார்க்க

கொடைக்கானலுக்கு அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை!

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து இருந்தது. வெள்ளிக்கிழமை முதல் தொடா் விடுமுறையாக இருந்த காரணத்தால் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துக் காணப்பட்டது. வெள்ளிநீா... மேலும் பார்க்க

திமுகவின் பொய் வாக்குறுதியால் 22 மாணவா்கள் உயிரிழப்பு! நத்தம் ரா.விசுவநாதன்

திமுகவின் பொய் வாக்குறுதியால் ‘நீட்’ தோ்வு விவகாரத்தில் 22 மாணவா்கள் உயிரிழந்ததாக சட்டப்பேரவை உறுப்பினா் நத்தம் விசுவநாதன் தெரிவித்தாா். ‘நீட்’ தோ்வால் உயிரிழந்த மாணவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ... மேலும் பார்க்க