செய்திகள் :

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: சுதர்ஷன் ரெட்டிக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் முழு ஆதரவு!

post image

குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக எதிர்க்கட்சிகளால் ஒருமனதாக தெரிவு செய்யப்பட்டு போட்டியிடும் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி. சுதர்ஷன் ரெட்டிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(சிபிஐ) முழு ஆதரவளிப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலர் டி. ராஜா இன்று (ஆக. 27) தெரிவித்தார்.

அதேபோல, சிபிஐ(மார்க்சிஸ்ட்) கட்சியும் ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலர் எம். ஏ. பேபி தெரிவித்தார்.

சிபிஐ(மார்க்சிஸ்ட்) பொதுச்செயலர் எம். ஏ. பேபிவுடன் பி. சுதர்ஷன் ரெட்டி

முன்னதாக இன்று, தில்லியிலுள்ள கம்யூனிஸ்ட் அலுவலகத்துக்கு ஆதரவு கோரிச் சென்ற பி. சுதர்சன் ரெட்டிக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. அப்போது டி. ராஜா பேசும்போது, “எங்களது கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், நீதிபதி சுதர்சன் ரெட்டிக்கு முழு ஆதரவு தருகிறது.

வலதுசாரி ஃபாசிச சக்திகளால் நாடு கடும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் இந்தக் காலத்தில், அரசமைப்பு தாக்குதலின் கீழ் இருக்கும் இந்தக் காலக்கட்டதில், நமது சமுதாயத்தின் மதச்சார்பற்ற ஜனநாயக நார்கள் தாக்குதலில் இருக்கும்போது... அவர் அரசமைப்பு மாண்புகளை உயர்த்திப்பிடிக்கும் இந்தியாவின் மதிப்புக்குரிய நீதிமான்களில் ஒருவர்.

அவர் எதிர்க்கட்சிகளால் முன்னிறுத்தப்பட்டுள்ள ஜனநாயகத்துக்காகவும் நாட்டின் அரசமைப்புக்காவும் துணை நிற்கும் வேட்பாளர் ஆவார்” என்றார்.

Delhi: Opposition's VP candidate B Sudershan Reddy arrived at the CPI office in Delhi

ஜம்மு - காஷ்மீர் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 34 ஆக அதிகரிப்பு!

ஜம்மு - காஷ்மீரில், புனிதத் தலமான வைஷ்ணவ தேவி கோயிலுக்குச் செல்லும் பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானோரது எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. ஜம்மு - காஷ்மீரின் கிஷ்த்வர் மற்றும் தோடா மாவட்டங்க... மேலும் பார்க்க

வரதட்சிணைக்காக மனைவியை எரித்துக் கொன்ற தலைமைக் காவலர் கைது!

உத்தரப் பிரதேசத்தில் வரதட்சிணைக்காக மனைவியை எரித்துக்கொன்ற தலைமைக் காவலர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரின் மனைவி கடுமையான தீக்காயங்களுடன் தில்லியில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தம்!

தொடர் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக ஜம்மு - காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.சாலைகளில் மழை நீர் தேங்குவதால், வெள்ளத்தில் வாகனங்கள் அடித்துச்செல்லப்படும் என்ற அபாயம் உள... மேலும் பார்க்க

பஞ்சாபில் வெள்ளத்தில் சிக்கிய பள்ளிக்கூடம்! 400 மாணவர்களை மீட்க களத்தில் ராணுவம்!

பஞ்சாப் மாநிலத்தில், வெள்ளத்தில் சிக்கிய பள்ளிக்கூடத்தில் இருந்து 400 மாணவர்கள் மற்றும் 40 ஆசிரியர்களை மீட்கும் பணிகளில் இந்திய ராணுவம் உள்ளிட்ட படைகள் ஈடுபட்டு வருகின்றன. குர்தாஸ்பூர் மாவட்டத்தின், த... மேலும் பார்க்க

மோடியின் தவறான வெளியுறவுக் கொள்கையால் வேலையிழப்பு அதிகரிக்கும்: கார்கே

மோடி அரசின் பலவீனமான வெளியுறவுக் கொள்கையால் அமெரிக்காவின் வரிவிதிப்பு, இந்தியாவில் வேலையிழப்பை ஏற்படுத்தும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்... மேலும் பார்க்க

ஹிமாசலில் தொடரும் கனமழை: கடந்த 3 நாள்களில் அரசுக்கு ரூ.500 கோடிக்கும் மேல் இழப்பு!

ஹிமாசலில் தொடரும் கனமழையால் கடந்த 3 நாள்களில் அரசுக்கு ரூ.500 கோடிக்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.வெள்ளச்சேதம் குறித்து அம்மாநில அமைச்சர் விக்கிரமாதித்ய சிங் தெரிவித்திருப்பதாவது: “ ஹிமாசல பிரதேசத்தி... மேலும் பார்க்க