செய்திகள் :

விகடன் இணையதள முடக்கம்: ``மிகத் தவறான முன்னுதாரணம்'' - மு.குணசேகரன் கண்டனம்

post image

விகடன் இணையதளம் முடக்கப்பட்டது பற்றி கடந்த சனிக்கிழமை மாலையிலிருந்தே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பல்வேறு பகுதிகளிலிருந்தும் வாசகர்கள் விகடனின் தளத்தை பயன்படுத்த முடியாமல் இருப்பதைப் பற்றி சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Vikatan Plus இதழில் வெளியான ஒரு கார்ட்டூன்தான் விகடன் தளத்தின் முடக்கத்துக்கு காரணமாக இருந்தால் அதை கண்டிக்கிறோம் என அரசியல் கட்சிகளும் தங்களின் கண்டன அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். 

இந்த நிலையில், விகடன் இணையதளம் முடக்கப்பட்டதை எதிர்த்து சன் நியூஸ்தொலைக்காட்சியின் எடிட்டர் இன் சீஃப் குணசேகரன் அவர்களின் கண்டனப் பதிவு.

பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிக்கிற ஒரு கேலிச் சித்திரத்துக்காக விகடன் இணைய தளத்தை முடக்கி இருப்பது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. இந்திய தகவல் தொழில்நுட்ப சட்டத்தை பாஜக அரசு அப்பட்டமாக துஷ்பிரயோகம் செய்து, கருத்துச் சுதந்திரத்தின் குரல் வளையை நசுக்கி இருக்கிறது. இந்தியாவின் பாதுகாப்பு, இறையாண்மை, பொதுஅமைதி, அண்டை நாட்டுடனான நல்லுறவுக்கு குந்தகம் ஏற்படும் வகையில் கருத்துகளை வெளியிட்டால், இணையத்தை முடக்குவதற்கு தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 69 ஏ வழிவகை செய்கிறது.

விகடன் வெளியிட்ட கார்ட்டூன், பொது அமைதியை குலைக்கவோ, இறையாண்மை – பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கவோ இல்லை. அமெரிக்காவுடனான நட்புறவு இதனால் கெடவும் இல்லை. சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றுகிறோம் என்ற பெயரில், ஆவணங்களின்றி வசித்து வந்த குடிமக்களை கை, கால்களில் விலங்கு மாட்டி ராணுவ விமானத்தில் அனுப்பும் செயலை, அமெரிக்க ஊடகங்களும் அந்நாட்டு குடிமக்களும் டிரம்பின் ஜனநாயக விரோத, மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்து வருகின்றன.

விகடனின் கார்ட்டூனால் நல்லுறவு கெடுவதற்கு வாய்ப்பே இல்லை. சக இந்திய குடிமக்களை ஈவு இரக்கமின்றி, கை கால்களில் விலங்கிட்டு 40 மணி நேரம் நரகக் குழியில் தள்ளியதை கண்டதால் ஒரு பத்திரிகையாளனுக்கு ஏற்பட்ட அறச்சீற்றம்தான் அந்த கார்ட்டூன். அந்தச் சீற்றம் தேசபக்தி கொண்ட லட்சோப லட்சம் இந்தியர்களின் உணர்வையே அந்த கார்ட்டூன் வெளிப்படுத்தியது.அமெரிக்காவின் தடாலடி நடவடிக்கையை எதிர்த்துக் கேள்வி கேட்க இயலாத நிலையில், அரசியல் ரீதியாக பாஜக அரசின் தோல்வியை மறைக்கவே, ஒரு கேலிச்சித்திரத்துக்காக விகடன் இணையதளத்தை முடக்கி இருக்கிறார்கள்.

vikatanlogo

எந்த விளக்கமும் கோராமல் எடுக்கப்பட்ட நடவடிக்கை இயற்கை நீதிக்கு எதிரானது.பிரதமர் மோடியை விமர்சிக்கும் கேலிச் சித்திரம், இந்திய நாட்டையோ இறையாண்மையையோ கேலிக்கு உள்ளாக்கும் சித்திரம் அல்ல. ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை மிகத் தவறான முன்னுதாரணம். நீதிமன்றத்தில் இந்த நடவடிக்கை நிச்சயம் கேலிக்கு உள்ளாகும். கருத்துச் சுதந்திரம் நிலைநாட்டப்படும்.

- மு.குணசேகரன்

எடிட்டர் இன் சீப்

சன் நியூஸ்

`அரசு பள்ளியில் கழிவறை வசதி இல்லை!' - அவசரத்துக்கு அல்லாடும் மாணவர்கள்... திருவாரூர் அவலம்!

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஒன்றியம், சவளக்காரன் பகுதியில் அமைந்துள்ளது ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளி. 1954 ல் தொடங்கப்பட்ட இப்பள்ளியில் 29 மாணவர்களும் 33 மாணவிகளும் படித்து வருகின்றனர். இதில் பெரும... மேலும் பார்க்க

விஷக் கடியால் உயிரிழந்த சிறுமி; ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள் - என்ன நடந்தது?

தென்காசி மாவட்டம், இந்த சிவகிரி அருகே உள்ள தென்மலையை சேர்ந்தவர் சுப கார்த்திகா (வயது 9). இவர் வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது அவருக்கு காலில் ஏதோ அடிபட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அடிபட்ட இடத்தில... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: கட்டிமுடிக்கப்பட்டும் திறக்கப்படாத நியாயவிலைக் கட்டடம்; சிரமப்படும் மக்கள்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் மாடப்பள்ளி ஊராட்சியில் கடந்த 2021 ஆம் ஆண்டு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 8.59 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. இந்த நியாயவில... மேலும் பார்க்க

செஞ்சி பேருந்து நிலையக் கழிவறையில் கட்டண வசூல்; சுட்டிக்காட்டிய விகடன் -நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்!

செஞ்சி பேரூராட்சியில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டு ஒரு வருட காலமான நிலையில், பொது கழிவறை இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் இருந்தது. இதனால் அலுவலக பணியாளர்கள், ... மேலும் பார்க்க

`விஜய் ஒன்றிய அரசு அனுமதியுடன் பள்ளி நடத்துகிறார்; அண்ணாமலைக்கு சவால் விடுகிறேன்' - உதயநிதி காட்டம்!

'மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி தருவோம்' என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது தமிழ்நாட்டில் பெரும் விவாவதப் பொருளாகியிருக்கிறது.இதையடுத்து இந்தித் திணிப்புக்கு எதிராகவும்... மேலும் பார்க்க

"தமிழ்நாட்டுக்கான 2,152 கோடி ரூபாய் நிதியை விடுவிக்க வேண்டும்!" - மோடிக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், 'தமிழ்நாடு அரசு புதிய கல்விக் கொள்கையை ஏற்க மறுக்கிறது. மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி தருவோம்' என்று பேசியது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.மத்தி... மேலும் பார்க்க