செய்திகள் :

வாக்குரிமைப் பேரணி: பிகாரிலிருந்து சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்!

post image

தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் பிகாரிலிருந்து சென்னை திரும்பினார்.

பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்புத் திருத்தத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து எதிா்க்கட்சிகள் சாா்பிலான வாக்குரிமை பயணத்தை பிகாரில் ஞாயிற்றுக்கிழமை(ஆக.17) தொடங்கி நடத்தி வருகிறார் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி.

இந்நிலையில் ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ், பிரியங்கா காந்தி உள்ளிட்ட பல முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களுடன் சேர்ந்து இன்று(ஆக. 27) பிகாரின் முஸாஃபர்பூரில் நடைபெற்ற வாக்குரிமைப் பேரணியில் பங்கேற்ற மு. க. ஸ்டாலின் தமது பயணத்தை முடித்துக்கொண்டு இன்று மாலை சென்னை வந்தடைந்தார். அவருடன் திமுக எம்.பி. கனிமொழியும் பிகார் சென்றிருந்தார்.

Tamil Nadu CM MK Stalin returns to Chennai after attending the 'Voter Adhikar Rally' in Bihar's Muzaffarpur.

அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை, 17 மாவட்டங்களில் மழை!

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் பார்க்க

காவலரான விநாயகர்! வேலூரில் வித்தியாசமான விநாயகர் சதுர்த்தி விழா

காவலர்களுக்கு மரியாதை செலுத்தும்வகையில் காவல் நிலையம்போல் வடிவமைத்து காவலர்போல் வேடமிட்ட விநாயகர் சிலை வேலூரில் வைக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் பல விதமான சிலைகளை... மேலும் பார்க்க

ஆர்எஸ்எஸ்ஸை பார்த்துக் கற்றுக்கொண்ட பிறகு விஜய் விமர்சிக்கட்டும்: எல். முருகன்

ஆர்எஸ்எஸ் இயக்கத்தைப் பார்த்துக் கற்றுக்கொண்டு அதன்பிறகு ஆர்எஸ்எஸ்ஸை தவெக தலைவர் விஜய் விமர்சிக்கட்டும் என மத்திய இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்தார்.நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விமரிசையாக கொண... மேலும் பார்க்க

புதுச்சேரியில் 118 கிலோ லட்டுடன் விநாயகர் சதுர்த்தி விழா!

புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடும் வகையில் 118 கிலோ மெகா அளவு லட்டுடன் விநாயகருக்கு படையல் போடப்பட்டது.புதுச்சேரியைச் சேர்ந்தவர் விக்ரம். இவர் 45 அடி சாலை வெங்கடா நகரில் ஜெயின் ஸ்வீட் என... மேலும் பார்க்க

இந்த மிரட்டலுக்கெல்லாம் ராகுல் காந்தி பயப்படுவாரா? - முதல்வர் மு.க. ஸ்டாலின் உரை! முழு விவரம்

ராகுலின் வார்த்தைகளிலும் கண்களிலும் எப்போதும் பயம் இருக்காது என பிகார் வாக்குரிமை பேரணியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார். பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்புத் திருத்தத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து... மேலும் பார்க்க

தவெக மாநாட்டில் சிறப்பான ஏற்பாடுகள்; ஜன. 9 வரை காத்திருங்கள்: பிரேமலதா

தேமுதிக யாருடன் கூட்டணி வைக்கும் என்பது ஜனவரி 9 ஆம் தேதி கடலூரில் நடைபெறும் மாநாட்டில்தான் அறிவிப்போம் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். தேமுதிக திருச்சி மாவட்ட செயலாளர் டிவ... மேலும் பார்க்க