செய்திகள் :

`வாரிசில்லாத தம்பதி நிலம்; போலி ஆவணம் மூலம் கிரையம்?' - முன்னாள் பாஜக நிர்வாகி மீது வழக்கு

post image

கரூர் மாவட்டம், நெடுங்கூர் என்.பசுபதிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல். இவரது மனைவி முத்துலட்சுமி. இந்த தம்பதிக்கு குழந்தையில்லை.

இந்நிலையில், தங்கவேலுக்கும், பா.ஜ.க கரூர் மாவட்ட முன்னாள் தலைவர் சிவசாமிக்கும் இடையில் நட்பு இருந்து வந்துள்ளது. அந்த அடிப்படையில், இரண்டு பேரும் சேர்ந்து ரியல் எஸ்டேட் பிஸினஸூம் செய்து வந்துள்ளனர். இதனை மையப்படுத்தி இருவருக்கும் இடையில் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையும் இருந்துள்ளது.

sivasami

இதற்கிடையில், கடந்த 2023 - ம் வருடம் நெடுங்கூரில் உள்ள தங்கவேலுக்குச் சொந்தமான 8.40 ஏக்கர் நிலத்தை சிவகாமி அபகரிக்க நினைத்ததாகச் சொல்லப்படுகிறது.

"அந்த சொத்தை தனதாக்கிக்கொள்ள நினைத்த சிவசாமி, தனது மனைவி நிர்மலா, கரூர் மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியைச் சேர்ந்த சென்னியப்பன், செந்தில்குமார், பூலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த லோகநாதன், ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த சந்திரசேகர் ஆகியோரோடு சேர்ந்து போலியாக ஆவணங்கள் தயாரித்து, போலி கையெழுத்துகள் போட்டு நிலத்தை பத்திரப்பதிவு செய்துகொண்டார்" என்று தங்கவேலின் மனைவி முத்துலட்சுமி கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்தார்.

வழக்கு பதிவு

அதனடிப்படையில், கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார், போலி ஆவணங்கள், கையெழுத்து மூலம் வயதான தம்பதியின் 8.40 ஏக்கர் நிலத்தை பத்திரப்பதிவு செய்து அபகரித்துக்கொண்டதாக, பா.ஜ.க கரூர் மாவட்ட முன்னாள் தலைவர் சிவசாமி உள்ளிட்ட ஆறு பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுபற்றி, தீவிர விசாரணையும் நடத்தி வருகின்றனர்.

வயதான தம்பதியினரை ஏமாற்றி போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை தங்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்துகொண்டதாக, பா.ஜ.க முன்னாள் மாவட்ட நிர்வாகி உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம், கரூர் மாவட்ட அரசியல் வட்டாரத்தில் 'பரபர' பேசுபொருளாகியிருக்கிறது.

'15 ஆண்டுகள்; 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கொலை...' - கர்நாடகா தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவில் வழக்கு

'2003-ம் ஆண்டு, எனது மகள் தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவிலில் காணாமல் போனார். அக்கம் பக்கத்தில் விசாரித்ததில், என்னுடைய மகள் அடையாளம் கொண்ட பெண்ணை கோயில் ஊழியர்கள் தூக்கி சென்றதாக கூறினார்கள். இதை கோயில் நி... மேலும் பார்க்க

சென்னை: `போலீஸ்னு எனத் தெரியாம தப்பு பண்ணிட்டோம்’ - காவலர் கொடுத்த புகாரில் இளைஞர்கள் கைது

சென்னை அண்ணா நகர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் மாரியப்பன். இவர் கடந்த 16.07.2025-ம் தேதி இரவு, அண்ணாநகர் கிழக்கு, 1வது அவென்யூ பகுதியில் உள்ள மதுபான கடை அருகில் ரோந்து பணியில் ஈடுபட்ட... மேலும் பார்க்க

சென்னை: கழிவறைக்குச் சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை - டிரைவர் கைதான பின்னணி

செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த 40 வயதாகும் பெண் ஒருவர், சென்னை, மதுரவாயல் பகுதியில் உள்ள தனியார் கார்டனில் குடும்பத்துடன் தங்கியிருக்கிறார். இவரின் கணவர் அந்தக் கார்டனில் வேலை செய்து வருகிறார். சம்... மேலும் பார்க்க

நாமக்கல்: பல ஆண்டுகளாக நடைபெறும் கிட்னி விற்பனை; தலைமறைவாக உள்ள புரோக்கருக்கு வலை

நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிப்பாளையத்தில் தொழிலாளிகளைப் குறிவைத்து கிட்னி விற்பனை பல ஆண்டுகளாக நடைபெற்று வருவதாக புகார் எழுந்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, பள்ளிப்பாளையம், குமாரபாளைய... மேலும் பார்க்க

திமுக கவுன்சிலர் வீட்டுக்குள் புகுந்து தாக்கிய கும்பல்; திருச்சியில் சாலை மறியல்! - நடந்தது என்ன?

திருச்சி மாநகராட்சி 64-வது வார்டு கவுன்சிலராக, தி.மு.க-வைச் சேர்ந்த மலர்விழி என்பவர் உள்ளார். கழிவுநீர் சாக்கடை அமைப்பது தொடர்பாக வேல்முருகன் என்ற ஒப்பந்ததாரருக்கும், கவுன்சிலர் மலர்விழிக்கும் இடையே ப... மேலும் பார்க்க

சிசிடிவி கேமரா முன்பே ரூ.1.5 லட்சம் லஞ்சம் - சிக்கிய கோவை இந்து சமய அறநிலையத்துறை பெண் அதிகாரி!

கோவை மாவட்டம், சூலூர் அருகே பாப்பம்பட்டி கிராமத்தில் தனியார் பராமரிப்பில் ஒரு கோயில் உள்ளது. அந்தக் கோயிலுக்கு ரூ.40 லட்சம் ஆண்டு வருமானமாக வருகிறது. ஆனால், கோயிலில் முறையான நிர்வாகம் இல்லை என்று புகா... மேலும் பார்க்க