செய்திகள் :

திருப்பத்தூர்: கட்டிமுடிக்கப்பட்டும் திறக்கப்படாத நியாயவிலைக் கட்டடம்; சிரமப்படும் மக்கள்!

post image

திருப்பத்தூர் மாவட்டத்தில் மாடப்பள்ளி ஊராட்சியில் கடந்த 2021 ஆம் ஆண்டு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 8.59 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. இந்த நியாயவிலைக்கடை கட்டி முடிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆகியும், பொது மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. இதனால் பொது மக்கள் நீண்ட தூரம் பயணித்து மடவாளம் பகுதியில் உள்ள சிறிய நியாய விலை கடைக்குச் சென்று பொருட்களை வாங்கி வருவதாகக் குற்றம்சாட்டுகின்றனர். 

மாடப்பள்ளி பகுதியில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்காகப் புதிதாகக் கட்டப்பட்ட நியாய விலைக் கட்டடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வராததால், திருப்பத்தூர் டவுன் பகுதியில் உள்ள மடவாளம் பகுதிக்குச் சென்று அங்கு உள்ள நியாய விலை கடையில் உணவுப் பொருள்களை வாங்க வேண்டிய சூழல் ஏற்படுவதாகக் குற்றம்சாட்டுகின்றனர்.

இது குறித்து நம்மிடம் பேசிய அந்த ஊர் பொது மக்கள், “எங்கள் கிராமத்திற்காக நான்கு வருடங்களுக்கு முன்பு இந்த புதிய நியாய விலை கட்டடம் கட்டப்பட்டது. கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வரும் என்று கூறியிருந்தார்கள். ஆனால் இது வரையில் அந்த புதிய நியாய விலை கடை பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படவில்லை. இது சம்பந்தமாக கூட்டுறவுத்துறை அலுவலகம், வட்டாட்சியர் வரையில் நாங்கள் கோரிக்கை மனு அளித்து இருந்தோம். ஆனால் எந்த வித பயனும் இல்லை. நாங்கள் உணவுப் பொருட்களை வாங்க நெடுந்தூரம் பயணித்து மடவாளம் பகுதியில் உள்ள சிறிய அளவிலான நியாய விலை கடைக்குச் சென்று வர வேண்டி உள்ளது. அத்தியாவசிய பொருட்களை வாங்க நாங்கள் நெடுந்தூரம் பயணிக்க வேண்டி உள்ளது.

எங்கள் ஊரிலேயே ஒரு பெரிய நியாய விலை கடை இருந்தும் நாங்கள் மடவாளம் நியாய விலை கடைக்குச் செல்ல வேண்டி உள்ளது. உடனடியாக எங்கள் பகுதியில் உள்ள நியாய விலை கடையைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும். அப்போது தான் எங்கள் பிரச்னை தீரும்” என்றனர். 

இது குறித்து கூட்டுறவுத்துறை அலுவலர்களிடம் கேட்டபோது, “மாடபள்ளியில் உள்ள நியாய விலைக் கடை சில நிர்வாக காரணங்களுக்காகத் திறக்கப்படாமல் உள்ளது. கூடிய விரைவில் அதனைப் பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர முயற்சிகளை எடுக்கிறோம்” என்று கூறினர்.

மாடபள்ளி ஊராட்சியில் கட்டி முடிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆகியும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வராமல் இருக்கும் நியாய விலை கடையை விரைவில் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும் என்பதே அந்தப் பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. நிறைவேற்றுவார்களா துறை ரீதியான அதிகாரிகள்?

`அரசு பள்ளியில் கழிவறை வசதி இல்லை!' - அவசரத்துக்கு அல்லாடும் மாணவர்கள்... திருவாரூர் அவலம்!

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஒன்றியம், சவளக்காரன் பகுதியில் அமைந்துள்ளது ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளி. 1954 ல் தொடங்கப்பட்ட இப்பள்ளியில் 29 மாணவர்களும் 33 மாணவிகளும் படித்து வருகின்றனர். இதில் பெரும... மேலும் பார்க்க

விஷக் கடியால் உயிரிழந்த சிறுமி; ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள் - என்ன நடந்தது?

தென்காசி மாவட்டம், இந்த சிவகிரி அருகே உள்ள தென்மலையை சேர்ந்தவர் சுப கார்த்திகா (வயது 9). இவர் வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது அவருக்கு காலில் ஏதோ அடிபட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அடிபட்ட இடத்தில... மேலும் பார்க்க

செஞ்சி பேருந்து நிலையக் கழிவறையில் கட்டண வசூல்; சுட்டிக்காட்டிய விகடன் -நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்!

செஞ்சி பேரூராட்சியில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டு ஒரு வருட காலமான நிலையில், பொது கழிவறை இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் இருந்தது. இதனால் அலுவலக பணியாளர்கள், ... மேலும் பார்க்க

`விஜய் ஒன்றிய அரசு அனுமதியுடன் பள்ளி நடத்துகிறார்; அண்ணாமலைக்கு சவால் விடுகிறேன்' - உதயநிதி காட்டம்!

'மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி தருவோம்' என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது தமிழ்நாட்டில் பெரும் விவாவதப் பொருளாகியிருக்கிறது.இதையடுத்து இந்தித் திணிப்புக்கு எதிராகவும்... மேலும் பார்க்க

"தமிழ்நாட்டுக்கான 2,152 கோடி ரூபாய் நிதியை விடுவிக்க வேண்டும்!" - மோடிக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், 'தமிழ்நாடு அரசு புதிய கல்விக் கொள்கையை ஏற்க மறுக்கிறது. மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி தருவோம்' என்று பேசியது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.மத்தி... மேலும் பார்க்க

``லோகோ பைலட் இளநீர், ஹோமியோபதி மருந்துகளைத் தவிர்க்க வேண்டும்" - அதிகாரி அறிவிப்பால் சர்ச்சை!

இந்திய ரயில்வேயின் லோகோ பைலட்டுகள் பணிக்கு வரும்போது ப்ரீதலைசர்கள் மிஷின் மூலம் சோதிக்கப்படுவார்கள். அதனடிப்படையில், கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் பிரிவின் லோகோ பைலட்டுகள் சோதிக்கப்பட்டனர். அப்போது,... மேலும் பார்க்க