செய்திகள் :

விடுப்பு எடுப்பதில் தகராறு! சக பணியாளர்களை கத்திக்குத்திய அரசு ஊழியர்! (விடியோ)

post image

மேற்கு வங்கத்தில் விடுப்பு தர மறுத்ததால் 4 பேரை கத்தியால் குத்திய அரசு ஊழியரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மேற்கு வங்க மாநிலத்தில் அரசு ஊழியர் ஒருவர் தனது அலுவலகத்தில் விடுப்பு தர மறுத்ததால் சக ஊழியர்கள் 4 பேரை கத்தியால் குத்திய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் அமித் குமார் சர்க்கார் என்ற அந்த ஊழியர் ரத்தக்கறைப் படிந்த கத்தியுடன் தெருவில் நடமாடும் விடியோக் காட்சிகளும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அமித் குமார் கொல்கத்தாவின் நியூ டவுனில் உள்ள கரிகரி பவன் தொழில்நுட்பக் கல்வித்துறையில் பணியாற்றிவந்தார்.

இதுபற்றி காவல்துறையினர் கூறுகையில், “வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம், சோடேபூரில் உள்ள கோலாவைச் சேர்ந்த சர்க்கார், தொழில்நுட்பக் கல்வித் துறையில் பணிபுரிகிறார். இன்று காலை, விடுப்பு எடுப்பது தொடர்பாக தனது சக ஊழியர்களுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, அவர் அவர்களை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓட முயன்றார்.

காயமடைந்த சக ஊழியர்களான ஜெய்தேப் சக்ரவர்த்தி, சாந்தனு சாஹா, சர்தா லேட் மற்றும் ஷேக் சதாபுல் ஆகியோர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது” என்றனர்.

அவருக்கு ஏன் விடுமுறை மறுக்கப்பட்டது அதற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. அமித் குமார் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுவருவதாகவும், சக ஊழியர்களை கத்தியால் குத்தியவக்கு மன ரீதியிலான பாதிப்புகள் ஏதேனும் இருக்கிறதா? என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிய வருமான வரி சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

புதிய வருமான வரி சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த 60 ஆண்டுகளாக இருந்துவந்த பழமையான வருமான வரிச் சட்டத்திற்குப் பதிலாக புதிய வருமான வரி மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை வெள்ளிக்கி... மேலும் பார்க்க

மே 4-ல் இளநிலை நீட் தேர்வு

இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு வரும் மே 4ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அரசு, தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள், சித்த, ஆ... மேலும் பார்க்க

கும்பமேளா: முதலீடே இல்லாமல் நாளொன்றுக்கு ரூ. 4,000 சம்பாதிக்கும் இளைஞர்!

மகா கும்பமேளாவில் முதலீடு செய்யாமல் நாளொன்று ரூ. 4,000 வரை இளைஞர் ஒருவர் சம்பாதித்து வருகிறார்.திருவிழா நடைபெறும் இடங்களில் உணவு, விளையாட்டு பொருள்கள், அலகு சாதனப் பொருள்கள் விற்கும் கடைகள் போட்டு விய... மேலும் பார்க்க

மும்பையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 7 வங்கதேசத்தினர் கைது

மும்பையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 7 வங்கதேசத்தினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாகக் கூறி நான்கு பெண்கள் உள்பட ஏழு வங்கதேசத்தினர் மும்ப... மேலும் பார்க்க

வந்தே பாரத் ரயிலில் புதிய வசதி: ரயில்வே அறிவிப்பு

வந்தே பாரத் ரயிலுக்கான பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் போது உணவைத் தேர்வு செய்யாவிட்டாலும் ரயிலில் ஏறிய பிறகும் உணவு பெறும் சேவை அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக ரயில்வே அறிவித்துள்ளது.வந்தே பாரத் ரயிலில்... மேலும் பார்க்க

500 பயிற்சி ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் இன்ஃபோசிஸ்!

முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ், அதன் மைசூர் வளாகத்தில் பணியாற்றி வரும் சுமார் 500 பயிற்சி ஊழியர்களை பணிநீக்கம் செய்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இவர்கள் அனைவரும் கடந்த 2024ஆம் ஆண்டு அக... மேலும் பார்க்க