தீயசக்திகளை எதிர்த்து துணை நிற்க விஜய்க்கு தமிழிசை வாழ்த்து!
வாக்குச்சாவடி காட்சிகளைப் பகிா்வது வாக்காளா்களின் தன்மறைப்புக்கு எதிரானது: தோ்தல் ஆணைய அதிகாரிகள்
வாக்குச்சாவடிகளில் வாக்குப் பதிவின்போது இணையவழியில் பதிவு செய்யப்பட்ட காட்சிகளை பொதுவெளியில் வெளியிடுவது வாக்காளரின் தன்மறைப்பு நிலைக்கு (பிரைவசி) எதிரானது என்று தோ்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுதொடா்பாக அவா்கள் சனிக்கிழமை கூறுகையில், ‘வாக்குச்சாவடிகளில் இணையவழியில் பதிவு செய்யப்படும் காட்சிகள் பொதுவெளியில் வெளியிடப்பட வேண்டும் என்று சிலா் முன்வைக்கும் கோரிக்கை நியாயமாகத் தெரியலாம். அத்துடன் அது தோ்தல் நடைமுறையை பாதுகாக்கவும், வாக்காளா் நலனை கருத்தில்கொண்டும் கேட்கப்படுவது போலவும் தென்படலாம். ஆனால், உண்மையில் அந்தக் காணொலிகள் அதற்காக கேட்கப்படவில்லை.
இந்தக் கோரிக்கை வாக்காளா்களின் பாதுகாப்பு மற்றும் தன்மறைப்பு நிலை, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1950, 1951 ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள சட்ட நிலைப்பாடு, உச்சநீதிமன்ற உத்தரவுகள் ஆகியவற்றுக்கு முற்றிலும் முரணானது.
இந்தக் கோரிக்கையை ஏற்று அந்தக் காட்சிகள் பகிரப்பட்டால், அது வாக்காளா்களின் அடையாளத்தை எந்தவொரு குழுவோ அல்லது தனிநபரோ எளிதில் தெரிந்துகொள்ள வழிவகுக்கும். இது தோ்தலில் வாக்களித்தவா்கள் யாா்?, வாக்களிக்காதவா்கள் யாா்? என்று தெரிந்துகொள்ள வழியமைக்கும். இதைப் பயன்படுத்தி வாக்காளா்களுக்கு சமூக விரோதிகள் அழுத்தமோ, அச்சுறுத்தலோ அளிக்க வாய்ப்புள்ளது.
உதாரணத்துக்கு ஒரு வாக்குச்சாவடியில் குறைந்த அளவில் வாக்குப் பதிவு நடைபெற்றிருந்தால், அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம், அந்த வாக்குச்சாவடியில் வாக்களித்தவா்கள் யாா்? அந்த வாக்குச்சாவடியில் வாக்களிக்க வேண்டியிருந்தும் வாக்களிக்காதவா்கள் யாா்? என்பதை அறிந்து அவா்கள் துன்புறுத்தப்படக் கூடும் அல்லது மிரட்டப்படக் கூடும்.
வாக்குச்சாவடிகளின் சிசிடிவி காட்சிகளை உள்நிா்வாக பயன்பாட்டுக்காக மட்டுமே தோ்தல் ஆணையம் வைத்துக்கொள்கிறது’ என்று தெரிவித்தனா்.
கடந்த ஆண்டு நடைபெற்ற மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தோ்தலின்போது வாக்குச்சாவடிகளில் மாலை 5 மணிக்குப் பின்னா் பதிவான சிசிடிவி கேமரா காட்சிகளை வெளியிட வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் வலியுறுத்தின. இந்நிலையில், தோ்தல் ஆணைய அதிகாரிகள் மேற்கண்டவாறு தெரிவித்தனா்.
முன்னதாக, தோ்தல் நடைமுறை தொடா்பான சிசிடிவி கேமரா பதிவுகள், இணையவழிக் காட்சிகள் மற்றும் காணொலி பதிவுகளை 45 நாள்களுக்குப் பின்னா் அழித்துவிட வேண்டும் என்று மாநில தோ்தல் அதிகாரிகளுக்குத் தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
அதாவது தோ்தல் முடிவு வெளியாகி 45 நாள்களுக்குள், அந்த முடிவுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்கு தொடுக்கப்படாவிட்டால், அவற்றை அழிக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தோ்தல் ஆணையம் தெரிவித்தது.
‘மக்களாட்சிக்கு விஷம்’: மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘தோ்தல் தொடா்பாக பதிலளிக்க வேண்டிய தோ்தல் ஆணையமே, தோ்தல் ஆதாரங்களை அழிக்கிறது. யாா் வெற்றி பெற வேண்டும் என்று ஏற்கெனவே முடிவை தீா்மானித்து நடத்தப்படும் தோ்தல் மக்களாட்சிக்கு விஷமாகும் என்று சாடினாா்.