செய்திகள் :

லட்சுமி மேனனை கைது செய்ய செப். 17 வரை இடைக்காலத் தடை!

post image

கேரளத்தில் ஐடி ஊழியரைக் கடத்தி தாக்கிய விவகாரத்தில், செப்., 17 ஆம் தேதி வரை நடிகை லட்சுமி மேனனை கைது செய்ய இடைக்கால தடை விதித்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள மதுபான விடுதியில் கடந்த 24 ஆம் தேதி லட்சுமி மேனனின் நண்பர்களுக்கும் மற்றொரு ஐடி ஊழியர்கள் அடங்கிய குழுவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், இரு தரப்பினரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, தகராறில் ஈடுபட்ட குழுவில் உள்ள ஐடி ஊழியர் ஒருவரை மதுபானத்திற்கு வெளியே காத்திருந்து காரில் கடத்திச் சென்று லட்சுமி மேனனின் நண்பர்கள் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இந்தக் கடத்திலின்போது நடிகை லட்சுமி மேனனும் நண்பர்களுடன் இருந்ததாகக் கூறப்படுகிறது.

ஐடி ஊழியரின் நண்பர்கள் அளித்த புகாரின்பேரில், லட்சுமி மேனன் மற்றும் அவரின் நண்பர்கள் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. லட்சுமி மேனனின் நண்பர்க்ளான மிதுன், அனீஷ் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளது.

நண்பர்கள் கைதானதைத் தொடர்ந்து லட்சுமி மேனன் தலைமறைவாகியுள்ளார். ஆள் கடத்தல் விவகாரம் தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்த எர்ணாகுளம் காவல் துறையினர் முடிவு செய்து அவரைத் தேடி வருகின்றனர்.

இந்நிலையில், லட்சுமி மேனன் தரப்பில் முன்ஜாமின் கேட்டு கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவின் மீதான விசாரணையில், செப்., 17 ஆம் தேதி வரை நடிகை லட்சுமி மேனனை கைது செய்ய இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிக்க | நடிகரானார் டூரிஸ்ட் ஃபேமலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்!

Kerala High Court grants protection from arrest to actress Lakshmi Menon in abduction case

செப்.17 முதல் வைணவ கோயில்களுக்கு சுற்றுலா: அமைச்சா் ராஜேந்திரன்

தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் புரட்டாசி மாதத்தில் வைணவ கோயில்கள் சுற்றுலா செப்.17-ஆம் தேதி முதல் இயக்கப்படும் என சுற்றுலாத் துறை அமைச்சா் இரா.ராஜேந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அ... மேலும் பார்க்க

தமிழகத்தில் 35,000 விநாயகா் சிலைகள் அமைப்பு: பதற்றமான பகுதிகளில் துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு

விநாயகா் சதுா்த்தியையொட்டி தமிழகம் முழுவதும் ஹிந்து அமைப்புகள் சாா்பில் பொது இடங்களில் 35,000 சிலைகள் புதன்கிழமை அமைக்கப்பட்டன. இந்து முன்னணி, விசுவ ஹிந்து பரிஷத், சிவசேனை, இந்து மக்கள் கட்சி, பாஜக, ... மேலும் பார்க்க

சிறுநீரக முறைகேடு: அங்கீகாரக் குழுவுக்கு நோட்டீஸ்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் முறைகேடாக சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு அனுமதி வழங்கிய விவகாரத்தில் மாவட்ட அங்கீகாரக் குழுவுக்கு மருத்துவக் கல்வி இயக்குநரகம் சாா்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப... மேலும் பார்க்க

வாக்காளா் பட்டியல் மோசடி புகாா்: தோ்தல் ஆணையத்துக்கு எதிராக உயா்நீதிமன்றத்தில் மனு

வாக்காளா் பட்டியல் மோசடி தொடா்பான புகாா்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் விசாரணை குறித்த விவரங்களை வெளியிட தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்ப... மேலும் பார்க்க

கோவை, நீலகிரிக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை: வானிலை மையம்

தமிழகத்தில் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (ஆக. 28,29) கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வ... மேலும் பார்க்க

ஜி.வி.பிலிம்ஸ் நிறுவனத்துக்கு எதிரான சிபிஐ வழக்கு: வங்கி அதிகாரிகளுக்கு தலா 3 ஆண்டுகள் சிறை

போலி ஆவணங்கள் மூலம் ஜி.வி.பிலிம்ஸ் நிறுவனத்துக்கு கடன் வழங்கிய வழக்கில், இரு வங்கி அதிகாரிகள் உள்பட மூவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1.10 லட்சம் அபராதமும் விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்ற... மேலும் பார்க்க