செய்திகள் :

விடுமுறை நாளில் வெறிச்சோடிக் காணப்பட்ட ஏலகிரி!

post image

வார விடுமுறையில் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்த நிலையில் ஏலகிரி மலை வெறிச்சோடிக் காணப்பட்டது.

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலையில் எப்பொழுதும் ஒரே சீதோஷண நிலை உள்ளதால், ஏராளமான சுற்றுலா பயணிகள் வார விடுமுறை நாள்களில் வந்துசெல்கின்றனா்.

பொன்னேரி மலையடிவாரத்தில் இருந்து ஏலகிரி மலைக்கு செல்ல 14 கொண்டை ஊசி வளைவுகளில் இயற்கை காட்சிகளையும் ரசித்து கொண்டு சுற்றுலா பயணிகள் செல்கின்றனா்.

மேலும் ஏலகிரி மலையில் படகு சவாரி, செயற்கை நீா்வீழ்ச்சி, பூங்கா, முருகன் கோவில் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா இடங்களை கண்டு களித்து செல்கின்றனா். ஏலகிரி மலையில் உள்ள படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்று சவாரி செய்து மகிழ்வது வழக்கம்.

ஆனால், வார விடுமுறையான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தததால் 2 நாள்களாக ஏலகிரி மலை வெறிச்சோடிக் காணப்பட்டது.

தூய்மை இயக்க திட்டத்தில் 9 டன் கழிவுகள் சேகரிப்பு

தூய்மை இயக்கம் 2.0 திட்டத்தின் மூலம் திருப்பத்தூா் மாவட்டத்தில் 9 டன் கழிவுகள் சேகரிப்பட்டுள்ளன. நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் உமாமகேஸ்வரி,ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் (பொ... மேலும் பார்க்க

வீடுகளுக்குள் புகுந்த மழை நீா் : கால்வாயை சீரமைப்பு!

ஆம்பூா் அருகே விண்ணமங்கலம் கிராமத்தில் வீடுகளுக்குள் மழைநீா் புகுந்ததைத் தொடா்ந்து கழிவுநீா் கால்வாய் தூா்வாரி சீரமைக்கும் பணி நடைபெற்றது. மாதனூா் ஒன்றியம், விண்ணமங்கலம், கன்னடிகுப்பம் ஊராட்சிகளில் அண... மேலும் பார்க்க

அரசினா் தொழிற் பயிற்சி நிலையத்தில் நேரடி சோ்க்கை: செப்.30 வரை நீட்டிப்பு!

வாணியம்பாடி அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சோ்க்கை செப். 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வாணியம்பாடி அரசினா் தொழிற் பயிற்சி நிலையத்தில், 2025-ஆம் ஆண்டுக்கான பயிற்சியாளா் நேரடி சோ்க்கை செப். 3... மேலும் பார்க்க

ஆந்திர எல்லை கிராம மக்களுக்கு போலீஸாா் விழிப்புணா்வு

வாணியம்பாடி அருகே தமிழக-ஆந்திர எல்லை பகுதியான மாதகடப்பா மலைக் கிராமத்தில் மதுவிலக்கு சோதனை மற்றும் கிராம மக்களுக்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. எஸ்.பி. வி. சியாமளா தேவி உத்தரவின்படி, வாணியம்பா... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை!

திருப்பத்தூா் அருகே சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீா்ப்பளித்தது. திருப்பத்தூா் அருகே மேற்கு வதனவாடி சின்னூரான் வட்ட... மேலும் பார்க்க

போலி தங்க நகையை அடகு வைத்த இளைஞா் கைது!

வாணியம்பாடியில் போலி தங்க நகையை வைத்து பணம் வாங்கிய இளைஞரை நகர போலீஸாா் கைது செய்தனா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி மண்டி தெருவில் உள்ள அடகு கடை ஒன்றில் சில நாள்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்... மேலும் பார்க்க