செய்திகள் :

விண்வெளியில் ஓர் வீரர் உயிரிழந்தால் என்ன நடக்கும்? - நாசாவின் ரூல்ஸ் இதுதான்!

post image

மனிதன் விண்வெளிக்கு பயணம் செய்யத் தொடங்கியது முதல் நிலவு மற்றும் செவ்வாய் கிரகத்திற்குச் செல்லும் திட்டங்கள் வரை விண்வெளிப் பயணங்களுக்கு என சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

ஒருவேளை, விண்வெளிப் பயணத்தின்போது ஒரு வீரர் உயிரிழந்தால், அவரது உடலை என்ன செய்வார்கள் என்பது பலரும் அறியாத ஒரு விஷயமாகும். இதற்கான நெறிமுறைகளை நாசா வகுத்துள்ளது.

நாசாவின் தலைமை மருத்துவ அதிகாரியின் கூற்றுப்படி, விண்வெளியில் ஏற்படும் உயிரிழப்புகளைக் கையாள சில நெறிமுறைகள் உள்ளன. இந்த விதிகள், மரணம் நிகழும் இடத்தைப் பொறுத்து மாறுபடும்.

ஒரு வீரர் நிலவுப் பயணத்தின்போது உயிரிழந்தால், அவரது உடலை பூமிக்குத் திரும்பக் கொண்டு வருவது எளிது. சில நாட்களிலேயே பூமிக்குத் திரும்பிவிட முடியும் என்பதால், உடலை ஒரு பையில் வைத்து பூமிக்குக் கொண்டு வந்துவிடுவார்கள்.

ஆனால் செவ்வாய் கிரகப் பயணம் என்பது பல மாதங்கள் அல்லது ஆண்டுகள் நீடிக்கும் ஒரு நீண்ட பயணம். பயணத்தின் நடுவில் ஒருவர் உயிரிழந்தால், பயணத்தை பாதியில் நிறுத்திவிட்டு பூமிக்குத் திரும்புவது சாத்தியமற்றது.

எனவே அந்த வீரரின் உடலை ஒரு பையில் அல்லது விண்கலத்தின் ஒரு தனி அறையில் வைத்துப் பாதுகாப்பார்கள். விண்கலத்தின் சீரான வெப்பநிலை,ஈரப்பதம், உடலை பூமிக்குத் திரும்பும் வரை பாதுகாக்க உதவும்.

விண்வெளியில் ஒருவரின் உடலை எரிப்பது (Cremation) சாத்தியமில்லை. அதேபோல, நிலவிலோ அல்லது செவ்வாய் கிரகத்திலோ உடலைப் புதைக்கவும் முடியாது. பூமியைச் சேர்ந்த பாக்டீரியாக்கள் மற்றும் நுண்ணுயிரிகள் மற்ற கிரகங்களின் சூழலை மாசுபடுத்தும் அபாயம் இருப்பதால் இது ஒரு உயிரியல் ஆபத்தாகக் கருதப்படுகிறது.

ஒரு வீரரை இழப்பது என்பது சக வீரர்களுக்கு மிகப்பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தும். எனவே உயிரிழந்த வீரரின் உடலைக் கையாள்வதோடு, சக வீரர்களுக்கும் பூமியில் உள்ள அவர்களது குடும்பத்தினருக்கும் உரிய உளவியல் ஆதரவை நாசா வழங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

15 மனைவிகள்; 30 குழந்தைகள்; விமான நிலையத்தையே வியப்படைய வைத்த தென்னாப்பிரிக்க மன்னர்!àà

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி விமான நிலையத்தில் கடந்த ஜுலை மாதம் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி இருக்கிறது. தென் ஆப்பிரிக்காவில் எஸ்வாட்டினி என்ற சிறிய நாடு ஒன்று உள்ளது... மேலும் பார்க்க

300 ஆண்டு பழைமையான ஸ்பானிய கப்பல்; கடலுக்கு அடியில் கிடைத்த ரூ.8 கோடி மதிப்பிலான நாணயங்கள்!

அமெரிக்காவின் ஃபுளோரிடா கடற்கரைக்கு அப்பால், 30 ஆண்டுகள் பழைமையான ஸ்பானிஷ் கப்பல் சிதைவிலிருந்து சுமார் 1 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 8 கோடி) மதிப்புள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட தங்கம் மற்... மேலும் பார்க்க

பிரதமர் மோடியைத் தொடர்ந்து கும்பிட்ட நிதீஷ் குமார்: `அவருக்கு என்ன ஆச்சு?' - எதிர்க்கட்சிகள் கேள்வி

பீகாரில் அடுத்த ஒரு சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடக்க இருக்கிறது. தேர்தல் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் அவசர அவசரமாக நலத்திட்ட உதவிகளை அறிவித்த... மேலும் பார்க்க

இருமல் மருந்து: சிரப் எச்சரிக்கை முதல் மருந்தில்லா தீர்வுகள் வரை மருத்துவர் விளக்கம்

மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் இருமல் மருந்து குடித்த குழந்தைகள், சில நாட்களில் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு இறந்திருப்பது, இந்திய அளவில் பெற்றோர்களின் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கி... மேலும் பார்க்க

அமெரிக்கா: ஆன்லைனில் தாய்ப்பாலை வாங்கி பருகும் பாடி பில்டர்கள் - என்ன காரணம் தெரியுமா?

அமெரிக்காவைச் சேர்ந்த சில தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் குழந்தைகளுக்குப் போக மீதி இருக்கும் பாலை ஆன்லைனில் தளங்களில் விற்று டாலர்களில் சம்பாதித்து வருகின்றனர். தாய்ப்பால் விற்பனை செய்து ஒரே நாளில்... மேலும் பார்க்க

கோன்பனேகா குரோர்பதி: 7 ஆண்டுக்கால முயற்சி; யூடியூப் மூலம் படித்து ரூ.50 லட்சம் வென்ற விவசாயி!

நடிகர் அமிதாப்பச்சன் நடத்தும் கோன்பனேகா குரோர்பதி நிகழ்ச்சி மிகவும் பிரபலம் ஆகும். இந்த நிகழ்ச்சி மூலம் ஏராளமானோர் லட்சாதிபதியாகி இருக்கின்றனர். ஒரு சிலர் மட்டுமே இதில் பங்கெடுத்து கோடீஸ்வரராகி இருக்க... மேலும் பார்க்க