செய்திகள் :

விகடன் இணையதள முடக்கம்: 'அரசியலமைப்புக்கு எதிரான நடவடிக்கை!' - என்.ராம் காட்டம்!

post image
விகடனின் இணைய இதழான விகடன் ப்ளஸ்ஸில் வெளியான கார்ட்டூன் சம்பந்தமாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கொடுத்த புகாரின் பேரில், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் விகடனின் இணையதளம் சில நாள்களுக்கு முன்பு முடக்கப்பட்டது. இந்த முடக்க நடவடிக்கையைக் கண்டித்து சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்திருந்தது. அதில் கலந்துகொண்ட பத்திரிகையாளர் என்.ராம் கருத்துச் சுதந்திரம் சம்பந்தமாக மிக முக்கியமான விஷயங்களைப் பேசியிருந்தார்.
Chennai Press Club

மூத்த பத்திரிகையாளர் என். ராம் பேசியதாவது,

"பிப்ரவரி 10ம் தேதி வெளிவந்த விகடனின் டிஜிட்டல் ஒன்லி விகடன் ப்ளஸ் இதழில் வரையப்பட்டிருந்த கார்ட்டூனை பற்றி அண்ணாமலை போன்றோர் தவறாக கருத்து பரப்பி விட்டனர். விகடனுக்கு நோட்டீஸ் வழங்கப்படவில்லை, அரசு ஆணையையும் வெளியிடவில்லை. வியாழன் அன்று நடக்கும் விசாரணையில் நடப்பதை வைத்து தான் அடுத்து என்ன என்பது தெரியவரும்.‌ ஒருவேளை ஒன்றிய அரசு உறுதியாக இருந்தால் நாம் அடுத்த கட்டத்துக்குச் செல்லவேண்டும். ஆனால் இந்த விவகாரத்தில் அரசு தோல்வியைத்தான் தழுவும் என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும்.

எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது 1987ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆனந்த விகடனில் வந்த ஒரு கார்டூனுக்காக என் நண்பர் பாலசுப்பிரமணியன் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டார். பின்பு வந்த தீர்ப்பில் அவர் பக்கம் தவறில்லை என்று கூறி அவருக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. பாலசுப்பிரமணியன் நஷ்டஈடாக ஒரு ரூபாய் கேட்டார். நீதிமன்றம் 1,000 ரூபாய் கொடுக்க சொல்லி உத்தரவிட்டது. இன்றும் அதை விகடன் அலுவலகத்தில் மாட்டி வைத்திருக்கிறார்கள்.

N.Ram

இன்று விகடனுக்கு நடந்துள்ள சம்பவத்தை அரசு, நீதிமன்றம் என யாராலும் நியாயப்படுத்த முடியாது. இது ஓர் அராஜகமான செயல். மனித உரிமை, அரசியலமைப்புச் சட்டம் என எல்லாவற்றுக்கும் எதிரானது இது. இதைப் பற்றி சென்னை பத்திரிகையாளர் மன்றம் மக்களுக்கு விழிப்புணர்வை எற்படுத்த ஜனநாயகப்பூர்வமாக இந்த ஆர்பாட்டத்தை நடத்தியுள்ளனர்.' எனக் கூறினார்.

``காளியம்மாள் கட்சியிலிருந்து வெளியேற முழு சுதந்திரம் இருக்கிறது" - சீமான் ஓப்பன் டாக்

தமிழ்நாட்டில் இன்று நாம் தமிழர் கட்சி என்று சொன்னால் சீமானுக்கு அடுத்தபடியாக மக்கள் மத்தியில் பரவலாக அறியப்படும் முகங்களில், கட்சியின் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் முக்கியமானவர். இவ்வாறிர... மேலும் பார்க்க

"2026 சட்டமன்றத் தேர்தல் சிரமமாக இருக்கும்..." - திமுகவுக்கு பெ.சண்முகம் கொடுக்கும் மெசேஜ் என்ன?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோவை ராஜவீதி பகுதியில் அகில இந்திய மாநாட்டு நிதியளிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அந்தக் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பேசுகையில், “மத்திய அமைச்ச... மேலும் பார்க்க

NEP: "நீங்கள் வந்து வளர்ப்பீர்கள் எனத் தமிழ் கையேந்தி நிற்கவில்லை" - மத்திய அரசைச் சாடிய முதல்வர்

தமிழக முதல்வர் ஸ்டாலின் இரண்டு நாள் கள ஆய்வுப் பணிக்காக நேற்றும், இன்றும் கடலூர் மாவட்டத்திற்கு வருகை தந்திருக்கிறார். கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேடையில் ரூ.1,476 கோடி... மேலும் பார்க்க

FBI-ன் இயக்குநர்; இந்திய வம்சாவளி; பகவத் கீதை வைத்து பதவிப் பிரமாணம் - யார் இந்த Kash Patel?

அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான FBI-யின் இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேலை (kash-patel) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நியமனம் செய்திருக்கிறார்.அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவ... மேலும் பார்க்க

டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசல் விவகாரம்: "வீடியோக்களை நீக்குக" - எக்ஸ் தளத்துக்கு ரயில்வே நோட்டீஸ்

புது டெல்லி ரயில்வே நிலையத்தில் ஏற்பட்ட நெருக்கடி தொடர்பாக வெளியான 285 வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்க வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சகம் கோரியுள்ளது. எக்ஸ் தளத்தில் இக்கோரிக்கை வைத்து... மேலும் பார்க்க

"என்னைச் சாதாரணமாக நினைக்காதீர்; உத்தவ் அரசையே கவிழ்த்தவன்..." - முற்றும் ஷிண்டே - பட்னாவிஸ் மோதல்!

மகாராஷ்டிராவில் கடந்த நவம்பர் மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு முதல்வர் பதவியிலிருந்து விலக ஏக்நாத் ஷிண்டே மறுத்தார். ஆனால் பா.ஜ.க அவரைக் கட்டாயப்படுத்தி முதல்வர் பதவியிலிருந்து விலகச் செய்த... மேலும் பார்க்க