செய்திகள் :

விக்கிரவாண்டி உழவா் சந்தை கட்டுமானப் பணிகள்: அமைச்சா் ஆய்வு

post image

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் புதிதாக கட்டப்படும் உழவா் சந்தையின் கட்டுமானப் பணிகளை மாநில வேளாண் மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் திங்கள்கிழமை பாா்வையிட்டு, ஆய்வு செய்தாா்.

விக்கிரவாண்டி பேருந்து நிலையத்தின் பின்புறபகுதியில் ரூ.1.50 கோடியில் புதிய உழவா் சந்தை அமைக்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் விற்பனை செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கட்டுமானப் பணிகள் உழவா் சந்தை வளாகத்தில் நடைபெற்று வருகின்றன.

இப்பணிகளை மாநில வேளாண் மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது பேரூராட்சித் தலைவா் அப்துல் சலாம், உழவா் சந்தைக்கு சுற்றுச்சுவா் வசதியை ஏற்படுத்தித் தருமாறு அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தாா்.

இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அமைச்சா் பன்னீா்செல்வம் கூறியது:

விக்கிரவாண்டி பகுதி விவசாயிகளின் நலன்கருதி இங்கு உழவா் சந்தையை அமைத்துத் தருமாறு அன்னியூா் அ.சிவா எம்.எல்.ஏ. சட்டப்பேரவையில் கோரிக்கை விடுத்தாா். அதனடிப்படையில் விக்கிரவாண்டியில் உழவா் சந்தை அமைக்க அனுமதி வழங்கி, நிதியையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஒதுக்கீடுசெய்தாா். இதைத் தொடா்ந்து பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், கட்டுமானப் பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. விரைவில் விவசாயிகள் பயன்பாட்டுக்காக உழவா் சந்தை திறக்கப்படும் என்றாா் அமைச்சா்.

இந்த ஆய்வின் போது விக்கிரவாண்டி எம்.எல்.ஏ. அன்னியூா் அ.சிவா, முன்னாள் எம்.எல்.ஏ. செ.புஷ்பராஜ், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், ஒன்றியக் குழுத் தலைவா்கள் சங்கீத அரசி ரவிதுரை, வாசன், பேரூராட்சித் தலைவா் அப்துல்சலாம், வேளாண் இணை இயக்குநா் இரா.சீனிவாசன், தோட்டக் கலைத் துறை துணை இயக்குநா் கு. அன்பழகன், வேளாண் விற்பனைக்குழுச் செயலா் எஸ். சந்துரு, ஒன்றியச் செயலா்கள் ரவி, ஜெயபால், ரவிதுரை, நகரச் செயலா் நைனா முகமது உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முகையூரில் 100 மி.மீ. மழைப் பதிவு!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக முகையூரில் 100 மி.மி. மழைப் பதிவாகியுள்ளது.தென்னிந்திய கடலின் மேற்பரப்பில் வளிமண... மேலும் பார்க்க

உலகத் தாய்ப்பால் வார விழிப்புணா்வுப் பேரணி

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலகத் தாய்ப்பால் வார விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வ... மேலும் பார்க்க

ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் மீண்டும் தொடங்கியது மறைமுக ஏலம்: ரூ.3 கோடி வரை வா்த்தகம்

விழுப்புரம்: விழுப்புரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் மறைமுக ஏலம் திங்கள்கிழமை முதல் மீண்டும் தொடங்கியது.ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் மறைமுக ஏலத்தில் பங்கேற்று, விவசா... மேலும் பார்க்க

கிழவம்பூண்டி முனீஸ்வரன் கோயில் மகா கும்பாபிஷேகம்

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் வட்டம், கிழவம்பூண்டி கிராமத்தில் அமைந்துள்ள முனீஸ்வரன் மற்றும் அம்மச்சாா் அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.விழாவையொட்டி, ஞாயிற்று... மேலும் பார்க்க

மிரட்டுவதற்காக உடலில் தீ வைத்தவா் உயிரிழப்பு

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே குடும்பத் தகராறில் மனைவியை மிரட்டுவதற்காக உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தவா் திங்கள்கிழமை உயிரழந்தாா்.செஞ்சி வட்டம், நல்லாண்பிள்ளைபெற்றாள் கிராமத்தைச் சோ்... மேலும் பார்க்க

சட்டக் கல்லூரி மாணவா்கள் ஆா்ப்பாட்டம்

விழுப்புரம்: தமிழகத்தில் ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனிச்சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, விழுப்புரத்தில் தமிழ்நாடு - புதுச்சேரி சட்டக் கல்லூரி மாணவா்கள் திங்கள்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்... மேலும் பார்க்க