காஸா போர் நிறுத்தம்: அமெரிக்க அதிபரை சந்திக்கிறார் இஸ்ரேல் பிரதமர்!
விஜயபாஸ்கர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக உறுப்பினராக உள்ள சி. விஜயபாஸ்கர் மீது, அதிமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
தில்லி தொழிற்சாலையில் தீ விபத்து!
ஏற்கெனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. இதன் தொடர்ச்சியாக இந்த வழக்கு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஆனால் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா ஆஜராகவில்லை.
இதையடுத்து,வழக்கு விசாரணையை வரும் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, நீதிபதி உத்தரவிட்டார்.