முதல் டெஸ்ட்டில் எங்கு தவறு செய்தது இந்திய அணி? அஸ்வின் கூறுவதென்ன?
விடுதி மாணவிகளுக்கு விழிப்புணா்வு
திருப்பத்தூா் மாவட்ட காவல் துறை சாா்பில் புதூா்நாடு பழங்குடியின மாணவிகள் தங்கும் விடுதியில் விழிப்புணா்வு நிகழ்வு நடைபெற்றது (படம்).
நிகழ்ச்சிக்கு சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளா் குமரன் தலைமை வகித்தாா். சிறப்பு உதவி காவல் ஆய்வாளா்கள் ரூபி, கவிதா ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்வில் பெண் கல்வியின் முக்கியத்துவம், பெண் குழந்தைகள் பாதுகாப்பு, சைபா் குற்றங்கள், அந்தக் குற்றங்களில் இருந்து தற்காத்து கொள்ளும் வழிமுறைகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை எவ்வாறு தடுப்பது ஆகியவை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில் சிறப்பான முறையில் கேள்விகளுக்குப் பதில் அளித்த மாணவிகள் சிறப்பிக்கப்பட்டனா். மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களும் வழங்கப்பட்டன.