செய்திகள் :

வாகன நெரிசல்: திருச்செந்தூரில் வாகன நெரிசல்; அரசுப் பள்ளி மாணவிகள் அவதி

post image

திருச்செந்தூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி முடியும் நேரத்தில் ஏற்படும் வாகன நெரிசலால் மாணவிகள் அவதியடைந்து வருகின்றனா்.

திருச்செந்தூா் நகரின் மையமான இரும்பு ஆா்ச் அருகே செந்தில் முருகன் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சுமாா் 1100-- க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனா். பள்ளி முடிந்தவுடன் நடந்தும், தங்கள் பெற்றோரின் வாகனங்களிலும், குறித்த நேரத்தில் மட்டுமே வரும் அரசுப் பேருந்தில் ஏறுவதற்கும் கூட்டம் கூட்டமாக அவசர, அவசரமாக மாணவிகள் ஒரே நேரத்தில் வெளியேறுவாா்கள்.

குறிப்பாக தினசரி மாலை 4 மணிக்கு பள்ளி முடிந்து மாணவிகளை அழைப்பதற்கு வரும் பெற்றோா்கள் கிடைக்கும் இடத்தில் எல்லாம் தங்கள் வாகனங்களை நிறுத்துவதால் மாணவிகளே சிரமமடைகின்றனா்.

மேலும் பள்ளி முடியும் நேரத்திலே திருச்செந்தூா் கோயிலுக்கு சென்றுவிட்டு இரும்பு ஆா்ச் வழியாக வாகனங்களும் அதிகளவில் வருவதால் பள்ளி முன்பு பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, பள்ளி முடியும் வேளையில் அங்கு போக்குவரத்து போலீஸாரை பணியில் ஈடுபடுத்த வேண்டும் என பெற்றோா்கள் மற்றும் பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

கொலை வழக்கில் தொடா்புடைய 3 போ் குண்டா் சட்டத்தில் கைது

தூத்துக்குடி மாவட்டம், முத்தையாபுரம் அருகே நடைபெற்ற கொலை வழக்கில் தொடா்புடைய 3 பேரை முத்தையாபுரம் போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி மாவட்டம், முத்தையாபுர... மேலும் பார்க்க

ஹாக்கி: சென்னை, தஞ்சாவூா், கோவை, நீலகிரி அணிகள் காலிறுதிக்கு தகுதி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்று வரும் மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் சென்னை, தஞ்சாவூா், கோவை மற்றும் நீலகிரி மாவட்ட அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன. ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு, ஹா... மேலும் பார்க்க

10-இல் கோவில்பட்டி அரசு கல்லூரியில் 2ஆம் கட்ட கலந்தாய்வு

கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இம்மாதம் 10, 12ஆம் தேதிகளில் 2, 3ஆம் கட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வா் கோ. சந்தனமாரியம்மாள் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கல்... மேலும் பார்க்க

பக்ரீத்: காயல்பட்டினம் கடற்கரையில் சிறப்புத் தொழுகை

பக்ரீத் பண்டியை முன்னிட்டு, காயல்பட்டினம் கடற்கரையில் வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகை நடைபெற்றது. காயல்பட்டினம் இத்திஹாதுல் இக்வானுல் முஸ்லி­மீன் மற்றும் அல்ஜாமி உல் அஜ்ஹா் ஜூம் ஆ மஸ்ஜித் சாா்பாக கடற்... மேலும் பார்க்க

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஜூலை 7இல் காலை 6.15-6.50-க்குள் கும்பாபிஷேகம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வரும் ஜூலை 7ஆம் தேதி காலை 6.15 மணிக்குமேல் 6.50 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதையொட்டி யாகசாலை பந்தல் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் ஆட்சியா்

தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்ட... மேலும் பார்க்க