செய்திகள் :

'விஜய் எங்கள் வீட்டு பையன்; அதிமுக தந்த கடிதத்தை நாகரிகம் கருதி..!' - கூட்டணி குறித்து பிரேமலதா

post image

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கட்சி நிர்வாகிகளுடன் இன்று (ஜூன் 11) ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், "தேர்தலுக்கான பணிகளை நாங்கள் தொடங்கி இருக்கிறோம்.

கட்சி நிர்வாகிகள், கழகம் மேம்பட எப்படி செயல்பட வேண்டும் என்று கலந்து ஆலோசித்தோம். எல்லா முடிவுகளையும் எடுத்தப் பிறகு நானும், விஜயபிரகாரனும் பிரசாரத்தை மேற்கொள்வோம்.

பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா விஜயகாந்த்

இப்போது கூற முடியாது

நாங்கள் தனித்து போட்டியிடுகிறோமா? அல்லது கூட்டணி வைக்கிறோமோ? என்பதை இப்போது கூற முடியாது.

தனித்து போட்டியிடுவோமா? என்ற கேள்விக்கு காலம்தான் பதில் சொல்லும். நாங்கள் எத்தனையோ தேர்தல்களை, இடைத்தேர்தல்களைத் தனியாகவே களம் கண்டவர்கள். எல்லாவற்றிருக்கும் தயாராக இருக்கிறோம்.

நாகரிகம் கருதி...

மாநிலங்களவை சீட் தருவதாக அதிமுக எழுதி தந்த கடிதத்தை நாகரிகம் கருதி வெளியிடாமல் இருக்கிறோம். தற்போதைக்கு கட்சியின் வளர்ச்சியில்தான் கவனம் செலுத்த உள்ளோம். அதனால் கூட்டணி குறித்து உடனே கருத்து எதுவும் தெரிவிக்க முடியாது. விரைவில் அறிவிப்போம்" என்றிருக்கிறார்.

விஜய் - பிரேமலதா விஜயகாந்த்
விஜய் - பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிகவுடன் தவெக கூட்டணி வைக்குமா? என்ற கேள்விக்கு, "தேமுதிகவுடன் தவெக கூட்டணி வைக்குமா? என விஜயிடம்தான் கேட்க வேண்டும். இன்று அவர் அரசியல் கட்சி ஆரம்பித்து இருக்கலாம். நடிகராவதற்கு முன்பே அவர் எங்கள் வீட்டு பையன். அரசியல் நிலைப்பாடு குறித்து அவரிடம்தான் கேட்க வேண்டும் " என்று பதிலளித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

`மாநில அரசு செய்த கொலை!' - DMK அரசை வெளுத்து வாங்கிய High Court | STALIN | Imperfect Show 1.7.2025

* அஜித்தை கண்மூடித்தனமாகத் தாக்கும் பகீர் வீடியோ! காவல்துறையினரின் அத்துமீறல் அம்பலம்!* திருப்புவனம் லாக்கப் மரணம்: "கால் இடறி கீழே விழுந்ததில், வலிப்பு ஏற்பட்டு மரணம்" - FIR சொல்வது என்ன? * மாநில அரச... மேலும் பார்க்க

"SORRY தான் பதிலா? அலட்சியத்தின் உச்சம்; கொஞ்சம்கூட குற்ற உணர்ச்சியே இல்லை" - ஸ்டாலினை சாடும் இபிஎஸ்

திருப்புவனம் பகுதியில் நகை காணாமல் போன புகாரில், தனிப்படை போலீஸார் விசாரணை என்ற பெயரில் அஜித்குமாரை அடித்துத் துன்புறுத்தியதில் அவர் உயிரிழந்த சம்பவம் கடந்த மூன்று நாள்களாக பரபரப்பை ஏற்படுத்தியிருக்கி... மேலும் பார்க்க

அஜித்குமார் மரணம்: "போலீஸ் தாக்குதல்தான் காரணம் என அறிந்து வேதனையடைந்தேன்; CBI விசாரணை" - ஸ்டாலின்

திருப்புவனம் பகுதியில் நகை காணாமல் போன புகாரில், தனிப்படை போலீஸார் விசாரணை என்ற பெயரில் அஜித்குமாரை அடித்துத் துன்புறுத்தியதில் அவர் உயிரிழந்த சம்பவம் கடந்த மூன்று நாள்களாக பரபரப்பை ஏற்படுத்தியிருக்கி... மேலும் பார்க்க

திருப்புவனம்: "ரொம்ப சாரிமா... நடக்கக் கூடாதது நடந்துவிட்டது" - அஜித்குமார் தாய்க்கு ஸ்டாலின் ஆறுதல்

திருபுவனத்தில் நகை காணாமல் போன புகாரில் அஜித்குமார் என்ற இளைஞரை தனிப்படை போலீஸார் விசாரணை என்ற பெயரில் இரண்டு நாள்களாக அடித்துத் துன்புறுத்தியதில் கடந்த சனிக்கிழமை உயிரிழந்தார்.காவல்துறையின் இந்த எதேச... மேலும் பார்க்க

'பாஜக கூட்டணி இல்லை என்றனர்; இப்போது மிக்சர் சாப்பிடுகின்றனர்' - அதிமுக குறித்து செந்தில் பாலாஜி

திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கோவை கொடிசியா பகுதியில் உள்ள தன் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “நம் முதலமைச்சர் ஆளுமை மிக்க முதலமைச்சராக இருக்கிறார். கோவை ம... மேலும் பார்க்க