செய்திகள் :

`விஜய்யை அதிமுக கூட்டணிக்கு அழைக்கவில்லை; ஆனால் வந்தால் வரவேற்போம்!'- சொல்கிறார் ராஜேந்திர பாலாஜி

post image

சிவகாசியில் செய்தியாளர்களை சந்தித்த கே.டி ராஜேந்திர பாலாஜி கூறியதாவது, “எடப்பாடி பழனிசாமி கூறும் கருத்துகளை உள்வாங்கிக் கொண்டு அதை செய்தால் இந்த அரசை நாங்கள் பாராட்டுவோம். அதை விடுத்துவிட்டு விளக்கம் கொடுத்துக் கொண்டே இருந்தால் இந்த அரசுக்கு மக்கள் முடிவு கட்டுவார்கள். தீபாவளிக்கு தமிழகத்தில் 750 கோடிக்கு மேல் மது விற்பனை நடைபெற்றுள்ளது, இது தமிழகத்தின் சாபக்கேடு. விஜய் கரூருக்கு சென்றால் மீண்டும் எதும் அசம்பாவிதம் நடந்துவிடக் கூடாது என்பதற்காக அவர் செல்லவில்லை. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 20 லட்சம் ரூபாய் பணம் கொடுத்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்களிடம் வீடியோக்களில் பேசி துக்கம் விசாரித்து விட்டார். கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் நிச்சயமாக விஜய்க்கு தெரிந்து நடந்தது கிடையாது. இதில் ஏற்பட்டுள்ள சதிகள் எல்லாம் விசாரிப்பதற்கு தான் சி.பி.ஐ விசாரணை நடத்தி வருகிறது.

ராஜேந்திர பாலாஜி

கரூரில் உயிரிழந்த 41 குடும்பங்களிடம் மனம் விட்டு பேச வேண்டும் என்பதற்காகத்தான் அவர்கள் குடும்பத்தை நேரில் வரவழைத்துள்ளார். விஜய்க்கு உள்ள மாஸ் ஓட்டாக மாற வேண்டும் என்று சொன்னால் பயிற்சியுள்ள பயிற்சியாளர்கள் தேவை. அந்த பயிற்சியாளர்கள் தான் அ.தி.மு.க-வினர். அ.தி.மு.க கூட்டணிக்கு வந்தால் விஜய்க்கு நல்லது. வரவில்லை என்று சொன்னாலும் அ.தி.மு.க-விற்கு எந்த பாதிப்பும் இல்லை. இந்த முறை நிச்சயமாக அ.தி.மு.க ஆட்சி தான் வரப்போகிறது.

கே.டி. ராஜேந்திர பாலாஜி
கே.டி. ராஜேந்திர பாலாஜி

விஜய் கூட்டணிக்கு வந்தால் 250 சீட்டு அ.தி.மு.க வெற்றி பெறும். வரவில்லை என்றால் 180 சீட் அ.தி.மு.க வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். விஜய் அ.தி.மு.க உடன் கூட்டணிக்கு வருவது அவரது எதிர்காலத்திற்கு, அவரது பாதுகாப்பிற்கு நல்லது. விஜய் நல்ல முடிவு எடுப்பார் என நினைக்கிறேன். ஆனால் நாங்கள் விஜய்யை அழைக்கவில்லை வந்தால் வரவேற்போம். மக்கள் பா.ஜ.க - அ.தி.மு.க விஜய் உள்ளிட்ட கட்சிகள் ஒன்று சேருங்கள் என கிராமத்தில் பேசுகிறார்கள்” என்றார்.

LIC - அதானி குறித்த தி வாஷிங்டன் போஸ்ட் குற்றச்சாட்டு - முழு விவரம்|Explained

'அதானி குழுமத்தில் எல்.ஐ.சி நிறுவனம் முதலீடு...'இது நேற்று காலை அமெரிக்க செய்தி நிறுவனமான 'தி வாஷிங்டன் போஸ்ட்'டில் வெளியான செய்திக் கட்டுரை. இது வெளியான நொடி முதல் இந்தியாவில் பல்வேறு புயல்களையும், ப... மேலும் பார்க்க

5 ஆம்னி பேருந்துகள்; விஜய்யுடன் சந்திப்பு; கரூரில் கிளம்பிய பலியானவர்களின் குடும்பத்தினர்

கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த மாதம் 27-ம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பிரசாரத்தின்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு, 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை வி... மேலும் பார்க்க

'உயர்கல்வியை வணிகமயமாக்கும் மசோதாவை திரும்பப் பெறவேண்டும்' - தமிழ்நாடு அரசுக்கு திருமா அறிக்கை

தமிழ்நாடு அரசின் 'தனியார் பல்கலைக்கழகத் திருத்தச் சட்ட மசோதா'வை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்..."உயர்கல்வியை முற்றிலும் வணிகமயமாக்குவ... மேலும் பார்க்க

'எதற்கு முதல்வர் ஆனோம்? என்பதையே மறந்து, முழுநேர சினிமா விமர்சகராக மாறி..'- ஸ்டாலினை சாடும் பழனிசாமி

தமிழ்நாடு அரசு நெல் கொள்முதல் செய்வது குறித்து விமர்சித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி."நாற்று நட்ட கைகளில், மழையில் நனைந்து முளைத்திருந்த நெல்லைப் பிடி... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் நெல் கொள்முதலில் தாமதமா? - விமர்சனங்களுக்கு தமிழ்நாடு அரசு பதில்

தமிழ்நாடு அரசு நெல் கொள்முதல் குறித்து தொடர்ந்து பல விமர்சனங்கள் எழுந்து வருகிறது.இதற்கு பதிலளிக்கும் விதமாக தமிழ்நாடு அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிக்கையில், "நெல் கொள்முதல் பணிகளை முந்த... மேலும் பார்க்க

LIC-ன்‌ ரூ.32,000 கோடி அதானி குழுமத்தில் முதலீடு செய்ய முயற்சியா?- எல்.ஐ.சி நிறுவனத்தின் பதில் என்ன?

அமெரிக்காவை சேர்ந்த செய்தி நிறுவனமான 'தி வாஷிங்டன் போஸ்ட்' சமீபத்தில் எல்.ஐ.சி நிறுவனத்தின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.குற்றச்சாட்டுஅதாவது, இந்திய அதிகாரிகள் எல்.ஐ.சி நிறுவனத்தின்... மேலும் பார்க்க