செய்திகள் :

மோடியின் தவறான வெளியுறவுக் கொள்கையால் வேலையிழப்பு அதிகரிக்கும்: கார்கே

post image

மோடி அரசின் பலவீனமான வெளியுறவுக் கொள்கையால் அமெரிக்காவின் வரிவிதிப்பு, இந்தியாவில் வேலையிழப்பை ஏற்படுத்தும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 50% வரி விதிக்கப்படும் என்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் அறிவிப்பு இன்று முதல் (ஆக. 27) நடைமுறைக்கு வந்துள்ளது.

இதனிடையே இந்தியாவின் பலவீனமான வெளியுறவுக் கொள்கையால், அமெரிக்க வரிவிதிப்பானது இந்தியர்களுக்கு வேலையிழப்பை ஏற்படுத்தும் என கார்கே விமர்சித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் கார்கே பதிவிட்டுள்ளதாவது,

''பிரதமர் நரேந்திர மோடி அவர்களே, உங்களுடைய நண்பர் இந்தியாவின் மீது 50% வரி விதித்துள்ளார். இது இன்றுமுதல் அமலுக்கு வருகிறது. இந்த வரிவிதிப்பின் முதல் அதிர்ச்சியாக 10 துறைகளில் 2.17 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்படும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

நமது விவசாயிகள், குறிப்பாக பருத்தி விவசாயிகள், நெசவாளர்கள் மிகக் கடுமையாக இதன் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகளைப் பாதுகாக்க எந்தவொரு தனிப்பட்ட விலையையும் கொடுக்கத் தயாராக இருப்பதாக முன்பு கூறியிருந்தீர்களே. ஆனால், அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க இதுவரை ஒன்றுமே நீங்கள் செய்யவில்லை.

முக்கியமாக சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழிகள், பல்வேறு ஏற்றுமதி துறைகளில் பெரிய எண்ணிக்கையிலான வேலையிழப்பு ஏற்படும். இது வெறும் பனிமலையின் நுனிப்பகுதி மட்டுமே.

இந்திய ஜவுளி ஏற்றுமதி துறையில் கிட்டத்தட்ட 5,00,000 லட்சம் பேர் மறைமுகமாகவோ நேரடியாகவோ வேலையிழக்கும் அபாயம் ஏற்படும்.

இந்த வரிமுறை தொடர்ந்தால், வைரம் மற்றும் நகை விற்பனை துறையில் 150,000 முதல் 200,000 பேர் வேலையிழக்கும் சூழல் உருவாகும்'' என கார்கே பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க | வாக்குகளைத் திருடியே வெற்றி பெறுகிறார் மோடி; ஆதாரத்துடன் வெளிக்காட்டுவோம்! -ராகுல் சவால்

US tariffs result of Modi govt's superficial foreign policy, will lead to huge job losses: Kharge

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: சுதர்ஷன் ரெட்டிக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் முழு ஆதரவு!

குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக எதிர்க்கட்சிகளால் ஒருமனதாக தெரிவு செய்யப்பட்டு போட்டியிடும் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி. சுதர்ஷன் ரெட்டிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(சிபிஐ) முழு ஆதரவளிப்பதாக அ... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தம்!

தொடர் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக ஜம்மு - காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.சாலைகளில் மழை நீர் தேங்குவதால், வெள்ளத்தில் வாகனங்கள் அடித்துச்செல்லப்படும் என்ற அபாயம் உள... மேலும் பார்க்க

பஞ்சாபில் வெள்ளத்தில் சிக்கிய பள்ளிக்கூடம்! 400 மாணவர்களை மீட்க களத்தில் ராணுவம்!

பஞ்சாப் மாநிலத்தில், வெள்ளத்தில் சிக்கிய பள்ளிக்கூடத்தில் இருந்து 400 மாணவர்கள் மற்றும் 40 ஆசிரியர்களை மீட்கும் பணிகளில் இந்திய ராணுவம் உள்ளிட்ட படைகள் ஈடுபட்டு வருகின்றன. குர்தாஸ்பூர் மாவட்டத்தின், த... மேலும் பார்க்க

ஹிமாசலில் தொடரும் கனமழை: கடந்த 3 நாள்களில் அரசுக்கு ரூ.500 கோடிக்கும் மேல் இழப்பு!

ஹிமாசலில் தொடரும் கனமழையால் கடந்த 3 நாள்களில் அரசுக்கு ரூ.500 கோடிக்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.வெள்ளச்சேதம் குறித்து அம்மாநில அமைச்சர் விக்கிரமாதித்ய சிங் தெரிவித்திருப்பதாவது: “ ஹிமாசல பிரதேசத்தி... மேலும் பார்க்க

வாக்குகளைத் திருடியே வெற்றி பெறுகிறார் மோடி; ஆதாரத்துடன் வெளிக்காட்டுவோம்! -ராகுல் சவால்

பாஜக மீது வாக்குத் திருட்டு குற்றச்சாட்டை சுமத்தியுள்ள ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு தேர்தல் ஆணையம் உதவுகிறதா? என்ற கோணத்திலும் குற்றச்சாட்டை சுமத்தியிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம் - சத்தீஸ்கர் எல்லையில்.. 4 நக்சல்கள் சுட்டுக்கொலை!

மகாராஷ்டிரம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களின் எல்லையில், 4 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். சத்தீஸ்கரின் நாரயணப்பூர் மாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ள, மகாராஷ்டிராவின்... மேலும் பார்க்க