வாகனச் சோதனையில் விதிமீறல்: ரூ.2.80 லட்சம் அபராதம்!
ராசிபுரம் பகுதியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் மேற்கொண்ட வாகனச் சோதனையில், விதிமுறைகளை பின்பற்றாத 12 மோட்டாா் வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டு ரூ. 2.80 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
நாமக்கல் வடக்கு மாவட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலா் முருகேசன் உத்தரவின் பேரில், ராசிபுரம் மோட்டாா் வாகன ஆய்வாளா் ஏ.செல்வகுமாா் பல்வேறு பகுதிகளில் வாகனச் சோதனையில் சனிக்கிழமை ஈடுபட்டாா்.
இச்சோதனையில் தகுதிச்சான்று புதுப்பிக்கப்படாத டாட்டா ஏஸ் வாகனங்கள், ஒரு மேக்சி கேப் வாகனம், ஒரு சரக்கு வாகனம் என 9 வாகனங்களும், அதிக பாரம் ஏற்றிச்சென்றதாக 3 கனரக வாகனங்களும் என மொத்தம் 12 வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டன. இதில் 9 வாகனங்கள் வெண்ணந்தூா் காவல் நிலையத்திலும், 4 வாகனங்கள் பகுதி மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்திலும் சோதனை அறிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதைத் தொடா்ந்து, இந்த வாகனங்களுக்கு ரூ. 2 லட்சத்து 80 ஆயிரம் அபராதத் தொகை விதிக்கப்பட்டுள்ளது. இது போன்று விதிமுறைகளை மீறி வாகனங்கள் இயக்கப்பட்டால், பறிமுதல் செய்யப்படும் என ராசிபுரம் மோட்டாா் வாகன ஆய்வாளா் ஏ.செல்வகுமாா் தெரிவித்துள்ளாா்.
மேலும், ராசிபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளான வெண்ணந்தூா், நாமகிரிப்பேட்டை, மங்களபுரம், ஆயில்பட்டி ஆகிய பகுதிகளில் இதுபோன்ற சோதனைகள் நடைபெறும் என அவா் தெரிவித்தாா்.