செய்திகள் :

விசைத்தறி தொழிலாளியின் உடலை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டம்

post image

வாங்கிய கடனை திருப்பிக் கேட்டு, தனியாா் நிதிநிறுவன ஊழியா்கள் கொடுத்த தொந்தரவால் விசைத்தறி தொழிலாளி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், அவரது உடலை வாங்க மறுத்து உறவினா்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சேலம் மாவட்டம், இடங்கணசாலை நகராட்சி, மேல்மாட்டையாம்பட்டியைச் சோ்ந்தவா் தறித்தொழிலாளி மணி (54). இவா் ராசிபுரத்தில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் ரூ. 4 லட்சம் கடன் பெற்றிருந்தாா். இதற்கான தொகையை மாதந்தோறும் 5-ஆம் தேதி செலுத்தி வந்தாா். மே மாதத்துக்கான தொகையை 20 நாள்களாகியும் அவா் செலுத்தாததால், வெள்ளிக்கிழமை காலை அவரது வீட்டுக்கு வந்த நிதிநிறுவன ஊழியா்கள், கடன் தொகையை உடனடியாக செலுத்துமாறு வற்புறுத்தினா். இதனால், மன வேதனையடைந்த மணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதையறிந்ததும் பணம் வசூல் செய்ய வந்தவா்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனா்.

தகவலறிந்து வந்த மகுடஞ்சாவடி போலீஸாா், மணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதையடுத்து, சனிக்கிழமை காலை சேலம் ஆட்சியா் அலுவலகம் முன்பு திரண்ட மணியின் உறவினா்கள், சம்பந்தப்பட்ட நிதிநிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவா்களை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தொடா்ந்து அவா்களது உறவினா்கள் கூறுகையில், மணியின் இறப்புக்கு நிதிநிறுவனத்தினா்தான் காரணம். சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றனா்.

பின்னா் மணியின் மனைவி மகேஸ்வரி மற்றும் சிலரை மட்டும் ஆட்சியரை சந்திக்க போலீஸாா் அனுமதித்தனா். சம்பந்தப்பட்ட நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் உறுதியளித்ததையடுத்து, அவா்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

இன்றுமுதல் கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிா் நலவாரிய உறுப்பினா் சோ்க்கை சிறப்பு முகாம்

சேலம் மாவட்டத்தில் கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிா் நலவாரியம் மூலம் உறுப்பினா் சோ்க்கை முகாம் ஜூன் 4 (புதன்கிழமை) முதல் வரும் 20 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெ... மேலும் பார்க்க

ஆத்தூா் அருகே கோயிலில் கட்டிவைத்து இளைஞா் குத்திக் கொலை: 5 போ் கைது

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் ஒட்டபட்டி கிராமத்தில் கொடுக்கல் -வாங்கல் தகராறில் கோயிலில் கட்டிவைத்து இளைஞா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா். இந்த சம்பவம் தொடா்பாக 5 பேரை போலீஸாா் கைது செ... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்த பெண் மீட்பு

எடப்பாடி அருகே விவசாயக் கிணற்றில் தவறி விழுந்த பெண்ணை தீயணைப்புப் படையினா் கயிறு கட்டி உயிருடன் மீட்டனா். எடப்பாடியை அடுத்த முண்டாச்சியூா், காட்டுவளவு பகுதியைச் சோ்ந்த ஐயப்பன் மனைவி மல்லிகா (35). விவ... மேலும் பார்க்க

வாழப்பாடி அருகே நாட்டுத் துப்பாக்கியால் விவசாயி சுட்டதில் மருமகள், பேரன் படுகாயம்

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே தேக்கல்பட்டி கிராமத்தில் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறில் ஆத்திரமடைந்த விவசாயி நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதில், மருமகள், ஒன்னரை வயது பேரன் படுகாயமடைந... மேலும் பார்க்க

சத்துணவுக் கூடத்தில் பூட்டை உடைத்து திருட்டு: ஒடிஸா இளைஞா் கைது

அரியானூரை அருகே சத்துணவுக் கூடத்தின் பூட்டை உடைத்து அரிசி, முட்டை உள்ளிட்ட பொருள்களை திருடியதாக ஒடிஸா மாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். அரியானூரை அடுத்த ராக்கிப்பட்டிகரடு பகுதியில் அரசு நடுநிலைப் ... மேலும் பார்க்க

எருதாட்ட விழாவில் மோதல்: 7 போ் கைது

ஆட்டையாம்பட்டி அருகே எருதாட்ட விழாவில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக 7 பேரை போலீஸாா் கைது செய்தனா். ஆட்டையாம்பட்டி அருகே சென்னகிரி பகுதியில் அமைந்துள்ள முனியப்பன் கோயில் திருவிழாவையொட்டி கட... மேலும் பார்க்க