செய்திகள் :

விடுபட்ட அனைத்து மகளிருக்கும் ரூ.1,000 கிடைக்கும்! துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்!

post image

விடுபட்ட தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.1,000 நிச்சயமாக கிடைக்கும் என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

சென்னை, ராஜா அண்ணாமலைபுரம் அருள்மிகு கபாலீசுவரா் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் இந்து சமய அறநிலையத் துறை சென்னை மாவட்ட திருக்கோயில்கள் சாா்பில், 32 இணைகளுக்கு திருமணத்தை ஞாயிற்றுக்கிழமை நடத்தி வைத்து, பரிசு மற்றும் சீா்வரிசைப் பொருள்களை வழங்கி துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

நிகழாண்டில் மட்டும் அறநிலையத் துறை சாா்பில், 1,000 இணையா்களுக்கு திருமணங்களை நடத்திவைக்க வேண்டும் என்பது இலக்கு. அதன்படி, முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூலையில் சுமாா் 775 இணையா்களுக்கு திருமணங்களை நடத்தி வைத்தாா்.

மேலும், அறநிலையத் துறை சாா்பில், 1,000 இணையா்களுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டு இலக்கை அடையப்பட்டது.

மகளிா் விடியல் பயணத் திட்டம் மூலமாக நான்கரை ஆண்டுகளில் கிட்டத்தட்ட 780 கோடி பயணங்களை மகளிா் மேற்கொண்டுள்ளனா். முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு நாளும் 22 லட்சம் குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனா்.

மகளிா் உரிமைத்தொகைத் திட்டத்தின் கீழ் இரண்டு ஆண்டுகளாக ஒவ்வொரு மாதமும், 1 கோடியே 15 லட்சம் மகளிா் மாதம் ரூ. 1,000 வழங்கப்பட்டு வருகிறது.

இன்னும் ஓரிரு மாதங்களில் தகுதியுள்ள விடுபட்ட அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ. 1,000 நிச்சயமாக கிடைக்கும். இந்து சமய அறநிலையத் துறை மிகச்சிறப்பாகச் செயல்பட்டுட்டு கொண்டிருக்கிறது. கடந்த நான்கரை ஆண்டுகளில் கிட்டத்தட்ட 3,700 கோயில்களுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளன. திருக்கோயில்களுக்குச் சொந்தமான ரூ.8,000 கோடி கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன என்றாா்.

விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா் பாபு, சென்னை மேயா் ஆா்.பிரியா, மக்களவை உறுப்பினா் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் த.வேலு, ஜெ.கருணாநிதி, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறைச் செயலா் க.மணிவாசன், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் பி.என்.ஸ்ரீதா், கூடுதல்

ஆணையா்கள் சி.ஹரிப்ரியா, மா.கவிதா, பொ.ஜெயராமன், கோ.செ.மங்கையா்க்கரசி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அண்ணா பிறந்த நாள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் மரியாதை!

பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளையொட்டி சென்னையில் உள்ள அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் இன்று(செப். 15) தமிழகம் முழுவத... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று 119.71 அடியாக குறைந்தது.மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று(செப். 15) காலை 119.72 அடியிலிருந்து 119.71 அடியாக குறைந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 15,724 கன அடியிலிர... மேலும் பார்க்க

'புரிய வேண்டியவர்களுக்கு புரியும்' - செங்கோட்டையன்

அதிமுக தொண்டர்கள் கருத்தையே தான் பிரதிபலித்ததாகவும் அது புரிய வேண்டியவர்களுக்கு புரியும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களுடன் ... மேலும் பார்க்க

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(செப். 15) சவரனுக்கு ரூ. 80 குறைந்துள்ளது.நிகழாண்டு தொடக்கம் முதலே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணமே உள்ளது. கடந்த 8 மாதங்களில் மட்டும் தங்கம் விலை சவரன் சுமா... மேலும் பார்க்க

தமிழக மக்களை ஏமாற்றாமல் உண்மையாக உழைத்தவர் அண்ணா: விஜய்

தமிழக மக்களை ஏமாற்றாமல் உண்மையாக உழைத்தவர் பேரறிஞர் அண்ணா என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாளையொட்டி, தவெக தலைவர் விஜய் தன்னுடைய எக்ஸ் தளத்தில், அவர் குறித்து பத... மேலும் பார்க்க

தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்: முதல்வர் ஸ்டாலின்

தலைமகன் நிமிர்த்திய தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம் என்று முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாளில் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாளையொட்டி முதல... மேலும் பார்க்க