செய்திகள் :

அண்ணா பிறந்த நாள்: ``குடும்பப் பின்புலமற்ற சாமானியர்களை அரியணை ஏற்றும் திராவிட அரசியல்'' - இ.பி.எஸ்

post image

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி பதிவிட்டிருப்பதாவது,

"தமிழ்நாடு, தமிழ், திராவிடம் என்றால் அண்ணா!

அண்ணா என்றால் தமிழ்நாடு, தமிழ், திராவிடம்!

இந்தியாவில் ஒரு மாநிலக் கட்சி

ஆட்சி அமைக்க முடியுமா?

நாட்டுக்குள் ஒரு தமிழ்-நாடா?

என்று சந்தேக கேள்விகள் கேட்ட காலத்தில்

தன் செயலால், சாதனையால் பதில் சொன்ன தென்னாட்டுத் தென்றல், நம் அண்ணா!

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

அண்ணாவைப் பெயரில் மட்டும் அல்ல- கொள்கையில், செயலில், அரசியல் அறத்தில் 53 ஆண்டுகளாக பெருமையோடு ஏந்தி நிற்கிறது அதிமுக!

குடும்பப் பின்புலமற்ற நம்மைப் போன்ற சாமானியர்களை அரியணை ஏற்றும் திராவிட அரசியலின் ஈடு இணையற்ற தலைமகனான பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் பிறந்தநாளான இன்று,

குடும்ப ஆட்சியின் பிடியில் சிக்கியுள்ள தமிழகத்தை மீட்டு, சாமானிய மக்களுக்கான அண்ணாயிசம் போற்றும் ஆட்சியை அஇஅதிமுக தலைமையில் நிறுவிட உறுதியேற்போம்.

மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம். அண்ணா நாமம் வாழ்க!" என்று தெரிவித்துள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

``விஜய்-காங்கிரஸ் கூட்டணி? அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கும்!'' - காங்., எம்.எல்.ஏ ராஜேஷ்குமார்

`விஜய் காங்கிரஸ் மீது மரியாதை கொண்டவர்'சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., கிள்ளியூர் தொகுதிக்கு உட்பட்ட அடைக்காக்குழியில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு திட்ட முகாமில் கலந்துகொண... மேலும் பார்க்க

``குடியேற்றக் குற்றவாளிகள் மீது மென்மை கிடையாது'' - அமெரிக்காவில் இந்தியர் கொலைக்கு ட்ரம்ப் கண்டனம்

கடந்த வாரம், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், அங்கு வசிக்கும் இந்தியரான சந்திரா நாகமல்லையாவை, குற்றப் பின்னணி கொண்ட மார்டினெஸ் வெட்டிக் கொன்றுள்ளார். இந்தச் சம்பவம் சந்திரா நாகமல்லையாவின் மனைவி மற்... மேலும் பார்க்க

``தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்!'' - அறிஞர் அண்ணா பிறந்த நாளில் ஸ்டாலின் பதிவு

இன்று தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணாவின் பிறந்த நாள். இவரது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது..."தமிழன்னை தந்திட்ட தலைமகன்!... மேலும் பார்க்க

``அதிமுக பற்றி ஒரு வரி கூட விஜய் பேசவில்லை; திமுக குறித்தே பேசுகிறார்'' - எம்.எல்.ஏ செந்தில்குமார்

திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் ஓரணியில் தமிழ்நாடு முப்பெரும் விழா தொடர்பாக திண்டுக்கல் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ. பி. செந்தில்குமார் செய்தியாளர்களை சந்தித்துப் பேசும்போது,"மி... மேலும் பார்க்க