செய்திகள் :

விண்வெளிக்குச் செல்வதற்கு முன் சுபான்ஷு தனது தாயிடம் என்ன சொன்னார் தெரியுமா?

post image

‘ஆக்ஸிம் - 4’ திட்டத்தின்கீழ் புதன்கிழமை விண்வெளிக்கு சென்ற இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா, புறப்படுவதற்கு சில மணிநேரத்துக்கு முன்பு தனது குடும்பத்தினருடன் பேசியுள்ளார்.

அமெரிக்காவில் செயல்படும் மனித விண்வெளிப் பயண சேவைகள் நிறுவனமான ‘ஆக்ஸிம் ஸ்பேஸ்’ நிறுவனத்தின் ‘ஆக்ஸிம் - 4’ திட்டத்தின்கீழ் இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா, அமெரிக்காவைச் சேர்ந்த கமாண்டர் பெக்கி விட்சன், போலந்து வீரா் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி விஸ்னீவ்ஸ்கி, ஹங்கேரி வீரர் திபோர் கபு ஆகியோர் தேர்வாகினர்.

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ‘ஸ்பேக்ஸ் எக்ஸ்’ நிறுவனத்தின் ‘ஃபால்கான் 9’ ராக்கெட் மூலம் கடந்த மே 29 ஆம் தேதியே இவர்கள் விண்வெளிக்கு புறப்பட இருந்தனர். ஆனால், தொழில்நுட்பக் காரணங்களால் பலமுறை இவர்களின் பயணம் தள்ளிப்போன நிலையில், இன்று இந்திய நேரப்படி பகல் 12.01 மணிக்கு புறப்பட்டுச் சென்றது.

தாயிடம் பேசியது...

இந்த நிலையில், விண்வெளிக்கு புறப்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னதாக, தனது தாயிடம் விடியோ அழைப்பு மூலம் சுபான்ஷு பேசியுள்ளார்.

இந்தியாவின் இருக்கும் அவரின் குடும்பத்தினர், பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு திரும்புவதற்காக பூஜைகளை நடத்தியுள்ளனர்.

தொடர்ந்து, விடியோ அழைப்பில் பங்கேற்றிருந்த சுபான்ஷுக்கு அவரது தாயார், தயிர் மற்றும் சர்க்கரையை ஊட்டினார்.

மேலும், தனது குடும்பத்தினருடன் பேசிய சுபான்ஷு, ”எனக்காக காத்திருங்கள், விரைவில் வருகிறேன்” எனக் கூறியதாக ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் அவரது தயார் தெரிவித்தார்.

அவரது சகோதரி கூறியதாவது:

“இது எங்களுக்கு உற்சாகமாக தருணம். மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறோம். விண்வெளிக்கு தயாராகிக் கொண்டிருக்கும்போது அவர் எங்களுடன் சிரித்துக் கொண்டு மகிழ்ச்சியுடன் பேசினார்.

இந்த தருணத்துக்காக அவர் நீண்ட காலம் காத்திருந்தார்” எனத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச விண்வெளி நிலையத்தை நாளை மாலை சென்றடையும் சுபான்ஷு குழுவினர், 14 நாள்களுக்கு பிறகு மீண்டும் பூமிக்கு திரும்புவார்கள்.

இதையும் படிக்க : சுபான்ஷு சுக்லா குழுவுடன் விண்ணில் பாய்ந்தது ஃபால்கன்-9 ராக்கெட்!

அமெரிக்க தாக்குதலின் வெற்றி? அணுசக்தி தளவாடங்கள் பலத்த சேதம்! ஒப்புக்கொண்ட ஈரான்!

அமெரிக்காவின் தாக்குதல்களில் தங்களது அணுசக்தி தளவாடங்கள் பலத்த சேதமடைந்துள்ளதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது.மத்திய கிழக்கில் கடந்த ஜூன் 13 ஆம் தேதி முதல் இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய இருநாடுகளுக்கும் இடை... மேலும் பார்க்க

ஈரான், பாகிஸ்தானில் இருந்து வெளியேறும் ஆப்கன் மக்கள்! 7000 பேர் தாயகம் திரும்பினர்!

ஈரான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில், அகதிகளாக வசித்த சுமார் 7000-க்கும் மேற்பட்ட ஆப்கன் மக்கள் தங்களது தாயகத்துக்கு திரும்பியுள்ளதாக, தலிபான் அரசு தெரிவித்துள்ளது.ஈரான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாட... மேலும் பார்க்க

இஸ்ரேலுடன் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைத் தீவிரம்: ஹமாஸ் அறிவிப்பு!

காஸா மீதான போரை முடிவுக்குக் கொண்டு வர, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் கிளர்ச்சிப்படைக்கு இடையில் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைத் தீவிரமடைந்துள்ளதாக ஹமாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஸாவில் நடைபெற்று வரும... மேலும் பார்க்க

நியூ யார்க் மேயர் தேர்தலில் போட்டியிடும் பிரபல பாலிவுட் இயக்குநரின் மகன்! யார் இவர்?

நியூ யார்க் மேயர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜோஹ்ரான் மம்தானி தேர்வாகியுள்ளார்.இவர், சலாம் பாம்பே, மான்சூன் வெட்டிங் போன்ற படங்களை இயக்கிய இந்திய - அமெரிக்... மேலும் பார்க்க

இஸ்ரேல் உளவாளி மூவருக்கு ஈரானில் மரண தண்டனை!

இஸ்ரேலுக்காக உளவு பார்த்தாகக் குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈரானின் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டங்களால் தமக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கருதி, அந்நாடு மீது... மேலும் பார்க்க

ஈரானின் அணுசக்தி தளத்தை பங்கர் பஸ்டர் குண்டுகள் முழுமையாக அழிக்கவில்லை! - உளவுத்துறை பரபரப்பு தகவல்

ஈரான் அணு ஆயுத தளத்தை அமெரிக்கா அழிக்கவில்லை என உளவுத்துறைத் தகவல்கள் வெளியாகியுள்ளன.மத்திய கிழக்கில் கடந்த 13 ஆம் தேதி தொடங்கிய இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் முடிவுக்கு வந்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப... மேலும் பார்க்க