செய்திகள் :

வாட்ஸ்ஆப்பில் வருகிறது புதிய வசதி!

post image

வாட்ஸ்ஆப்பில் உள்ள செய்திகளை மொழிபெயர்க்கும் வசதி விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான பயனர்களால் வாட்ஸ்ஆப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வாட்ஸ்ஆப்பிலும் அவ்வப்போது புதுப்புது அப்டேட் வந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில், மேலும் ஒரு புதிய அம்சமாக வாட்ஸ்ஆப் சாட்டில் உள்ள செய்தியை வேறு மொழிகளுக்கு மொழிபெயர்த்து படிக்கும் வசதி அறிமுகமாகவுள்ளது. ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு இது சோதனை முறையில் உள்ளது.

இதன்படி, வாட்ஸ்அப் பயனர்கள் எந்தவொரு செய்தியையும் வேறு பொதுவான மொழிகளில் மொழிபெயர்த்து படித்துக் கொள்ளலாம். அந்த செய்தியின் மீது அழுத்தும்போது 'மொழிபெயர்ப்பு' என்ற ஒரு ஆப்ஷன் வரும். அதை கிளிக் செய்தால் எந்தெந்த மொழிகள் என பட்டியல் வரும். அதில் உங்களுக்கு தேவையான மொழியைத் தேர்வு செய்தால் அந்த செய்தியை மொழிபெயர்த்து தரும். இனி வரும் செய்திகளையும் மொழிபெயர்த்து தர வேண்டுமெனில் அதற்கான ஆப்ஷனும் உள்ளது.

ஆண்ட்ராய்டில் ஆங்கிலம், ஸ்பானிஷ், இந்தி, போர்ச்சுக்கீசு, ரஷிய, அரேபிய மொழி ஆகிய ஆறு மொழிகள் மட்டுமே உள்ளன.

ஐபோன் பயனர்களுக்கு அரபு, டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், இந்தி, இந்தோனேசிய, இத்தாலிய, ஜப்பானிய, கொரியன், மாண்டரின் சீன மொழி, போலிஷ், போர்ச்சுக்கீசு, ரஷிய, ஸ்பானிஷ், தாய், துருக்கி, உக்ரேனிய மற்றும் வியட்நாமிய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்துகொள்ளலாம்.

இதையும் படிக்க | 'கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ விழா: தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு அழைப்பு!

மன்னா் சரபோஜி பிறந்த நாள் விழா: அரசு சார்பில் ஆட்சியர் மரியாதை

மன்னர் சரபோஜியின் 248 ஆவது பிறந்த நாளையொட்டி, அவரது சிலைக்கு அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.தஞ்சாவூரை சோழர்கள், நாயக்கர்கள், மராட்டியர்கள் என பல மன்னர்கள்... மேலும் பார்க்க

இபிஎஸ்ஸுக்கு மக்கள் மீது கவலை இருந்திருந்தால் ஏன் வீட்டில் இருக்கிறார்? : கே.என். நேரு

திருநெல்வேலி: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு மக்கள் மீதான கவலை இருந்திருந்தால் ஏன் வீட்டில் இருக்கிறார் என அமைச்சர் கே.என். நேரு கேள்வி எழுப்பியுள்ளார். திருநெல்வேலியில் பசுமைத் தமிழ்... மேலும் பார்க்க

கலைமாமணி விருது பெறும் சதிராட்டக் கலைஞர் முத்துகண்ணம்மாள்!

விராலிமலை: விராலிமலை சேர்ந்த சதிர் கலைஞரான பத்மஸ்ரீ முத்துகண்ணம்மாள் தமிழக அரசின் கலைமாமணி (பால சரசுவதி) விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.விராலிமலையைச் சேர்ந்த 93 வயதான முத்து கண்ணம்மாள் இசை வேளாள... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு புதன்கிழமை வினாடிக்கு 10,849 கனஅடியில் இருந்து வினாடிக்கு 9, 425 கனஅடியாக சற்று குறைந்துள்ளது.அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர் மின் நிலையங்கள் வழியாக வி... மேலும் பார்க்க

2021, 2022, 2023-ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் அறிவிப்பு: முழுவிவரம்!

2021, 2022 மற்றும் 2023-ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் மற்றும் பாரதியார், எம்.எஸ்.சுப்புலட்சுமி மற்றும் பாலசரசுவதி ஆகியோர் பெயரில் வழங்கப்படும் அகில இந்திய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வ... மேலும் பார்க்க

ரஷிய -உக்ரைன் போர் தொடர இந்தியாவும் சீனாவும்தான் காரணம்: அதிரபர் டிரம்ப்

நியூயார்க்: ரஷியா-உக்ரைன் போர் தொடருவதற்கு இந்தியாவும் சீனாவும்தான் காரணம் என தெரிவித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷியாவின் கச்சா எண்ணெயை இந்த இரு நாடுகளும் அதிகயளவில் வாங்குவதன் மூலம் ரஷியா... மேலும் பார்க்க