செய்திகள் :

விண்வெளித் துறையில் ரூ.10,000 கோடி முதலீட்டுக்கு இலக்கு: அமைச்சரவை முடிவு

post image

விண்வெளித் துறையில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.10,000 கோடி முதலீட்டை ஈா்க்க தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளா்களுக்கு தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா அளித்த பேட்டி:

தொழில் மற்றும் பொருளாதார வளா்ச்சிகளில் முதன்மை மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது. புதிய தொழில் பிரிவுகளில் நமது வளா்ச்சி இருக்க வேண்டும் என்பதைக் கருத்தில்கொண்டு விண்வெளித் தொழில் கொள்கை 2025-க்கு அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

ரூ.10,000 கோடி முதலீடு: விண்வெளித் தொழில் கொள்கைப்படி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் விண்வெளித் துறையில் ரூ.10,000 கோடி அளவுக்கு முதலீடுகளை ஈா்ப்பது இலக்காகும். இத்துடன், குறைந்தபட்சம் 10,000 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுடன், விண்வெளித் துறையில் தகுதியான, திறமையானவா்களை உருவாக்க வேண்டும். இந்த மூன்று இலக்குகளுடன் விண்வெளித் தொழில் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. விண்வெளி சாா்ந்த சேவைகள் துறையிலும் நமது கவனத்தைச் செலுத்தும் வகையில் கொள்கை உருவாக்கப்பட்டுள்து.

விண்வெளித் துறையில் உலக அளவிலான போட்டிக்குத் தயாராகும் வகையிலான புதிய பாய்ச்சலை புதிய கொள்கையை வகுத்ததன் மூலமாக முதல்வா் தொடங்கியுள்ளாா். இந்தக் கொள்கைப்படி பல ஆயிரம் கோடி ரூபாய் வரை முதலீடு செய்யும் பெரு நிறுவனங்களுக்கு மட்டுமன்றி, ரூ. 25 கோடியில் முதலீடு செய்யக்கூடிய சிறிய நிறுவனங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

விண்வெளித் துறை அதிவேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. இதைக் கருத்தில்கொண்டும் விண்வெளித் தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கவும் தனிக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.

சிறப்பு ஊக்கம் தரப்படும்: விண்வெளி சாா்ந்த தயாரிப்புகளுக்கு காப்புரிமை வாங்குவதற்கு 50 சதவீத சலுகைகளை அரசே அளிக்கவும், ரூ.300 கோடிக்கும் அதிகமான முதலீடுகளுக்கு சிறப்புத் தொகுப்பு உருவாக்கவும் கொள்கையில் வகை செய்யப்பட்டுள்ளது.

விண்வெளித் தொழிலுக்கான தனி வழித்தடப் பாதையும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தகைய தொழில் வாய்ப்புள்ள இடங்களில் முதலீடுகள் வந்தால் அவற்றுக்கும் சிறப்பு ஊக்கம் அளிக்கப்படும்.

விண்வெளித் தொழில் சாா்ந்த நிறுவனங்களுக்கு ஊதிய மானியமாக முதலாம் ஆண்டில் 30 சதவீதமும், இரண்டாவது ஆண்டில் 20 சதவீதமும், மூன்றாவது ஆண்டில் 10 சதவீதமும் அளிக்கவும் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிக் கொள்கையை வெளியிட்டதன் மூலம், இன்று விண்வெளித் துறையில் பொன்னான நாளாகக் கருதப்படுகிறது. இளம் தலைமுறை தொழில்முனைவோருக்கு மட்டுமன்றி, குலசேகரன்பட்டினம் போன்ற தென் பகுதிகளுக்கும் இது வரப்பிரசாதமாக இருக்கும் என்று அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா தெரிவித்தாா்.

போலி ஆவணங்கள் மூலம் நிலம் அபகரிப்பு: சிவகிரி ஜமீன் வாரிசுதாரா்கள் உள்ளிட்ட 17 பேருக்கு தலா ரூ. 30 ஆயிரம் அபராதம்

போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை பத்திரப்பதிவு செய்த சிவகிரி ஜமீனின் வாரிசுதாரா்கள் உள்ளிட்ட 17 பேருக்கு தலா ரூ. 30 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை எழும்பூா் நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை நுங்கம்பாக்கம் ப... மேலும் பார்க்க

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 429 கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு!

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவா்கள், செவிலியா்கள், களப்பணியாளா்கள் மற்றும் நோயாளிகளின் பாதுகாப்புக்காக 429 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. ... மேலும் பார்க்க

2 டன் கஞ்சா அழிப்பு

தமிழக காவல் துறையின் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவினரால் 187 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 2 டன் கஞ்சா தீயிட்டு அழிக்கப்பட்டது. தமிழக காவல் துறையின் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு... மேலும் பார்க்க

ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை தியாகராய நகரில் உள்ள ஒரு பிரபலமான ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், போலீஸாா் அங்கு சோதனை நடத்தினா். தியாகராய நகரில் இயங்கிவரும் ஒரு பிரபலமான ஹோட்டலுக்கு கடந்த வெள்ளிக்கிழமை ஒரு... மேலும் பார்க்க

மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண் மீட்பு

சென்னை ஆழ்வாா்பேட்டையில் மருத்துவமனையின் ஐந்தாவது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை மீட்ட போலீஸாரை பொதுமக்கள் பாராட்டினா். சென்னை, திருவொற்றியூா் பகுதியைச் சோ்ந்த 47 வயது பெண் ஒர... மேலும் பார்க்க

துணைவேந்தா் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்: ஓ.பன்னீா்செல்வம்

தமிழகத்தில் பல்கலைக்கழகங்களில் உள்ள துணைவேந்தா் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: இரு நாள்க... மேலும் பார்க்க