செய்திகள் :

வாக்குத் திருட்டு: “மோடிக்கு தேர்தல் ஆணையம் உதவுகிறதா?” -ராகுல் சுமத்தும் குற்றச்சாட்டு!

post image

பாஜக மீது வாக்குத் திருட்டு குற்றச்சாட்டை சுமத்தியுள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு தேர்தல் ஆணையம் உதவுகிறதா? என்ற கோணத்திலும் குற்றச்சாட்டை சுமத்தியிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பிகார் மாநிலம் முஸாஃபர்பூரில் இன்று(ஆக. 27) நடைபெற்ற ‘வாக்குரிமைப் பேரணியில்’ பேசிய ராகுல் காந்தி: “2023-இல் வாக்குத் திருட்டு விவகாரத்தைக் குறித்து புரிந்து கொண்டதும், அதற்கான ஆதாரம் கிடைக்கப் பெற்றதும், மக்களவையிலும் மாநிலங்களவையிலும் ஒரு புதுச்சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, என்ன நடந்தாலும் சரி, தேர்தல் ஆணையர் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாது என்பதே.

தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட வேண்டுமாயின், இந்தச் சட்டத்துக்கான அவசியம் ஏன் எழுகிறது?

காரணம் ஒன்றே ஒன்றுதான், இவர்கள்(தேர்தல் ஆணையம்) வாக்குத் திருட்டில் பிரதமர் நரேந்திர மோடிக்கு உதவுகிறார்கள்.

வாக்குத் திருட்டு என்பது பிற்படுத்தப்பட்ட பிரிவினர், தலித், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர், சிறுபான்மையினர் மற்றும் இந்தியாவின் ஏழை பொதுப்பிரிவு மக்கள் மீதான தாக்குதலே.

வாக்கு இழக்கப்பட்ட பின், அடுத்ததாக ரேஷன் அட்டையையும் நிலத்தையும் இழக்க நேரிடும்.

நீங்கள், அதாவது உங்களை அவமதிக்கும்போது, உங்களுக்கான வாய்ப்புகள் வழங்கப்படாதபோது, உங்களுக்கு கல்வி வழங்கப்படாதபோது, இந்தியாவில் மீண்டும் சுதந்திரம் அடைவதற்கு முந்தைய காலக்கட்டம் திரும்ப வரக்கூடும்!!” என்றார்.

Rahul Gandhi says, these people (the Election Commission) are helping Narendra Modi in vote theft.

நொய்டா வரதட்சிணை வழக்கில் திருப்பம்: நிக்கியின் குடும்பத்தாரால் மருமகளுக்கு நடந்த கொடுமை!

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டா வரதட்சிணை வழக்கில் புதிய திருப்பமாக, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தாரும் வரதட்சிணை கேட்டு துன்புறுத்தியதாக, அக்குடும்பத்தின் மருமகள் புகார் தெரிவித்துள்ளார்.எரித்துக்க... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீர் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 34 ஆக அதிகரிப்பு!

ஜம்மு - காஷ்மீரில், புனிதத் தலமான வைஷ்ணவ தேவி கோயிலுக்குச் செல்லும் பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானோரது எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. ஜம்மு - காஷ்மீரின் கிஷ்த்வர் மற்றும் தோடா மாவட்டங்க... மேலும் பார்க்க

வரதட்சிணைக்காக மனைவியை எரித்துக் கொன்ற தலைமைக் காவலர் கைது!

உத்தரப் பிரதேசத்தில் வரதட்சிணைக்காக மனைவியை எரித்துக்கொன்ற தலைமைக் காவலர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரின் மனைவி கடுமையான தீக்காயங்களுடன் தில்லியில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: சுதர்ஷன் ரெட்டிக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் முழு ஆதரவு!

குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக எதிர்க்கட்சிகளால் ஒருமனதாக தெரிவு செய்யப்பட்டு போட்டியிடும் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி. சுதர்ஷன் ரெட்டிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(சிபிஐ) முழு ஆதரவளிப்பதாக அ... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தம்!

தொடர் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக ஜம்மு - காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.சாலைகளில் மழை நீர் தேங்குவதால், வெள்ளத்தில் வாகனங்கள் அடித்துச்செல்லப்படும் என்ற அபாயம் உள... மேலும் பார்க்க

பஞ்சாபில் வெள்ளத்தில் சிக்கிய பள்ளிக்கூடம்! 400 மாணவர்களை மீட்க களத்தில் ராணுவம்!

பஞ்சாப் மாநிலத்தில், வெள்ளத்தில் சிக்கிய பள்ளிக்கூடத்தில் இருந்து 400 மாணவர்கள் மற்றும் 40 ஆசிரியர்களை மீட்கும் பணிகளில் இந்திய ராணுவம் உள்ளிட்ட படைகள் ஈடுபட்டு வருகின்றன. குர்தாஸ்பூர் மாவட்டத்தின், த... மேலும் பார்க்க